ஞாயிறு, 8 மார்ச், 2015

நமக்காக நாமே

ஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல விடுதியின் ஒரு சம்பவம் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கண்டனத்தை வாங்கி தந்திருக்கிறது.. இது முற்றிலும் வேதனையான ஒரு சம்பவம். 

இறந்த குழந்தையின் உடலை எலியோ- பெருச்சாளியோ கடித்து விட்டது என்று ஒரு ஊடகம் செய்தி சொல்கிறது.. பெருச்சாளி கடித்து குழந்தை உயிரிழந்தது என்று ஒரு ஊடகம் செய்தி சொல்கிறது.. 

குழந்தையின் உடலுக்கு நேர்ந்த கதி பற்றியோ.. இனிமேல் இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்ற அக்கறையோ துளிகூட இல்லாமல், செய்தியை காசாக்கும் வியாபார நரி தந்திரமும் ,அரசின் மீது புழுதி வாரி தூற்றும் அரசியல் நரி தந்திரமும் தான் முன் நிற்கிறது இந்த ஊடகங்களின் முக மூடிக்குள்..

மழைக்காக ஓடும்  பள்ளிச்சிறுவன் நோட்டு புத்தகங்களை தலையில்  வைத்து நனையாமல் இருக்க முயசிப்பது மாதிரி அரசும் எலி பிடிக்க கிளம்பி இருக்கிறது..

உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள்.. எத்தனை பேர் வீட்டில் எலிகள் இல்லை.. இதனை முற்றிலும் ஒழிப்பது  எவ்வளவு தூரம் சாத்தியம்..?? அரசு மருத்துவமனைக்கு செல்லும் பார்வையாளர்கள் எத்தனை பேர் உணவுப்பொருட்களை உண்டபின் அந்த இடத்தை சுத்தமாக வைத்து விட்டு வருகிறோம்.. 

ஊழல் செய்கிறார்கள்.. லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற கோபம் உங்களைப்போலவே.. இன்னும் உங்களை விட அதிகமாகவே எனக்கும் இருக்கிறது.. அதே நேரம் அரசு என்பது சட்டங்களை இயற்றவும் நடைமுறை படுத்தவும் மட்டுமே நமக்காக நாமே ஏற்படுத்திய ஒரு விஷயம். அந்த சட்டங்களும் திட்டங்களும் வெற்றி பெறுவது என்பது நம் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமே இல்லை.. கொஞ்சம் சிந்திப்போம்.. இலவசமாய் என்ன கிடைக்கும் என்று காத்திருப்பதை தவிர்த்து நம் வரிப்பணத்தில் தான் அவை நமக்கு கிடைக்கின்றன.. அதனை நாம் முழுமையான பொறுப்புடனும்   பயன் படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு குடி மகனும் நினைப்பானாயின் நம் பிரச்சினைகளில் பாதி பளு குறையும், பாதி குறைந்தால் மீதில் அகற்றுவதில் எந்த சிரமமும் இருக்காது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக