சனி, 9 மே, 2015

ஒரு அசைவ கதை.... ஆனால் அர்த்தம் நிறைந்த கதை

ஒரு ராணுவ அதிகாரிக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்று ஒரு நினைப்பு... யார் என்ன சொன்னாலும் பாதி சொல்வதற்கு முன்பே இது எனக்கு தெரிந்த விஷயம் தான் என்று சொல்லி , விஷயத்தை சொல்ல வந்தவரின் மூக்கை உடைப்பதை வாடிக்கையாகவே வைத்திருந்தார்...
அவர் ஒரு முறை புதிய கேம்ப் ஒன்றிற்கு பொறுப்பெடுக்க வந்தார்.. அங்கு ஒரு பெண் குதிரை கட்டப்பட்டிருந்தது... அந்த குதிரை ஏன் என
விசாரித்தார் ராணுவ அதிகாரி.. அங்கிருந்த வீரன் சொன்னான்... "நமது வீரர்கள் மனைவியை பிரிந்து தனியாக இங்கே இருக்கிறார்கள்.. அவர்களுக்கு பாலியல் விருப்பங்கள் ஏற்படும் போது..." இதுவரை சொல்லும்போதே அந்த ராணுவ அதிகாரி இடை மரித்தார்..." சரி சரி.. எனக்கு விஷயம் புரிகிறது... நீ சொல்ல வேண்டாம் " என்றார்...

ஒரு நாளிரவில் அந்த ராணுவ அதிகாரி தன்னுடைய உள்ளாடைகளை கையில் எடுத்துக்கொண்டு அந்த குதிரையின் அருகில் இருந்து வந்தார்.. அதைக்கண்ட ராணுவ வீரன் (முதலில் விஷயத்தை சொன்னவன்) அதிர்ச்சி அடைந்து பின் பெரிதாக நகைத்தான்.... கோபப்பட்ட ராணுவ அதிகாரியோ... "ஏன் சிரிக்கிறாய்..." என கேட்டார்... " அய்யா.... நமது ராணுவ வீரர்களுக்கு பாலியல் ஆசை வரும்போது அந்த குதிரையில் ஏறி பக்கத்திலிருக்கும் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று வருவார்கள்... என நான் சொல்ல வந்ததை பாதியிலேயே சொல்ல விடாமல் தடுத்து இப்படி செய்து விட்டீர்களே ..." என்றான்..

நீதி :- எதையும் அரைகுறையாக கேட்டோ பார்த்தோ படித்தோ ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.. அது உங்களுக்கு பேராபத்தாக முடியலாம்...

(சுமார் 20-22 வருடங்கள் முன்பு பாக்யா வார இதழில் திரு,.பாக்யராஜ் அவர்கள் சொன்னது )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக