சனி, 9 மே, 2015

சிலைகள்

மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் என்பது அவர்களை கெளரவப்படுத்தவும்,
நினைவு கூறவும் மட்டுமே என்ற நிலை மாறி இப்போதைய காலங்களில் 
அவர்களை வைத்து ஜாதி- மத-அரசியல் கலவரங்களை தூண்டுவதற்கு 
என்று ஆகிவிட்டது... 


அந்த தலைவர்களின் ஆன்மா கூட இது போன்ற விஷயங்களை அனுமதிக்காது. 
எனவே அரசு இது போன்ற சிலை கலாச்சாரத்திற்கு தடை செய்து அவர்களை 
கவுரவப்படுத்த தபால் தலைகளை வெளியிடலாம்...

இதன் மூலம் சிலை அமைக்கும் செலவு, அதனை பாதுகாக்கும் செலவு, அதன் மூலம் ஏற்படும் கலவர துப்பாக்கிசூட்டிற்கு நஷ்ட்ட ஈடு கொடுக்கும் செலவு எல்லாம் அரசுக்கு மிச்சம்..

அதே நேரம் அப்படி அரசு செய்யுமாயின்... 
அஞ்சல் துறை எங்கள் தலைவரின் முகத்தில் கருப்பு மையில் அச்சிட்டு 
அவமதித்துவிட்டது என்று மற்றொரு கலவரத்திற்கு காரணம் தேடாமல் 
இருப்பார்கள் என்று நம்புவோமாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக