சனி, 9 மே, 2015

யாராவது வாங்களேன்...

வெள்ள, புயல், போர் போன்ற இயற்கை - செயற்கை காரணிகளால் எல்லாவற்றையும் இழந்து முகாமில் இருக்கும் மக்களிடம் சாப்பாட்டு வாகனம் வருகிறது என்று யாராவது வதந்தியை கிளப்பி விடுவார்கள்.. அந்த வாகனத்தின் பின்னால் ஓடும் அப்பாவி மக்கள் சிறிது தூரம் ஓடிக்களைத்தபின் உணர்வார்கள் அந்த வாகனம் நமக்கு உணவு கொண்டு வர வில்லை.. நாம் இழந்த பகுதிகளில் மிச்சம் மீதி இருப்பவற்றை வாரிக்கொண்டு செல்ல வந்தது என்று... ஆனாலும் அதை 
தடுக்கும் திராணியற்று.. இன்னொரு சாப்பாட்டு வாகனம் எப்போது வரும் என்று காத்துக்கிடப்பார்கள்...

அந்த அகதிகளுக்கும் இன்றைய தமிழர்களுக்கும் அதிக வித்தியாசமில்லை... நம்மை ஆரியர்கள் அடிமை படுத்தினார்கள்.. முஹலாயர்கள் அடிமை படுத்தினார்கள்.. ஆங்கிலேயர்கள் அடிமை படுத்தினார்கள்... ஆனால் இந்த மண்ணில் தோன்றிய முதல் மனித இனம் நாம் தான் என்றும், அதை மீட்டெடுப்பதற்குத்தான் நான் இந்த பூமியில் அவதரித்திருக்கிறேன் என்று ஒரு சீமானோ- வைகோவோ- கருணாநிதியோ- இன்னும் யாருக்கெல்லாம் கழுத்து நரம்பு புடைக்க கையை மடக்கி கூவத்தெரிகிறதோ அவர்கள் பின்னாலெல்லாம் ஓடுவார்கள்... ஓடிக்களைத்த பின் உணர்வார்கள்.. இவர்கள் தமிழன் என்ற போர்வையில் சுயலாபத்திற்காகத்தான் அப்படி கூவினார்கள் என்று.. ஆனாலும் அந்த மானம் கெட்ட தமிழினம்.. இன்னொரு கூவலுக்காக காத்திருக்கும்... இவர்களுக்கு எப்போது புரியுமோ... " எங்க அப்பன் குதிரை ஏறினான் என் கு........... காச்சு இருக்கு " என்ற பழமொழி விளக்கும் நிஜமான விளக்கம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக