சனி, 7 மார்ச், 2015

முழு தேங்காயும் ஒரு அப்பாவி நாயும்..

சுமார்  12 வருடங்களுக்கு முன்பு என்னுடைய மேலதிகாரி தன்னுடைய ATM கார்டை கொடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துவரசொன்னார்.. நானும் என்னுடைய நண்பனும் சக ஊழியனுமான குமாரும் ஸ்டேட் பேங்க்   ATM க்கு சென்றோம்.. எனக்கு அப்போதெல்லாம் ATM மெஷின் என்பது  வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் அளவிற்கு மட்டுமே அறிமுகமாயிருந்தது.. மற்ற ATM களில் கதவு திறந்தே இருக்கும்.. ஆனால் ஸ்டேட் பேங்க் ATM ல் கார்டை வைத்துதான் கதவை திறக்க வேண்டும்.. ஆனால் எனக்கோ- என் நண்பனுக்கோ அதை திறக்கும் வித்தை கனவில் கூட காணக்கிடைக்காத பாக்கியமாயிருந்ததால்.. பல்வேறு முயற்சிகள் செய்தும் திறக்கமுடியவில்லை.. அப்போது என் நண்பன் சொன்னான்...
"நாய்கிட்ட முழு தேங்காய் கிடைச்சமாதிரி போச்சே மச்சி நம்ம பொழப்பு.... "

( அப்புறம் இன்னொரு அலிபாபா வந்து   கதவை திறக்க.. அவர் வெளியேறும் வரை காத்திருந்து அந்த கதவு தானாக மூடும் முன்பே உள்ளே நுழைந்தது வேறு ஒரு வரலாற்று சம்பவம்..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக