ஞாயிறு, 8 மார்ச், 2015

மனம் வேண்டும்..!!!

நாங்களும் தான் தானம் செய்கிறோம்.. ஆனால் ஏன் கர்ணனை மட்டும் எல்லோரும் கொடை வள்ளல் என் புகழ்கிறீர்கள்.. என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டார்கள் பாண்டவர்கள்..
அவர்களுக்கு செயல் விளக்கம் தரும் விதமாய்.. ஒரு பானை நிறைய பொற்காசுகளை தருவித்து இதை இன்று மாலைக்குள் நீங்கள் தானமாக கொடுத்துவிட வேண்டும்.. ஆனால் ஒரு நிபந்தனை.. நீங்கள் எவ்வளவு இதிலிருந்து எடுக்கிறீர்களோ அதே அளவு நிறைந்து விடும் என்றார்..


நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம்,, நிச்சயம் இந்த பானையில் இருக்கும் பொற்காசுகளை மாலைக்குள் தானமாக கொடுத்து விடுவோம் என்று சொல்லிய படி அள்ளி அள்ளி கொடுக்க தொடங்கினர்.. மாலை வரை ஆயிற்று .. பானையில் பொற்காசுகளின் அளவு குறையவே இல்லை.. தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டனர் பாண்டவர்கள்..


கர்ணனை அழைத்தார் கிருஷ்ணர். கர்ணனிடமும் இதே நிபந்தனையை சொன்னார்.. ஒப்புக்கொண்ட கர்ணன்.. பக்கத்தில் நின்ற ஒரு ஏழை வயோதிகனை அழைத்து அந்த பானையை அப்படியே தூக்கி தானமாய் கொடுத்தான்..


பாண்டவர்களுக்கு புரிந்தது..


தானம் கொடுக்க வசதி முக்கியமில்லை.. முதலில் மனம் வேண்டும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக