சனி, 7 மார்ச், 2015

வழி விடுங்கப்பா..

பத்து பேர் சாப்பிடும் உணவு ஒரு பாத்திரத்தில் இருக்கிறது... பத்து ஆட்களும் இருக்கிறார்கள்.. முதலில் நிற்பவர் வயிறு முட்ட சாப்பிட்ட பின்பு "ஊரில் இருந்து என்னுடைய அண்ணன் வருவதாக சொல்லி இருக்கிறார்.. அவருக்கும் எடுத்துக்கொள்கிறேன்.." என்று ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்கிறார்.. இரண்டாமவரும் அதே போல் செய்கிறார்.. மூன்றாமவரும்  அப்படியே தொடர.. ஆறு பேரின் சாப்பாடு மூன்று பேரிடம் சென்று  விடுகிறது.. இதனை பார்க்கும் ஆறாவது ஏழாவது ....... பத்தாவது ஆட்கள் என்ன செய்வார்கள்..??
ஒன்று.. வரிசை முறையை மீறி முன்னே வர வன்முறையை கையிலெடுப்பார்... இல்லை ஊரில் இருபவருக்காக முன்னவர்கள் எடுத்து வைத்த பார்சலை களவாட முனைவார்..  ஒருவரிருவர் தலை எழுத்து என பட்டினியை சகித்துக்கொள்வார்..

ஒருவனை களவாடவும், வன்முறையை கையிலெடுக்கவும் தூண்டுவது யார்..? அல்லது எது...??
முன்னாள் வாய்ப்பு கிடைக்க பெற்றவர் தானே.. அப்போது குற்றவாளி முன்னால் இருப்பவர் தானே..?

தன்னுடைய தேவைக்கு மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வழி விடும் போது இந்த உலகத்தில் இருக்கும் அறுநூறு கோடி மக்களுக்கும் தேவையான எல்லாமே இருக்கிறது... வாய்ப்பு கிடைத்தவர்கள் பதினேழு தலை முறைக்கும் சேர்த்து சம்பாதிக்க துடிக்கும் போது மட்டுமே சட்ட விரோத காரியங்கள் செய்ய தூண்டப்படுகிறார்கள் வாய்ப்பு கிடைக்காதவர்கள்..

இதுல இருந்து என்ன சொல்ல வரீங்க...??

உங்க ஆபீஸ்ல பதினஞ்சு இருபது வருஷமா சீட்ட தேச்சுகிட்டு ஒரு குரூப் உட்கார்ந்திருக்கும்ல.. பின்னாடி வந்தவங்களுக்கு வழி விடாம... போட்டு தள்ளுங்க சொல்றேன்.. ஹா ஹா ஹா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக