சனி, 7 மார்ச், 2015

எது தேவைன்னு மட்டும் நமக்கு தெரியல...

என்னுடைய சித்தப்பாவுக்கு..கிரிக்கெட் பற்றி  தெரிந்திருக்கவில்லை.. பிரதீபா பாட்டில் பரிசுப்பொருட்களை வீட்டிற்கு அள்ளி சென்றது பற்றியோ , ராபர்ட் வதேரா முன்னூறு கோடிக்கு மேல் சொத்து வாங்கியது பற்றியோ  தெரிந்திருக்கவில்லை.. ராஜூ முருகன் வட்டியும் முதலும் எழுதுவது பற்றி தெரிந்திருக்கவில்லை.. செந்தில் கே நடேசன் கவிதை என்ற பெயரில் தெரியாத்தனமாக அவனுடைய முகநூல் சுவருக்கு வருபவர்களை வதைப்பது பற்றியும் தெரிந்திருக்கவில்லை.. இணையம் பற்றி தெரியவில்லை..

ஆனால் அவருக்கு எப்போது நாற்று விட வேண்டுமென்பதும், வானத்தில் எந்த பக்கம் மின்னலடித்தால்  மழை பெய்யுமென்பதும். நாற்றங்காலில் எப்போது தண்ணீரை வடித்து காயவிட வேண்டுமென்பதும் தெரிந்திருந்தது.. யூரியாவை அதிகம் போட்டால் இலை சுருட்டு புழு உடனே பயிரை தாக்குமென்பது தெரிந்திருந்தது.. அவர்  கவலை அவரின், அவரை சார்ந்தவர்களின் பசியை தீர்ப்பதற்காகவும் , தேவைகளை தீர்ப்பதை பற்றியும் மட்டுமே இருக்கிறது..

ஆனால் நாம் ..????
எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தீராத ஆரவத்தில் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம் .. ஆனால் எதிலும் பூரணமாக முடியவில்லை... நமக்கு சோறுபோடும் வேலையை தவிர அனைத்தை பற்றியும் அதிகமாய் கவலை படுகிறோம்..

தி. ஜானகிராமனை படிப்பவர்கள் ராஜேஷ்குமாரை படிப்பவர்களை மட்டமாகவே பார்கிறார்கள்..  கிரிக்கெட் பற்றி தெரியவில்லை என்றால் வேற்று கிரக மனிதனைப்போலவே நினைக்கிறார்கள்..  நேற்றைய அனுபவமும் இல்லை.. நாளைய திட்டமிடலும் இல்லை.. வெறுமனே..இன்றைய சிந்தனை.. ஆனாலும் இவைகளில் எதோ ஒரு திருப்தி.. ஆனால் அது தனிமனித திருப்தி... இதற்காக மற்றவர் ரசனையை ஏன் குறை சொல்ல வேண்டும்... அவங்க அவங்களுக்கு பிடிச்சத அவங்க அவங்க ரசிக்கிறாங்க.. இது முற்றிலும் தனி மனித திருப்திதானே தவிர தி. ஜானகிராமனை நீங்கள் படிப்பதாலேயோ- ராஜேஷ்குமாரை இன்னொருவர் படிப்பதாலேயோ ஒரு துரும்பு கூட பயனில்லை.. படிப்பவரை தவிர்த்து மற்றவர்களுக்கு...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக