சனி, 7 மார்ச், 2015

யார் முயல்கிறார்களோ

ஆல்பிரெட்  நோபெல் என்பவர் ஒரு விஞ்ஞானி.. அவர்  ஒரு வெடி பொருளை கண்டுபிடித்ததன் மூலம் மிக பெரிய கோடீஸ்வரனானார் . ஒரு முறை அவர் காரில் சென்ற போது அந்த கார் படு பயங்கர விபத்துக்குள்ளாகி மிகவும் அடிபட்டநிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்..  மறுநாள் செய்திதாளில் "அல்பிரெட் நோபெல் " இறந்துவிட்டதாகவும் , உலகை அழிவின் பாதையில் எடுத்துச்செல்லும் ஒரு பொருளை கண்டுபிடித்த இந்த நபர் இறந்ததை பற்றி வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை.. சந்தோசம் தான் படவேண்டும் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.
இதனை காண நேர்ந்த நோபேலுக்கு உரைத்தது.. தாம் இந்த மனிதகுலத்திற்கு எவ்வளவு பெரிய தீங்கிழைத்திருக்கிறோம் என்பது... உடனே தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஒரு டிரஸ்ட் ஆக அமைத்து உலகின் அமைதிக்காக பாடுபடுபவர்கள், மனிதகுலம் தழைக்க மருந்து கண்டு பிடிப்பவர்கள், மனித குல முன்னேற்றத்திற்கு தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துபவர்களுக்காக பெரும் தொகையை பரிசாக வழங்குவதன் மூலம் தன்னுடைய பாவத்திற்கு பரிகாரம் தேட முற்பட்டார்.. இன்றுவரை அந்த பரிகார பயணம் தொடர்கிறது..
ஏதோ ஒரு சுய லாபத்திற்காக "வாழும் வள்ளுவரே.. காவிரி தாயே.." என்றெல்லாம் போஸ்டர் அடித்து நன்றாக இருப்பவரையும் பதவி வெறி பிடிக்க பழக்கி விடுவதில் வல்லவர்களான நம் மக்களில் ஒருவரோ / ஒரு கொள்ளை கும்பலோ  அத்தகைய நோபல் பரிசுக்கு திருமதி.சோனியாகாந்தி அவர்களின் பெயரை பரிந்துரை செய்வதாக அறிவித்திருக்கிறார்..

இந்தியாவில் ஓட்டு பிச்சை எடுத்து குப்பை கொட்ட வேண்டுமானால் மக்களுக்கு அறிமுகமான ஒரு ஆள் தேவை என்பதற்காக பழுத்த அரசியல் வாதிகள் எல்லாம் கூடி கணவனை பறிகொடுத்து பேரக்குழந்தைகளோடு விளையாட வேண்டிய திருமதி. சோனியா அவர்களை வலுக்கட்டாயமாய் முன்னிறுத்தி இப்போது நாட்டில் நடக்கும் எல்லா தவறுகளுக்கும் திருமதி. சோனியாகாந்தி தான் காரணம் என்ற மாயையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்..

மெத்த படித்த முகநூல் போராளிகளோ அந்த கருத்தை நிலை செய்யும் பெரு முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்..
இப்போது நோபல் பரிசு குபாரை கிளப்பி கும்மி அடிக்க யார் முயல்கிறார்களோ.. அந்த ஆல்பிரட் நோபெலுக்கே வெளிச்சம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக