சனி, 7 மார்ச், 2015

அவன் தேவன் என்றாலும் பாவத்தின் சம்பளம் மரணம்

திரேதா யுகத்தில் நடந்த இராமாயணத்தில் மனிதனாய் இருந்த அவதார புருஷன் ஸ்ரீ ராம பிரான் தனுடைய நண்பனுக்கு உதவி செய்யும் பொருட்டு ஆராயாமல் மாவீரம் வாலியை மறைந்திருந்து தாக்கி கொன்று விடுகிறான்.. ஆனால் ஒரு அவதாரம் செய்தாலும் தவறுதானே.. அது சரி செய்யப்பட்டதா...?? 
ஒரு சாதாரண மனிதனாய் எனக்குள்ளும் இந்த கேள்வி... வாலிக்கு மோட்ஷம் கொடுக்கத்தான் ஸ்ரீ ராமபிரானின் பானம் வாலியை வதம் செய்தது.. ஆனாலும் அது மானுட அ
வதாரத்தில் செய்ததாகையால் அதனை சரி செய்கிறார் பகவான்.. எப்படி..??
கதைக்குள் போவோமா...
துவாபர யுகம் .. அதாவது மகா பாரத காலம்.....ஒரு முனிவர் தவமிருக்கையில் அவரை பரிகாசம் செய்யும் பொருட்டு ஒரு ஆண்மகனுக்கு வயிற்றில் கந்தல்துணி மூட்டையை வைத்து கட்டி .. ஸ்திரீ வேடமிட்டு.. "இந்த பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்.." என்று வினவுகிறார்கள் ஆயர் பாடியின் சில இளைஞர்கள்.
ஆணுக்கு வேடமிட்டுதான் அப்படி நம்மை பரிகாசம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்த முனிவர் சினம் கொண்டார்.. இந்த பெண்ணுக்கு உலக்கை தான் பிறக்கும்..அந்த உலக்கைதான் உங்கள் இனம் அழிந்து போக காரணமாகும் என்று சபித்துவிட்டு போய் விட்டார்..
அந்த இளைஞனுக்கு பிரசவ வலி கண்டு ஒரு உலக்கையும் பிறந்தது.. பயந்து போனார்கள்.. முனிவரின் சாபம் பாதி பலித்துவிட்டது.. மீதியும் பலிக்குமானால் நம் இனம் கூண்டோடு அழிந்து விடும் என பயந்தனர்.. அந்த உலக்கையை மாவாக உரைத்தனர்.. அதனை யமுனை நதியில் கரைத்தனர்.. ஒரு நீளமான குச்சி அளவு அந்த உலக்கை தேய்ந்த உடன் அதனையும் நதியில் வீசிவிட்டனர்.
அவ்வாறாக கரைக்கப்பட்ட அந்த உலக்கைதூளில் இருந்து தர்ப்பை புற்கள் முளைத்து வளர்ந்தன..அந்த குச்சி கரை ஒதுங்கி கிடந்தது.. யமுனையின் கரையில் அவ்வழியே ஒரு வேடன் வந்தான்.. கரை ஒதுங்கி இருந்த அந்த உலக்கையின் தேய்ந்த குச்சி ஒரு அம்பு போல் இருந்தது.. அதனை எடுத்து தன்னுடைய அம்பராவில் வைத்துக்கொண்டான்..
மகாபாரத யுத்தம் முடிந்த பின் அந்த வெற்றியை கொண்டாட துவாரகாபுரியில் கூடி மது அருந்திய யாதவர்கள் போதையின் மிகுதியில் அங்கு முளைத்திருந்த தர்ப்பை புற்களை பிடுங்கி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மாண்டனர்.. அந்த முனிவரின் சாபம் வேலை செய்ய துவங்கியது..
ஒரு புல் வெளியில் வான் பார்த்து படுத்திருந்தார் பகவான் கிருஷ்ணர்.. ஒரு காலை மடக்கி வைத்து இன்னொரு காலை மடக்கி வைத்த காலின் மேல் தூக்கி வைத்து ஆட்டிக்கொண்டிருந்தார்.. அதாவது தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புல் தரையில் படுத்திருக்கும் ஆள் தெரியாது.. மேலிருக்கும் காலின் கட்டை விரல் மட்டும் தெரியும்.. அப்போது அந்த வழியாக வேடன் வந்தான்.. நாம் முன்பே கண்ட உலக்கை அம்பை எடுத்த அதே வேடன்.. அவன் தூரத்திலிருந்து பார்த்தபோது பகவான் கிருஷ்ணரின் கால் கட்டை விரல் அசைவு மட்டும் தெரிய அதனை ஒரு மான் மேய்ந்துகிண்டிருப்பதாக நினைத்த வேடன் தன்னுடைய அம்பரா துணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து குறி பார்த்து அந்த கட்டை விரலின் மீது பாய்ச்சினான்..
அவன் எடுத்த அந்த அம்பு.. ஆம்.. 
 உலக்கையில் மிஞ்சிய கடைசி பகுதி..

அந்த வேடன்.. வாலி என்பதனை சொல்லவும் வேண்டுமோ...??!!!

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக