ஞாயிறு, 21 அக்டோபர், 2018

"கழுவி ஊற்றுதல்"

இந்த பதிவை உங்களால் படிக்காமல் கடக்க முடியாது.... ஆனால்.. படித்தவர்கள் எல்லோருமே விருப்பக்குறி விடுவார்களா என்றால்.... நிச்சயமாய் சொல்ல முடியும்.... அதற்கு வாய்ப்பே இல்லை...

ஆம்..... அவர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் எல்லாம் நாகரீகமானவர்கள்.... இப்படி எல்லாம் பேசமாட்டோம்... இந்த செந்தில் கே நடேசனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை... பொது இடத்தில் எப்படி எழுவதென்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத இறுமாப்பு மிக்க முட்டாள்...." என்ற போலி முகமூடி அணிந்து, நல்லது சொல்பவனை குற்றம் சொல்லிக்கொண்டே எல்லாவிதமான ஒழுக்க கேடுகளையும் ரகசியமாய் செய்பவர்கள்....

இந்த பதிவிற்கு ஒரே ஒரு விருப்பக்குறி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை..... ஏனென்றால்... 10-15 விருப்பக்குறி கூட இல்லாவிட்டால் நம் பிரபலத்தன்மை மீது சந்தேகம் வந்துவிடுமோ.. என்ற எந்த விதமான இமேஜ் ஃபிரேமிற்குள்ளும் என்னை நான் அடைத்துக்கொண்டதே இல்லை...

நான் சில ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்டிருந்தேன்.... இந்த சொல்லாடலின் ஆரிஜின் தெரியாமல்.. அதன் முழு உள்ளர்த்தமும் தெரியாமல் பல அப்பாவிகள் இந்த வார்த்தைகளை மிகவும் சாதாரணமாய் உச்சரிக்கிறார்கள்..... என்று...

"கழுவி ஊத்துறது....." என்பதுதான் அது.... இதன் ஆரிஜின் சென்னை பகுதியை சுற்றி உள்ள நாலாந்தர குப்பங்கள்.... மனிதநாகரீகமோ, கல்வி அறிவோ , இங்கிதமோ தெரியாத பெண் தன்மை (குணங்கள்) கொஞ்சம் கூட இல்லாத பெண்கள் தான் இந்த வார்த்தையின் உற்பத்தியாளர்கள்..... யாருடனாவது சண்டை போடும்பொழுது "கூதி கழுவி அவன் மூஞ்சில ஊத்துடி...." " ங்கோத்தா.... கூதி கழுவி மூஞ்சில ஊத்திடுவேன்..." போன்ற வார்த்தைகளால் எதிராளியை அவமானப்படுத்துவார்கள்...




ஆனால்... இந்த "கழுவி ஊற்றுதல்" என்பது மிக சர்வசாதாரண புழக்கத்திற்கு வந்துவிட்ட நல்ல வார்த்தையாகி விட்டிருக்கிறது....

பெற்றோர்கள், அக்கம்பக்கத்தவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை கொண்டே ஒரு குழந்தை பேசக்கற்றுக்கொள்கிறது.... அந்த வார்த்தைகளையே அந்த குழந்தைகளும் பேச ஆரம்பிக்கிறது... ஆகவே குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டை போட கூடாது..... அநாகரீக வார்த்தைகளை உச்சரிக்க கூடாது.. என்றெல்லாம் உளவியல் நிபுணர்களும், குழைந்தைகள் நல ஆலோசகர்களும் கழுதையாய் காத்துக்கொண்டிருக்கிறார்... ஆனால்.. சமூக நகர்வுகளில் அதற்கான வாய்ப்பு மங்கிக்கொண்டே வருகிறது..... நம் குழந்தைகள் முன்பாக நாம் பேசாமல் தவிர்க்கலாம்.. ஆனால்... சமூகத்தின் பல வெளிச்ச விஷயங்கள் இம்மாதிரிதான் சத்தமாக உச்ச்சரித்துக்கொண்டிருக்கிறது..... இந்த வார்த்தைகளை கேட்க விடாமல் நம்மால் குழந்தைகளின் காதுகளை பொத்தி விட முடியாது...

சமீபத்தில் வெளியான "வடசென்னை" என்றொரு திரைப்படத்தில் இம்மாதிரியான வார்த்தைகள் மிக சாதாரணமாய் புழங்ககப்படுகிறது.... கதாநாயகனை பார்த்து "மொக்க கூதி" என்கிறார் கதாநாயகி... "ங்கொம்மால" என்று அடிக்கடி கூவுகிறார்கள் பல கதாபாத்திரங்கள்....

இந்த படங்களை தியேட்டர்களிலோ, டவுன்லோடு செய்தோ பார்த்தே ஆகவேண்டும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டோம் நாம்.... அப்படியே இதை தியேட்டரிலோ, இணையத்திலோ பார்க்காமல் தவிர்த்தாலும்... "உலகத்தொலைக்காட்ச்சிகளில் முதல் முறையாக.." என்று ராகமாய் கூவி அதை திரையிட்டு காட்டக்கூடிய தொல்லைக்காட்சி சேனல்களை நாம் நம் படுக்கை அறை வரை கொண்டு வந்துவிட்டோம்... இனிமேல் தடுக்கவே முடியாது...

எதார்த்தம், சுதந்திரம், இயல்பு, புரட்சி என்று பல சொல்லாடல்களும், வெளிச்சங்களும் சமூக சீரழிவுகளை முன்னெடுத்து அழிவை நோக்கி நம்மை நகர்த்துவதற்கு நாமும் ஆதரவளித்து கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்...

என்ன செய்ய.... என்ன செய்ய.. என்ன செய்ய... கேள்விகள் மட்டுமே நம் போன்ற சாமானியர்களை குடைந்துகொண்டே இருக்கிறது....

சரணம் அய்யப்பா....

எங்கள் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி மேரிமாதா ஆலயம், நாகூர் தர்கா போன்ற கிறிஸ்தவ , இஸ்லாமிய ஆலயங்களுக்கு நிறையபேர் செல்வார்கள்... நானும் கூட சென்றிருக்கிறேன்.... அவர்கள் பிறப்பால் இந்துக்களாக இருந்தாலும், மாரியம்மன், காளியம்மன், முருகன், வீரனார், அய்யனார் என்று இந்துமதத்தின் பல்வேறு கடவுள்களை பக்தியோடு வணங்கினாலும் இந்த வேளாங்கண்ணி மாதாவையும், நாகூர் ஆண்டவரையும் கடவுள்களாக மட்டுமே பார்த்து பழகியவர்கள்.... கடவுள் என்ற பக்தி மட்டுமே நோக்கமாக இருக்கும்பொழுது அங்கே இந்துவோ, இஸ்லாமியமோ, கிறிஸ்தவமோ குறுக்கிடுவதில்லை.... அவர்களை அங்கெல்லாம் யாரும் தடுத்ததும் இல்லை... கேட்டதும் இல்லை....

தற்போது எல்லாவயதிற்குட்பட்ட பெண்களும் ஐயப்பன் கோயிலுக்கு போகலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ரெஹானா, ஃபாத்திமா, எபி , கவிதா கோஷி போன்ற சில பெண்கள் சபரிமலைக்கு கிளம்பி விட்டார்கள்...




இந்த பெயர்களை பார்த்த உடனேயே நமக்கு தெரிந்திருக்கும்.. இவர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்கள் இல்லை... அப்படியானால் இவ்வளவு காலமும் ஐயப்பன் மேல் மிகவும் பக்தியாக இருந்து, தாம் வேறு மதத்தை சேர்ந்தவர்.. நம் அய்யப்பன் பக்தியை வெளியில் காட்டிக்கொண்டால் யாராவது தவறாக நினைப்பார்கள் என்று ரகசியமாய் வைத்திருந்து , ஐயகோ... நான் 30-40 வயதுகளில் இருக்கும் ஒரே காரணத்தால் நம்மால் அய்யப்பனை தரிசிக்க முடியாமல் போய் விட்டதே..... அய்யப்பனை தரிசிக்க இன்னும் 10-20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. என்று ஏங்கி கிடந்து, தற்போது உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை சொன்னதும்..... "அடடா... என் கடவுளை தரிசிக்க..... நான் யாரை பார்க்க முடியுமா என்று ஏங்கிக்கிடந்தேனோ.... அந்த அய்யப்பனை தரிசிக்க உச்சநீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டது..... இனிமேல் மதங்களோ, சட்டங்களோ என்னை தடுக்க முடியாது..... என் தெய்வத்தை தரிசித்தே தீருவேன்.. என்று பக்தி சிரத்தையுடன் வைராக்கியமாக கிளம்பியவர்களா..... என்று யோசித்தால்.... அதற்கான பதில்...... "இல்லை... இல்லவே இல்லை..." என்று மிக சத்தமாய் கேட்கிறது....

அப்படி என்றால்..... இந்த தீர்ப்பு இவர்களை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல எந்த விதத்தில் தூண்டியது.. என்ற அடுத்த கேள்வி வரும்போதுதான்... நம் உளவியல் அறிவு கண் விழித்து, சோம்பல் முறைத்தபடி பதில் சொல்கிறது....

இந்த பெண்கள் ஓரளவு விஷய ஞானம் உள்ளவர்கள்.... பழைய செய்திகளை, நிறைய புரட்சியாளர்களின் வரலாறுகளை படித்து அறிந்தவர்கள்... சமூக நகர்வுகளை மிகத்தெளிவாய் உற்று நோக்குபவர்கள்.. அதன் தாக்கங்களை துல்லியமாய் கணிக்கத்தெரிந்தவர்கள்.... இத்தனை திறமை இருந்தும் என்ன பயன்.... இவர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் யாருக்கும் தெரியவில்லை... ஆகவே அதற்கான வாய்ப்புக்காய் காத்திருந்தவர்கள்...

விபச்சாரிகளை கூப்பிட்டு விருது கொடுத்து பாராட்டும் சமூகத்திடமிருந்து...... குடும்ப உறவுகளை உதறித்தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாக வாழும் பெண்களை மேடையேற்றி சால்வை போர்த்தி கவுரவிக்கும் சமூகத்திடமிருந்து...... இயற்கைக்கு முரணாய், கலாச்சாரத்திற்கு முரணாய்.... பாரம்பரியத்தை சீரழிப்பதாய் செய்யப்படும் செயல்களுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகத்திடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட விஷயம் இதுதான்....

"இங்கே என்ன செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. ஏதாவது ஒரு பழைய விஷயத்தை முரனாக்கி.. அதை மீறினால் நமக்கு சட்ட, தார்மீக பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும்.... நம் மீது ஊடக வெளிச்சம் பாயும்.. நாமும் பலர் அறிந்த பிரபலமாவோம்... நாம் எங்கு சென்றாலும் நம்மை தெரிந்தவர்கள் நம்மை சூழ்ந்து கொள்வார்கள்... வரலாறு நம் பெயரையும் தாங்கி நிற்கும்...."

இந்த அப்ஷர்வேஷனின் வெளிப்பாடே அந்த பெண்களை அய்யப்பன் கோயிலை நோக்கி தள்ளி விட்டிருக்கிறது.... நிச்சயமாய் அய்யப்பன் கோயில் வரலாற்றை எதிர்காலத்தில் எழுதும்பொழுது இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்துவிட்டு எழுதி விட முடியாது.... ஒருவேளை இதற்கு பிறகு எல்லா வயது பெண்களும் சுமூகமாக அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டால்..... "முதலில் ஐயப்பன் கோயிலுக்கு சென்ற "மாதவிடாய் கால வயதுள்ள பெண்கள்" என்று இவர்கள் பெயர்கள் நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
ஒருவேளை தடுக்கப்பட்டால்.... நிச்சயம் இம்மாதிரி செயல்களின் மீது உடனடியாய் பாயும் ஊடக வெளிச்சம் நம் மீதும் பாய்ந்து நாம் இந்திய அளவில் - உலக அளவில் பிரபலமாக, அறியப்பட்டவராக ஆகலாம்....

ஆகவே தான் அவர்கள் இப்படி வம்படியாய் அய்யப்பனை தரிசிக்க கிளம்பி விட்டார்கள்...

இதற்கு இவர்களை மட்டும் குற்றம் சாட்டுவதால் நாம் தப்பித்தது விட முடியாது.. ஏனென்றால்... இந்த பெண்களை குற்றவாளி என்று ஒருவிரலால் நாம் சுட்டிக்காட்டும் பொழுது.... "இம்மாதிரி செயல்களை ஆதரித்த, அப்படி செய்பவர்களை கூட்டம் கூடி வேடிக்கை பார்த்த, அவர்களை மேடையேற்றிய, அவர்களுக்கு விருதுகள் கொடுத்த நம்மை நோக்கி மற்ற மூன்று விரல்களும் நீண்டிருப்பதை நாம் உணர வேண்டும்..

அனுபவங்களே நம் அடுத்த நகர்வுகளை தீர்மானிக்கிறது...

சரணம் அய்யப்பா....

ஆயிர பூஜ


இந்த வார்த்தையின் அர்த்தம் ஆயிரம் முறை பூஜை என்றோ ... ஆயிரம் கோயில்களில் பூஜை என்பதோ அல்ல.... ஆயுத பூஜைதான் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில் "ஆயிர பூஜ" அறிமுகமாயிருந்தது...

பூஜை கொண்டாடப்படும் நாளிலோ, அதற்கு ஒருநாள் முன்னதாகவோ வீடுகளில் இருக்கும் அம்மாவோ, அம்மாச்சியோ, ஆயாவோ... குரல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.... "ஏள்ள (ஏ புள்ள)... இந்த சாமான எல்லாம் வெளில அள்ளிப்போட்டு கழுவு...."




வீட்டில் இருக்கும் படி-மரக்கால் முதல், மாட்டுக்கு கட்டும் சலங்கை, அறுவடை காலத்தில் பயன்படுத்தப்படும் கொக்காலி (வைக்கோல், கடலை கொடி, உளுந்து கொடி போன்றவற்றை கொத்தாக பற்றி அள்ள பயன்படுவது) , உழவாரம் (சமதரையில் படர்ந்திருக்கும் புற்களை செதுக்கி எடுக்க பயன்படுவது) , கருக்கருவாள் (கதிர் அறுக்க பயன்படுவது ) கோடாரி, பாரை, மண்வெட்டி , களவறி (களை எடுக்கவும், பயிர்களின் ஊடே நிலத்தை கீறிவிடவும் பயன்படுவது ) என எல்லா பொருட்களும் குடத்தடிக்கு வரும்... தேங்காய் நாறில் சாம்பல் ஒற்றி எடுத்தது துலக்கி கழுவி காயவைக்கப்பட்டு நடுவீட்டில் சுவரோரமாய் குடியேறும்...

வண்டி, கலப்பை, நுகத்தடி எல்லாம் கழுவி காயவைக்கப்பட்டு பத்தாயத்தில் (நெல் சேகரிப்பு கலன்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்... சில வருடங்கள் மழை தாமதத்தாலோ, ஆற்றுநீர் தாமதத்தாலோ ஆயுத பூஜை நாட்களில் நடவிற்கான உழவு வேலை நடக்கும்.. அந்நேரம் கலப்பை நுகத்தடி மட்டும் பூஜையில் கலந்துகொள்ளாமல் வயலில் தங்கிப்போகும்...

காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலையை அவித்து தாளித்து ஒரு பாத்திரத்தில் இருக்கும்.... பச்சை அரிசியில் வெல்லம் , நிலக்கடலை பருப்பு கலந்து கிண்டி ஒரு பாத்திரத்தில் இருக்கும்.... (சில வீடுகளில் வெல்லப்பாகு செய்து, இந்த பச்சரிசியை திருவையிலிட்டு குருணையாய் உடைத்து , நிலக்கடலை பருப்பை வறுத்து போட்டு பச்சரிசி கிண்டுவார்கள்....)
அவல், அரிசி பொறி, சர்க்கரை, பொட்டுக்கடலை கலந்து ஒரு பாத்திரத்திலிருக்கும்.... எல்லா வருடமும் ஆயுதபூஜைக்கு இந்த மூன்று பதார்த்தங்களும் மாண்டடரி ....

அப்பா எங்கிருந்தோ கொண்டுவந்த நாவல் கொழுந்து, இண்டங்கொழுந்து, அரளிக்கொழுந்து, ஆவாரம் கொழுந்து எல்லாம் பூஜை இடத்தினருகில் வைக்கப்பட்டிருக்கும்.... மாலை சூரியன் மறைந்து இருள் கவியத்தொடங்கும் நேரம் பூஜை தொடங்கும்..... ஒரு கிண்ணத்தில் சந்தனம் கரைக்கப்பட்டிருக்கும்... ஒரு கிண்ணத்தில் குங்குமம்... அம்மா ஊதுபத்தி கொளுத்தி, சாம்பிராணி புகைபோட்டு, வாழைப்பழம், வெற்றிலை-பாக்கு, தேங்காய், பூ (கதம்பம்) அத்துடன் ஒரு சிறிய அளவிலான புத்தகம் ஆகியவற்றை ஒரு தாம்பூலத்தட்டில் வைத்து பூஜைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்க..... வீட்டிற்கு பின்னாலிருந்த பலாமரத்தில் இருந்து ஒடித்துக்கொண்டுவந்த இலைகளை வைத்து அப்பா தொன்னை தைத்துக்கொண்டிருப்பார்... இரண்டு அல்லது மூன்று இலைகளை இணைத்து அழகாக தொன்னை தைப்பார்...

பெரியக்கா கரைத்து வைத்த சந்தன கிண்ணத்தில் இருந்து சந்தனம் எடுத்து எல்லா பொருட்களுக்கும் சந்தன பொட்டு வைக்க... சின்னக்கா அந்த சந்தனப்பொட்டின் மேல் குங்குமம் வைத்துக்கொண்டிருப்பாள்... பத்தாயம், அம்மாவுக்கு சீர்வரிசையாய் வந்த பீரோ, கலப்பை, நுகத்தடி, கூனு, நிலைப்படி, கதவு என எல்லா இடங்களிலும் சந்தன-குங்கும பொட்டு வைத்து முடித்ததும் பூஜை தொடங்கும்...

(வயலில் தங்கிவிட்ட கலப்பை-நுகத்தடிக்கு அப்பா காலையில் சென்று பொட்டு வைத்து பூ சூட்டுவார் )

அப்பா தைத்த தொன்னைகளில் கொண்டக்கடலை, பச்சரிசி, அவல்-பொறி நிறைக்கப்பட்டு சாமிக்கு படையல் வைக்கப்பட்டிருக்கும்...

எல்லா பொருட்களுக்கும் பொட்டுவைத்துவிட்டு அக்காள்கள் பூஜை இடத்திற்கு வந்ததும் அம்மா மறக்காமல் கேட்பாள்...."ஏள்ள... பீரோலுக்கு பொட்டுவச்சியா...."

என்னதான் வீட்டில் ஆயிரம் பொருட்கள் இருந்தாலும், திருமணமாகி எத்தனை ஆண்டுகளானாலும் பெண்களை பொறுத்தவரை பிறந்தவீட்டு சீதனம் மட்டும் எல்லாவற்றிலும் உயர்வானதுதான்...

எங்களின் புத்தகப்பைகள் பூஜையில் முக்கிய இடம் பிடிக்கும்.... ஓரிரு புத்தகங்களுக்கும் கூட சந்தனம்-குங்குமம் வைக்கப்படும்...

இதுவரை சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்த பூஜை... இப்போது லேசாக திணற ஆரம்பிக்கும்... "ஏம்பா.. எல்லோரும் ஒம்பொஸ்தவத்தை எடுத்து ஏதாவது படிங்க...."
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள... சின்னக்கா மட்டும் உஷாராகி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவாள்.... எனக்கும்-பெரியக்காவிற்கும் படிக்கிறதுன்னா பாழுங்கிணத்துல குதிக்கிற மாதிரி ஒரு பயம்....

இரண்டு மூன்றுமுறை சொல்லியும் நானும் பெரியக்காவும் கண்டுகொள்ள மாட்டோம்....

தாம்பூலத்தட்டில் இருக்கும் அந்த சிறிய புத்தகத்தை எடுத்து, அப்பா கணீர் குரலில் ராகமாய் வாசிக்கத்தொடங்குவார்....

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்...

கொஞ்சம் கொஞ்சமாய் அப்பாவின் குரல் உயரும்...

"நாவக்கொழுந்தே.. நாமஷ்ட்டே
இண்டங்கொழுந்தே நாமஷ்ட்டே
அரளிக்கொழுந்தே நாமஷ்ட்டே
ஆவாரங்கொழுந்தே நாமஷ்ட்டே ....."
என்று முடிப்பார்....

அப்பா சொல்லும் நாமஷ்ட்டே என்பதற்கான சரியான உச்சரிப்பை தெரிந்துகொள்ளும்பொழுது அப்பா இறந்து சில வருடங்கள் கழிந்திருந்தது..... "நமஸ்தே" என்பதைத்தான் அப்பா அப்போது ராகமாய் நீட்டி "நாமஷ்ட்டே " என்று உச்சரித்திருக்கிறார்...

அப்பா வாசித்து முடித்ததும் ஆளுக்கு ஒரு தொண்ணையாக எடுத்துக்கொள்வோம்...

இந்த ஆயுதபூஜை சந்தன-குங்கும பொட்டு சில மாதங்களுக்கு பின்னாலும் கூட எப்போதாவது சட்டையில் ஒட்டிக்கொள்ளும்....

ம்ம்ம்.....................

காரில் படிந்திருந்த தூசியை ப்ரெஷால் துடைத்துவிட்டு அலுவலக மடிக்கணினியில் பேஸ்புக்கில் நண்பர்களுக்கும், அலைபேசியில் அக்காள்களுக்கும் வாழ்த்து சொல்லி கழிந்துகொண்டிருக்கிறது என் ஆயுதபூஜை...

இத்தனை பெரிய பதிவு எழுதுவதற்கான அனுபவத்தை கொடுத்தது என் குழந்தைகால ஆயுதபூஜை.... இன்னும் சில- வருடங்கள் கழித்து எழுதுவதற்கு அபிக்கும்-ஆதிக்கும் நான் ஏதாவது நினைவுகளை சேர்த்து வைத்திருக்கிறேனா??? தெரியவில்லை....

ஆர்யா என்கிற பாஷ்யம்

ஆர்யாவை தெரியுமா என்று கேட்டால் நம்மில் அனைவரும் உடனே சொல்வோம்.. "அய்யே... ஆர்யா யாருன்னு கூட தெரியாதா....? அவர் பெரிய ஹீரோ..."

ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யம் என்றால்.... நாம் உடனே பின்வாங்குவோம்... யோசிப்போம்.... நடிகர் ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யாமா... என கூகுள் செய்வோம்...."

தாம் எப்பாடு பட்டாவது தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று மாபெரும் கொள்கையுடன் "தமிழர் நலன்.. தமிழ் தேசியம்.." என்றெல்லாம் உணர்ச்சிகளை தூண்டிவிடும் சமகால தந்திரசாலிகளை தலைவன் என்று போற்றிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஆர்யா என்ற பாஷ்யம் சற்று அந்நியப்பட்ட பெயர்தான்...

1932 ஜனவரி மாதம் 25ம் நாள் அந்த ஆர்யா என்கிற பாஷ்யம் திருவல்லிக்கேணியின் கடைத்தெருவில் துணிக்கடைகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறான்... அவன் கேட்டது..."இங்கே இந்திய தேசியக்கொடி இருக்கிறதா.."

பலர் "இல்லை" என்று சொல்லிவிட்டார்கள்... சிலர் அவர்கள் ரகசியமாய் விற்பனைக்கு வைத்திருந்த சிறிய அளவிலான கொடியை காட்டினார்கள்....

பாஷ்யத்தின் தேவை அந்த சிறிய கொடி அல்ல... அவனின் கற்பனையில் இருந்த கொடியின் அளவில் காலேஅரைக்கால் அளவுகூட இல்லை அவர்கள் காட்டிய கொடி... அவனின் தேவை பெரிய அளவு... மிகப்பெரிய அளவு.... யோசித்தான்....

ஒரு பெரிய நான்கு முழ வேட்டியை வாங்கினான்... வண்ணப்பொடிக்கடையில் காவியும் பச்சையும் நீலமும் வாங்கிக்கொண்டான்.... தம்பு செட்டி தெருவில் தான் தங்கி இருந்த அறைக்கு வந்தான்.... வாங்கி வந்த வேட்டியில் ஒருபக்கம் காவியையும், ஒருபக்கம் பச்சையும் கரைத்து நனைத்து நடுவே நீல ராட்டை வரைந்து ஒரு இந்திய தேசியக்கொடியை உருவாக்கினான்.... அதில்..."இந்தியா இன்றுமுதல் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது.." என்று எழுதினான்....அதை காயவைத்து மடித்து இடுப்பில் சுற்றிக்கொண்டான்... மேலே காக்கி அரைடவுசரும், காக்கி சட்டையும் அணிந்துகொண்டான்..

மீண்டும் திருவல்லிக்கேணி வந்தான்.... சுப்ரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபால சந்தித்தான்... "நான் எங்கு போனாலும் என் பின்னே தூரமாக தொடர்ந்து வா" என கட்டளையிட்டான்...

இருவருமாக மவுண்ட் ரோடில் இருந்த எல்பின்ஸ்டன் தியேட்டருக்குள் நுழைவுச்சீட்டு வாங்கி நுழைந்தார்கள்.. இரவு 12 மணி.. படம் முடிந்து அனைவரும் வெளியேற.... செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவல் பணிமுடிந்து பொழுதுபோக்க சினிமா பார்க்க வந்து வெளியேறியவர்களுடன் கலந்தான்... அதற்காகத்தான் அந்த காக்கி சீருடை தயார் நிலை...

காக்கி சீருடையில் கூட்டத்தில் கலந்து நுழைந்ததால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இவனை யாரும் கண்டுகொண்டு தடுக்கவில்லை...

காவலர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்க... இவன் மட்டும் ரகசியமாய் பிரிந்து, கோட்டையின் கொடிமரம் நோக்கி நடந்தான்... 200 அடி உயர கொடிமரத்தில் 140 அடி ஏறிவிட்டான்.... அந்த அளவுவரைதான் கால் வைத்து ஏறும் வசதி இருந்தது.. அதற்கும் மேலே 60 அடி உயரம் வெறும் இரும்புக்குழாய் அமைப்புதான்.... மனதில் எரிந்த சுதந்திர வேட்கை , அந்த இரும்புக்குழாயை இறுகப்பற்றும் உறுதியை தந்தது அவனுக்கு...

அடி அடியாய் ஏறி 60 அடியையும் கடந்து உச்சியை அடைகிறான்... ஒரு உடும்பை போல தன்னை குழாய்களில் பிணைத்து இறுக்கிக்கொண்டு , தன இடுப்பில் இருந்த இந்திய தேசியக்கொடியை உதறி அந்த கம்பத்தில் கட்டுகிறான்...



சறுக்கியபடி கீழிறங்கி நழுவி. மீண்டும் தம்புச்செட்டித்தெருவை அடைகிறான்... மறுநாள் காலை ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டை அலுவலக அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது...... எல்லா உயரதிகாரிகளும் கோட்டை கொடிமரத்தின் அருகே குழுமுகிறார்கள்...

"யார்.. யார்.... "
கேள்விகள் அவர்கள் புருவங்களை உயர்த்த.. ஆத்திரம் அவர்களின் கண்களை சிவக்க வைக்க... கொடிமரத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது... அந்த திகாரிகள் கூட்டம்.... அதுவே அந்த தேசியக்கொடிக்கு அவர்கள் மரியாதை கொடுப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தந்தது...

எதுவுமே தெரியாதது போல தம்புச்செட்டித்தெருவில் தனியாளாய் நடந்துகொண்டிருந்தன பாஷ்யம் என்ற ஆர்யா...

அதே 1932ம் வருடம் ஜனவரி 26ம் தேதியை நாம் சுதந்திரதினமாக கொண்டாடவேண்டும்.. என்று ஜவஹர்லால் நேரு விடுத்திருந்த அறைகூவலை செயலாக்கவே பாஷ்யம் கோட்டையில் கொடி ஏற்றினான்... இதை செய்தபோது அவனுக்கு வயது 25.

தற்போதைய திருவாரூர் மாவட்டம்.. அந்நாளைய தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் இருக்கும் சேரன் குளம் தான் அந்த ஆர்யா என்கிற பாஷ்யத்தின் சொந்த ஊர்...

இவன் ஒரு பார்ப்பனன் என்பதை இந்நேரம் கண்டுபிடித்திருந்தால்... நீங்கள் ஒரு சமகால சமூகநீதி காவலன் என்பதை சொல்லவே வேண்டாம்...

சீமானும், திருமுருகன் காந்தியும் பிரித்துக்கொண்டுபோக தமிழ்நாடு ஒன்றும் இவர்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல....... இந்தியாவை உருவாக்கியது நாம்.... தேசியத்தமிழ் என்று சொல்லிப்பழகுவோம்......... இந்த தந்திர நரிகளின் தலைமை ஆசைக்கு பலிக்கடாவாகி தமிழ் தேசியம் என்று சீரழிய வேண்டாம்...

டெல்லியோ, மும்பையோ, கொல்கத்தாவோ.... சுதந்திர ஒப்பந்தம் கையெழுத்தானப்பிறகுதான் அங்கிருந்த கோட்டைகளில் தேசியக்கொடி பறந்தது.... ஆனால்... சுதந்திரம் வாங்குவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி அழகுபார்த்தவர்கள் நாம்

யாரோ சிலரின் நாற்காலி ஆசைக்கு எம் தேசத்தை கூறுபோட அனுமதிப்பதா...??

பொருளாதார தேடலில் எங்கள் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த "திரைகடலோடி திரவியம் தேட" நாங்கள் பூமிப்பந்தில் ஏதோ ஒரு மூலையில் நிலைகொண்டிருக்கலாம்... இந்தியா என் தேசம்.... என்ற நினைவுகள் நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொண்டுதான் நாங்கள் விமானமேறி இருக்கிறோம்....

வாழ்க இந்தியா....!!!

வியாழன், 20 செப்டம்பர், 2018

அந்நியமாகும் தாய்-தந்தை வாசனை

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பிரத்யோகமாக வாசனை உண்டு... அதை வியர்வை வாசனை என்றோ.. உழைப்பின் வாசனை என்றோ.. எதோ ஒரு பெயரில் சொல்லிக்கொள்ளலாம்....

பெண்களின் அக்குளில் இருந்து வரும் வாசனைக்கு ஆண்களின் பாலியல் ஹார்மோன்களை சுரக்க செய்யும் தன்மை உண்டு என்கிறது மருத்துவ விஞ்ஞானம்... காமம் ஆர்ப்பாட்டமாய் கிளர்த்தெழும் பதின் பருவ வயதை கடந்து... அது நிதானமடைந்து கரம்பற்றி மெல்ல நடைபோடும் காலத்தில் பாலியல் கூடலுக்கு இந்த வாசனை மிகவும் முக்கியம் என்றும் இந்த உடல்வாசனை ஒப்பாத தம்பதிகளால் கூடலில் ஈடுபாடுகொள்ள முடியாது என்றும் சொல்கிறது உளவியல் விஞ்ஞானம்...

மேற்பாரா ஒரு இடைச்செறுகள்தானே அன்றி.. பதிவு இதைப்பற்றியதில்லை...

அப்படி மனிதர்களுக்கான பிரத்யோக வாசனை பற்றி யோசிக்கையில்.. ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை-தாயின் வாசனை மனதில் பதிந்த ஒன்று.. இருபதாம் நூற்றாண்டு குழந்தைகளுக்கு இந்த வாசனை அநேகம் சாத்தியப்பட்டது... வெளியூர் பயணம் செல்ல வேண்டும் என்றால்.. குறைந்த தூரமாக இருந்தால் கால் நடையாகவும், சற்றே தூரப்பயணம் என்றால் மரச்சக்கர மாட்டு வண்டியும் கட்டி பயணப்படும் விவசாய கிராம பின்னணி கொண்ட எனக்கும் அப்படித்தான்....

எல்லா ஆண் குழந்தைகளை போலவே எனக்கும் அப்பாவுடன் அதிக நெருக்கமில்லை என்றாலும்... எப்போதாவது பயணப்படும் வெளியூர் பயணங்களில் நடக்க முடியாமல் தவிக்கும் பொழுது என்னை தூக்கிக்கொண்டு நடக்கும் அப்பாவின் வாசனை இன்றும் என்னுள் பசுமையாயிருக்கிறது.... அருகில் இருந்து சாப்பிடும் போதோ... சைக்கிளில் பின் அமர்ந்து எங்காவது பயணப்படும்போதோ நுகந்த வாசனை இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை... அப்பா-அம்மாவை உணர்வதில் இந்த வாசனையின் பங்கு அளப்பரியது... அப்பா மரணித்து பத்தாண்டுகள் கழிந்துவிட்ட பிற்பாடும்.... நான் நாற்பதுகளின் தொடக்கத்தில் நுழைந்திருந்தாலும்.. என்றோ உணர்ந்த அப்பா வாசனை அப்படியேதான் இருக்கிறது...

அப்பாவிற்கு இருந்ததை போல எனக்கும் ஒரு வாசனை இருக்கும் தானே?? ஆனால்... எல்லா இருபத்தோராம் நூற்றாண்டு குழந்தைகளை போலவே.. என் மகனும் என் வாசனை அறியாதவனாய் தான் வளர்கிறான்....

அவனை பொறுத்தவரை அப்பாவின் வாசனை என்பது ராயல் மிரேஜ் லாவண்டர் வாசனையாகவோ, மோண்ட் ப்ளாங் இண்டிஜுவல் வாசனையாகவோ தான் இருக்கிறது.... அப்பா நெருக்கம் அன்னியப்பட்டு போயிருக்கிறது...

முதியோர் இல்லங்கள் பெருக இதுமாதிரியான "அன்னிய"த்தன்மையும் காரணமாயிருக்குமோ???

அள்ளிக்கொண்டு போகும் அரசு ஊழியர்கள்

இப்போ தான் எங்க பக்கம் எங்கிட்டு திரும்பினாலும் தென்னந்தோப்பு..... 30-35 வருஷம் முன்ன எல்லாம் யாரோ ஒருத்தர்-ரெண்டு பேர்தான் தென்னந்தோப்பு வச்சிருப்பாங்க... மத்த வீடுகள்ல வீட்டுக்கிட்ட ஒரு தென்னை மரமோ-ரெண்டு தென்னை மரமோதான் இருக்கும்....

எங்க பெரியப்பா வீட்டு வாசல்ல அப்படி ஒரு தென்னை மரம் நின்னுச்சு.... அதுல ஓவியமா ரெண்டே ரெண்டு தேங்கா காச்சிருந்துச்சு..... இப்போ தேங்காய் வெட்றவங்க அம்பது-அறுபதடி உயர மரமானாலும் வாங்கு கத்தி வச்சு அறுத்துடறாங்க... ஆனா... அந்த காலத்துல கால்ல தளதாடிய* கட்டிட்டு மரத்துல ஏறித்தான் தேங்கா பறிப்பாங்க.... அதுவும் ஒரு சில குறிப்பிட்ட ஆளுங்கதான் மரமேறுவங்க... பறிக்கிற தேங்காய்ல ஒரு தேங்காய் அவங்களுக்கு.. அதுதான் கூலி...

எங்க பெரியப்பா வீட்டு வாசல்ல நின்ன அந்த தென்னை மரத்துல ரெண்டே ரெண்டு தேங்கா இருந்துச்சுன்னு சொன்னேன்ல.... எங்க பெரியம்மா சாரதாம்பாள் , அப்படி மரமேறுற "ராமன்"ன்னு ஒரு ஆளை கூப்பிட்டு "ஏலே ராமா... இந்த தேங்காயை கொஞ்சம் பறிச்சு கொடுடா"ன்னு சொல்ல...

ராமனும் மரம் ஏறினான்... ரெண்டு தேங்காயை பறிச்சுப்போட்டுட்டு கீழ இறங்கிட்டான்... பறிச்சு போட்டதும் தான் தெரிஞ்சுது.. அந்த ரெண்டு தேங்காய்ல ஒன்னு ஒல்லி*...

ராமன் கீழ எறங்கி... அந்த ரெண்டு தேங்காய்ல நல்ல தேங்காய கூலியா எடுத்துகிட்டான்....

"ஏலே.. ஏலே... கொழம்பு வைக்கணும்டா... 5 ரூபா வாங்கிக்கோடா.... அந்த தேங்காய கொடுத்துட்டு போடா"ன்னாத்துக்கு..... "ம்ம்.... அதெல்லாம் முடியாது... எனக்கு தேங்காய்தான் வேணும்"னு எடுத்துட்டு போய்ட்டான்....

ஆக.... ரெண்டு தேங்கா.. ரெண்டுல ஒன்னு ஒல்லி.... அது எதுக்கும் உதவாது... பறிச்சவனுக்கு கூலியா இருந்த ஒரே ஒரு நல்ல தேங்காய அவன் கொண்டு போய்ட்டான்...

இப்படித்தான் இருக்கு நம்ம தமிழ்நாட்டோட நிலைமையும்.... ஏற்கெனவே அரசு ஊழியர்களுக்கு கூலியா , மாநிலத்தோட வருமானத்துல 80% போகுதுன்னு ஒரு பேச்சு இருக்கு... இதுல அகவிலைப்படி 2% உயர்வாம்....

இந்த தேங்காய் எப்போ பெரிசாகும்.. பெரிசாகும்ன்னு மரத்த வச்சு வளத்து பறிக்கலாம்னு காத்துக்கிட்டிருந்து... காய்ச்சதுல நல்ல தேங்காயை கூலியா கொடுத்துட்டு கொழம்பு வைக்க தேங்கா கிடைக்காம போன எங்க பெரியம்மா மாதிரித்தான் தமிழக மக்களும்...

வரிய கொடுத்துட்டு, ஓட்டையும் போட்டுட்டு "நமக்கு ஏதாவது நடக்கும்"ன்னு நம்பி உட்கார்ந்திருக்காங்க.... "நாங்க உங்களுக்காகத்தான் வேலை செய்றோம்"ன்னு இந்த அரசு ஊழியர்களும்.. ஆட்சியாளர்களும் மொத்தமாலவட்டிட்டு போய்டுறானுங்க...

ராமா... ராமா....

*தளதாடி - இரு கால்களையும் மாட்டிக்கொண்டு மரத்துடன் அணைந்து பற்றிக்கொள்ள உதவும் கயிறால் ஆன வளையம்

*ஒல்லி- தேங்காய் மாதிரியே இருக்கும்.. ஆனால் உள்ளே பருப்பு இருக்காது...

சுயநலத்தை கற்பிக்கும் கல்வி

ஒரு காக்காக்கு ரொம்ப தாகமா இருந்துச்சாம்... ஊரெல்லாம் அலைஞ்சும் காக்கா குடிக்கிற மாதிரி திறந்து வச்ச பாத்திரம் எதுலயும் தண்ணியே இல்லையாம்... கடேசியா ஒரே ஒரு குடத்துல அடில கொஞ்சமா தண்ணி இருந்துச்சாம்...

காக்கா பானை மேல உட்கார்ந்து குனிஞ்சு குடிக்க ட்ரை பண்ணுச்சாம்.. ஆனா தண்ணி எட்டலையாம்... ஒடனே காக்கா.... கீழ கெடந்த கூழாங்கல்ல எடுத்து எடுத்து அந்த பானைக்குள்ள போட்டுச்சாம்.... கல்லு பானைக்குள்ள நிறைய நிறைய.. தண்ணி கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துச்சாம்.. காக்கா குடிச்சுட்டு சந்தோஷமா பறந்து போச்சாம்...

நம் பிரச்சனைகளை தீர்க்க புத்திசாலித்தனமான உழைப்பு அவசியம்.. என்பதை விளக்கும் விதமாக இப்படி ஒரு கதையை நான் தொடக்கப்பள்ளி படிக்க ஆரம்பித்த காலங்களில் சொல்லிக்கொடுப்பதுண்டு.... பெரும்பாலான தாத்தா-பாட்டிகளும் கூட இந்த கதைகளை பேரக்குழந்தைகளுக்கு பெட்-டைம் ஸ்டோரியாக சொல்வது வழக்கம்...

நேற்றிரவு, கடந்த ஆண்டு அபி படித்து விட்டு போட்டிருந்த ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தை எடுத்து பார்த்தேன்... அதிலும் இந்த கதை இருந்தது.... ஆனால்... சமகாலத்திற்கேற்ப அந்த கதை மாற்றம் பெற்றிருந்ததை கண்டு அதிர்ந்தேன்...





ஆம்... இந்த காக்கைக்கும் தாகம் எடுத்தது... தண்ணீர் தேடியது.. ஒரு பானையில் தண்ணீரை கண்டது... ஆனால்... இந்த காகம் கூழாங்கற்களை எல்லாம் தேடவில்லை... பானையின் அடிப்பகுதியில் தன்னுடைய அலகால் குத்தி துவாரமிட்டது... தண்ணீரை குடித்துவிட்டு பறந்து சென்றது...

அட பாவிகளா.... குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் விஷயங்கள் இதுதானா??

பானைக்கு "வாய்" இருந்தாலும் கூட ஓட்டை போட்டு தண்ணீர் குடிக்கும் குறுக்கு வழியை கற்று தருகிறீர்கள்..

இருக்கும் நல்ல பானையை உடைத்து அது அடுத்து வருபவனுக்கு உபயோகம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை... நம் காரியம் ஆனால் சரி என்று கற்று தருகிறீர்கள்...

வன்முறையை பிரயோகித்து, அடுத்தவனுக்கு சொந்தமானதை உங்கள் தேவைக்காக எடுத்துக்கொள்ளலாம் என்று கற்று தருகிறீர்கள்..

உங்கள் தேவைக்கு குடித்தது போக மிச்சமுள்ளது வீணாக போனாலும் பரவாயில்லை என்று கற்று தருகிறீர்கள்...

# எது நாசமாய் போனாலும் பரவாயில்லை.. என் காரியம் நடக்க வேண்டும் என்று "சுயநலமாய்" மட்டுமே சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம் என்று கற்று தந்தால்...

"தீக்குளிக்கும்" போது செல்பியோ-வீடியோவோ எடுக்காமல் அவன் எப்படி காப்பாற்ற நினைப்பான்??

சபாஷ் கல்வி அமைச்சரே

இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வர காரணம் ஜப்பானில் வீசப்பட்ட அமெரிக்காவின் "லிட்டில் பாய்" என்ற பெயரை உடைய ஹைட்ரஜன் அணுகுண்டு வீச்சு என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியும்.. இதற்காக வரலாறும் நாமும் அமெரிக்காவை நிறைய திட்டி விட்டோம்... ஆனால்... அந்த அணுகுண்டு வீச்சுக்கு காரணமான , அதற்கு முந்தைய விஷயம்.... ஜப்பான் , அமெரிக்காவின் கடற்படை மீது நடத்திய படுபயங்கர தாக்குதல் என்பது நம்மில் சில பேருக்குத்தான் தெரிந்திருக்கும்.. "பேர்ல் ஹார்பர் அட்டாக்" என்று குறிப்பிடப்படும் அந்த தாக்குதலை விரிவாக காட்டிய ஒரு ஆங்கில திரைப்படம் "பேர்ல் ஹார்பர்"

அந்த திரைப்படத்தில் ஒரு காட்சி... அமெரிக்க ராணுவத்தில் பணிபுரியும் ஒரு கருப்பின இளைஞனை, அவனது மேலதிகாரியாக இருக்கும் வெள்ளைக்காரர் ஆயுத பிரயோகத்திற்கு அனுமதிக்கவே மாட்டார்... ராணுவ கப்பலின் சமையலறையில் தான் அவனுக்கு வேலை... அந்த கருப்பின இளைஞன் பலமுறை விண்ணப்பித்தும் அவனை சமையலறையிலேயே முடக்குவார் அந்த அதிகாரி...

இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு நள்ளிரவில் சாரை சாரையாக வரும் ஜப்பானிய விமானங்கள் அந்த பேர்ல் ஹார்பர் மீதி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த, அந்த உயரதிகாரியும் அடிபட்டு விழ... அப்போது இந்த கருப்பின இளைஞன் , தானும் ஆயுத தாக்குதல் செய்ய அனுமதிக்க வேண்டுமாய் கேட்பான்... அந்த அடிபட்டு விழுந்த வெள்ளை உயரதிகாரி, அப்போது தான் கண்ணசைவின் மூலம் அனுமதி கொடுப்பார்..

தன்னுடைய திறமையை எல்லாம் வெளிப்படுத்த நினைக்கும் அந்த கருப்பின இளைஞன் இருப்பதிலேயே பெரிய ஆயுதங்களாக பார்த்து , கையாண்டு எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்துவதாக அந்த கதைக்கள காட்சி அமைக்கப்பட்டிருக்கும்...

நிற்க...




தற்போதைய தமிழக அமைச்சர்களிலேயே அப்படியான ஒருவரை, மன்னார்குடி சதிகார கும்பலால் திறமையை பயன்படுத்த முடியாமல் நிராகரிக்கப்பட்ட ஒருவரை நம் கண்முன்னே நிறுத்துகிறது சமகால காட்சிகள்...

மரியாதை நிமித்தமாக சில பதவிகளுக்கேற்ப சில வார்த்தைகளை உச்சரிப்பது நம் வழக்கம்... "மேதகு" ஆளுநர்..., "வணக்கத்திற்குரிய" மேயர்... என்பது போலவே... "மாண்புமிகு" முதலமைச்சர்......

அப்படியான "மாண்புமிகு" என்ற வார்த்தையை கூட ஒழுங்காக உச்சரிக்க தெரியாத முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் "மான்மிகு அம்மா அரசு... " என்று ட்ராமா போடும் வேளையில்.... அம்மாதிரி ட்ராமா எதுவும் போடாமல் , கிடைத்த வாய்ப்பை மிக அற்புதமாக பயன்படுத்தி கலக்குகிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்...

இன்று காலை, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பத்திரிக்கையாளர்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்த சந்திப்பில் அவர் "அம்மா அரசு என்றோ... அம்மாவின் வழியில் செயல்படும் அரசு" என்றோ சொல்லவில்லை.... ஏனென்றால்... இது அம்மாவின் அரசும் அல்ல... அம்மா வழியில் செயல்படும் அரசும் அல்ல என்பதை முழுமையாய் உணர்ந்து, தமக்கு கொடுக்கப்பட்ட அமைச்சருக்கான கடமையை மிகவும் திறம்படவும், தொலைநோக்கு பார்வையுடனும் செய்து கொண்டிருக்கும் நிதானம் அவரிடம் இருக்கிறது

ஹாட்ஸ் ஆப் திரு செங்கோட்டையன் அவர்களே....

முழு விடுமுறைக்கு அதிகாலை துயிலெழுச்சி

நாளைக்கு லீவுன்னா, இன்னிக்கு காலைல எழுந்துக்கும் போதே மனசுல ஒரு சந்தோசம் வரும்...
"நாளைக்கு காலைல இப்படி சீக்கிரம் எழுந்துக்க வேண்டாம்... அடிச்சு புடிச்சு ஓட வேண்டாம்..."அப்படின்னு ..

டெய்லிதான் அலாரம் வச்சு எழுந்துக்கிறோமே... இன்னிக்கு ஒருநாளாச்சும் அலாரம் அடிக்காம நல்லா தூங்கலாம்... என்று நினைத்து எட்டுமணி வரையோ, பத்துமணி வரையோ தூங்கி... பல்லு கூட தேய்க்காமல் அப்படியே டீ/காபி குடித்து... சோம்பல் முறித்து, மெதுவாக குளித்து, துணி துவைத்து, சமைத்து... சாப்பிட உட்காரும் போது... மணி இரண்டோ, மூன்றோ ஆகி இருக்கும்....

சாப்பிட்ட உடன் லேசாக கண்ணை சொக்கும்... ஒரு குட்டி தூக்கம் போட்டால் தேவலாம் போல இருக்கும்... தூங்கி விழித்து பார்த்தால்... நேரம் அஞ்சு மணியோ, ஆறு மணியோ ஆகி இருக்கும்... சோம்பலாய் இருக்கும்... அப்படியே டி வி முன்னாலோ, லாப்டாப்/மொபைலுடன் அமர்ந்தாலோ... அன்றைய தினம் முடிந்திருக்கும்.... மறுநாள் மீண்டும் அலாரம்... அவசர ஓட்டம்...



இந்த ஒரு நாள் விடுமுறைக்காக ஆறுநாள் காத்திருந்து, அந்த ஒரு நாளை எப்படி அனுபவித்தோம் என்று நினைத்தால்... ஒன்னுமே இருக்காது...

விடுமுறை தினம் முழுவதையும் அனுபவிக்க வேண்டும் என்றால்... முதலில் பத்துமணி, பதினோரு மணி என்று தூக்கம் தொடர்வதை விட்டு, எப்போதும் வேலைக்கு போக எழுந்திருக்கும் நேரத்திலயோ, அதற்கும் முன்பாகவோ எழுந்துவிட வேண்டும்...

பிறகு... நாம் எப்போதுமே அவசர அவசரமாக செய்யும் வேலைகளை, மிகவும் நிதானமாக, பரபரப்பில்லாமல்...ரசித்து செய்ய வேண்டும்... சம்பளத்திற்காக தினசரி செய்யும் அலுவலக பணிகள் எதுவுமே இல்லாமல்.... நமக்காக தினசரி அவசரம் அவரசமாக செய்யும் வேலைகளை.... நமக்கே நமக்காக செய்து கொள்கிறோம் என்ற நினைப்புடன்... நிதானமாக ரசித்து, அனுபவித்து செய்யும் பொழுது புரியும்... வாழ்வின் சுவை எத்தனை இனிது என்று.....

ஆறுநாள் காத்திருந்து கிடைத்த விடுமுறையை நொடி நொடியாய் அனுபவித்த திருப்தி கிடைக்கும்...

நீட்... புதிய அரசியல்..


கடந்த ஓரிரு வருடங்களாய் அல்ல-சில்லறைகளின் அரசியல் வாழ்விற்கு உதவியதில் நீட் முக்கிய பங்கு வகிப்பது சமகால சமூக நகர்வுகளை கவனிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்...



தற்போது புதிய சர்ச்சை... வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள்....

தமிழக மாணவர்களுக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறதா.... இல்லை.... வேறுபல மாநில மாணவர்களுக்கும் அவ்வாறு ஒதுக்கப்பட்டிருக்கிறதா.... என்ற தெளிவான தகவல் இல்லை...

இருந்தாலும்.... தேர்வு எழுதுவதற்காக , தேவு மையங்கள் அமைக்க கூடிய வசதிகளும், உள்கட்டமைப்பும் இல்லாத மாநிலங்களை பற்றி நாம் பேச தேவை இல்லை... ஆனால்.... வெகு நிச்சயமாக தமிழ்நாடு அத்தகைய உள்கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பது உறுதியான விஷயம்.. இந்நிலையில்... தமிழ்நாட்டில் படிக்கும் அனைவருக்கும் அந்த கல்வி ஆண்டின் இறுதி தேர்வை எழுதக்கூடிய உள்கட்டமைப்பை வைத்திருக்கும் தமிழகத்தில்.... அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள் மட்டும் எழுத கூடிய நீட் தேர்வு மையங்களை உருவாக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ள கூடிய வாதம் இல்லை..

இதுபற்றி நாம் பிறகு விவாதிக்கலாம்.... தீப்பற்றி எரியும் நேரத்தில் அதை அனைப்பதுதான் உடனடி தேவையே தவிர... எப்படி தீப்பிடித்தது என்பது பற்றிய விசாரணை அல்ல.... அதை பிறகு செய்து கொள்ளலாம்... முதலில் தீயை அணைப்போம்...

சரி.... ஆமாம்.... இந்நேரம் நமக்கு வேறு சில கேள்விகளும் எழுவது தவிர்க்க முடியாததாகிறது...

இன்று காலை , வெளிமாநிலத்திற்கு பயணித்து நீட் தேர்வு எழுதும் அளவிற்கு வசதி இல்லாததால்.... நீட் தேர்வு எழுத செல்லாத திருச்சி மாணவரை பற்றி ஒரு செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது.... ஆமாம்.... திருச்சியில் இருந்து எர்ணாகுளம் சென்று பரீட்சை எழுத கூட வசதி இல்லாத மாணவர் , திருச்சியிலேயே தேர்வு எழுதி பாஸ் செய்திருந்தாலும் கூட எப்படி அடுத்த ஐந்தாண்டுகள் மருத்துவ கல்லூரியில் பயில்வார்???

மருத்துவ படிப்பு என்பதன் பின்னணியில் விளையாடும் லட்சங்கள்-கோடிகள் பற்றி எல்லோருக்குமே தெரியும்.... எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாய் கோடிகளை வாங்கி ஏமாற்றிய வேந்தர் மூவிஸ் "மதன்" அவர்களை நாம் மறந்திருக்க முடியாது... முன்பெல்லாம் வெகு சில மாணவர்களே மார்க்கின் அடிப்படையில் மருத்துவ கல்வியில் சேர்ந்தார்கள்.. மிகப்பெரும்பாலானவர்கள் "பண பலத்தின் " காரணமாகவே மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்தார்கள்.... ஏழை-நடுத்தர குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டாகனியாகத்தான் இருந்திருக்கிறது....

இந்நிலையில், எர்ணாகுளம் சென்று தேர்வு எழுதும் அளவிற்கு கூட வசதியற்ற ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு மாணவனுக்கு "மருத்துவ கல்வி" மீதான நம்பிக்கையை விதைத்தது நீட் மட்டும் தான் என்பதை எப்படி வசதியாக மறந்துவிட்டோம்??

நிச்சயம் சமகாலத்தில் படிக்கும் மாணவர்களும் - மாணவர்களின் பெற்றோர்களும் மிக நன்றாகவே உணர்ந்திருகிறார்கள்..... நீட் தேர்வுகள் வந்த பிறகுதான் நாமும் மருத்துவ கல்வி பற்றி கனவு காண முடிந்திருக்கிறது.....என்ற உண்மையை..... சிற்சில நிர்வாக குளறுபடிகள் இருந்தாலும்... இவைகள் சீரமைக்கப்பட்ட பிறகு நிச்சயம் பல ஏழை, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்விக்கான வாய்ப்பை பெறுவார்கள்...

ஆனால்... எப்போதும் போல... தமிழக மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தே அரசியல் ஆதாயம் அடைந்த தமிழக அரசியல்வாதிகளும்..... எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி மட்டுமே தன்னுடைய டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்தி பழக்கப்பட்ட ஊடகங்களும் சேர்ந்து மாணவர்களின் அந்த நம்பிக்கையை உடைத்து குழப்ப பார்க்கிறார்கள்..

கடந்த வருடம் அனிதாவை பலி கொடுத்து தங்களின் அரசியல் இருப்பபை காட்டியவர்கள்... இவ்வருடம் வேறு யாரோ ஒரு அனிதாவை உருவாக்கவே முயல்கிறார்கள்....

ப்ளீஸ்...... எனதருமை
மாணவர்களே... நன்றாக படித்தால்.... உள்வாங்கி புரிந்துகொண்டு திறமையாய் படித்தால்... நிச்சயம் நீட் தேர்வுகளில் வெற்றி பெற முடியும்..... அதை செய்யுங்கள்..... இந்த தமிழக அரசியல்வாதிகளின் நரித்தனத்தை நம்பினால்...... ஒரு ஒரு கேள்விதான்....

"உங்களில் யார் அடுத்த அனிதா....??"