சனி, 9 மே, 2015

புகைபிடிப்பதை அறவே விட வேண்டும் - ரஜினிகாந்த்

புகைபிடிப்பதை அறவே விட வேண்டும் - திரு.ரஜினிகாந்த் அவர்கள்.

# இவர் நிஜமாகவே மனச்சாட்சி உள்ள நபரென்றால் புகையால் பாதிக்கப்பட்டோருக்காக 
ஒரு அறக்கட்டளை நிறுவ வேண்டும்.. 
ஏனென்றால் தமிழ்நாட்டில் எண்பதுகள் முதற்கொண்டு இன்று வரை சுமார் கால்நூற்றாண்டு
காலம் சிகரெட் பிடிப்பதை ஒரு ஸ்டைல் என்று வளரிளம் பருவ இளைஞர்களின் 
மனதில் விதைத்தவர் இவர்.. இவரை பார்த்து சிகரெட் பிடிக்க பழகியவர்கள் ஏராளம்.. 
இவர் எவ்வளவு நல்ல விஷயங்களை சொல்லி இருந்தாலும் கூட நல்ல விஷயத்தை விட 
கேட்ட விஷயம் தான் மக்கள் மனதில் பதியும்.. அந்த வகையில் இவர் உணராமல் 
மானுடத்திற்கே ஒரு பெரிய பாவத்தை செய்திருக்கிறார்... அறியாமல் செய்த பாவத்தை 
மன்னிக்கலாம் என்றாலும்.. அறிந்த உடன் அதற்கு தகுதியும், வசதியும் 
இருக்கும்பட்சத்தில் அதற்கு பிராயசித்தம் தேடுவது மனித குணம்..

ஜப்பானில் அணுகுண்டு வீசிய விமானி /ராணுவ அதிகாரி.. மேலிடத்தின் கட்டளையின் 
பேரில்தான் அதனை செய்தாரென்றாலும்.. அவரது கடைசி காலம் எப்படி இருந்தது என்பதை 
அவர் அவசியம் படிக்க வேண்டும்.

இவர் தமிழனா - கன்னடனா- என்பதெல்லாம் ஒதுக்கி இவர் முதலில் 
மனிதனாக நடந்தால் நலம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக