ஞாயிறு, 8 மார்ச், 2015

சிவகாசி வெடி விபத்தும் திடீர் கடவுள்களும்

இன்று முகநூல் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைத்த அவல் திரு. மம்முட்டி அவர்கள் ரூ.3500000 ம் மதிப்பிலான மருந்துப்பொருட்களை சிவகாசி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கியது. 

எல்லோரை போலவே நாமும் மனசார வரவேற்கிறோம்.. அவரின் மனித நேயத்திற்கு தலை வணங்குகிறோம்.. ஆனால் இதனை சாக்காக பயன் படுத்தி சகட்டு மேனிக்கு தமிழ் நடிகர்களின் மீது சேறு வாரி இறைக்க முற்படும் "நன்றி மறவா" தமிழ் உள்ளங்களை  பாராட்ட தமிழின் மூன்று லட்சம் வார்த்தைகளிலும் ஒரு வார்த்தை கிடைக்கவில்லை.

இதற்கு முன்பு தமிழ் நாட்டில் வேறு எதுவும் துயர சம்பவங்கள் நடக்கவே இல்லையா.. அதற்கு தமிழ் நடிகர்கள் யாரும் உதவவே இல்லையா..?? இல்லை குஜராத் நிலா நடுக்கம் முதல் கார்கில் யுத்தம் வரை.. தமிழன் யாருக்கும் அள்ளிக்கொடுக்கவில்லையா..
உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ கலை நிகழ்ச்சிகள் நடத்தி பிச்சை எடுத்துதான் தமிழ் நடிகர்கள் உதவுவார்கள் என்று ஆதங்கப்படும் அன்பு நண்பர்களே... அந்த பிச்சை எடுக்கும் நிகழ்ச்சியை விளம்பரதாரர்களை பிடித்து இரண்டு மூன்று வாரங்களுக்கு பகுதி பகுதியை ஒளிபரப்பி காசு பார்க்கும் ஊடகங்களை குறை சொல்ல ஏன் யாருக்கும் தைரியமில்லை..
வயிற்று பசிக்காக விபச்சாரம் செய்பவளை படம்பிடித்து காசு சம்பாதிக்க நினைக்கும் ஊடகங்கள் அதனினும் கேவலம் இல்லையா?? இல்லை ஊடகங்கள் நடத்துபவர்கள் எல்லாம் அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்களா..??

விபத்து என்பதோ இயற்க்கை சீற்றம் என்பதோ நாளை நடக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.. அப்படி ஏதேனும் நிகழும் பட்சத்தில் இந்த நடிகர்கள் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா..?? இல்லை இன்று அரக்கர்களாக சித்தரிப்பவர்களை நாளை காசுக்காக கடவுள் ஆக்குவீர்களா..?? 
கொடுத்தால் நல்லவன்.. இல்லை என்றால் கெட்டவன் என்பது விபச்சாரம் என்றால் ஒட்டு மொத்த தமிழினமும் அதை தான் செய்கிறதா,,,
பக்கத்து வீட்டுக்காரன் மனைவியை உயர்த்தி பேசுங்கள்.. பெருமையான விஷயம்.. அதற்காக உங்கள் மனைவியை விபச்சாரி என தாழ்த்திப்பேசித்தான் பக்கத்து வீட்டுக்காரியை பத்தினியாக்கும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக