ஞாயிறு, 8 மார்ச், 2015

அந்த "ஆண்டவனுக்கே" வெளிச்சம்..!!!

இன்றைய தமிழகத்தின் ஹாட் டாக் "சஹானா.."

ஐம்பது பேரை ஏமாற்றி திருமணம் செய்தார் என இவர் மீது புகார்.. இதில் இயல்பாகவே நம்மை போன்ற அப்பாவிகளுக்கு சில பல சந்தேகங்கள் எழுவதை தடுக்க முடியவில்லை.

1 ) அந்த ஐம்பது கணவர்களையும் கண்டு பிடித்து விட்டார்களா..??
2 ) ஒருவருடன் ஓரிரு நாட்கள் முதல் ஒருவருடன் ஆறு மாதங்கள் வரை இவர் வாழ்ந்ததாக "சரித்திரம்" சொல்கிறது. அவ்வாறு இவர் தேர்ந்தெடுத்த அவைவரையும் இவரே நேரடியாக தேர்வு செய்ததாகவும் அந்த கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரே நாள் பழக்கத்தில் இவர் அடுத்தநாள் திருமணம் செய்திருக்க முடியாது. பேசி, பழகி, காதலித்து ( நடித்து) திருமணம் வரை செல்ல குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது  ஆகி இருக்கும். அப்படி என்றால் இவர் எத்தனை வருடங்கள் இந்த "தொழிலில் " இருக்கிறார்.
3 ) கடந்த ஆறு வருடங்களாக இவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பனி புரிந்ததாக அந்த குறிப்பேடுகளின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த ஆறு வருடங்களில் இவர் எத்தனை திருமணம் செய்தார். ? திருமணத்திற்கு குறைந்தது மூன்று நாட்களாவது விடுப்பு எடுத்திருப்பார் இல்லையா.. உடன் வேலை செய்யும் ஒருவருக்கு கூடவா தெரியாமல் இவர் திருமணம் செய்துகொண்டார்..?? இவர் தரப்பிலிருந்து ஒரு "நெப்போலியனோ - ஜானி வாக்கரோ" கூடவா திருமணத்திற்கு செல்லவில்லை..??
4 ) கூடங்குளத்தை மறந்து முல்லை பெரியாறு பக்கம் தமிழ் செம்மெறிகளை திருப்பியது மாதிரி  கிரானைட்டுகளை  மறந்து இப்பொழுதும் கிளுகிளுப்பாய் திருப்பி விட ஏதும் சதுரங்க நகர்த்தலா..??

அந்த "ஆண்டவனுக்கே" வெளிச்சம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக