சனி, 9 மே, 2015

அறிவுரை சொல்லும் பெரியோர்களுக்கு ஒரு அறிவுரை..

உங்களது அனுபவத்தால் விளைந்த நன்மைகள், பாதிப்புகள், 
மற்றவரின் அனுபவத்தில் பார்த்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள், 
படித்து தெரிந்து கொண்ட விஷயங்கள் ஆகியவற்றை இன்னொருவருக்கு அறிவுரையை சொல்கிறீர்கள்.. அது நிச்சயம் உங்கள் நல்லெண்ணத்தின் வெளிப்பாடுதான்.. 

நான் இந்த வழியில் சென்றேன்.. இப்படி நடந்தது.. நீ இப்படி செய்தால் இன்னும் நன்றாய் நடக்கும்.. என்று மற்றவருக்கு வழிகாட்டும் ஒரு அறிய முயற்சிதான் அது.. 
ஆனால் அறிவுரை சொல்வது யாருக்கு தான் பிடிக்கிறது.. 

எனவே.. நீங்கள் அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் இடையில் நிறுத்தி 
ஒரு இரண்டு மூன்று நிமிடம் கழித்து "இப்போ என்ன சொல்லிட்டிருந்தேன் " என்று 
ஒரு கேள்வியை எழுப்புங்கள்.. 
கேட்டுக்கொண்டிருந்த நபர் மிக சரியாய் நீங்கள் சொன்னதை 
சொல்லிவிட்டால் தொடருங்கள்.. 
அவர் உங்கள் அறிவுரைக்கு செவிமடுக்கிறார் என்று அர்த்தம்.. மாறாக.. திரு திரு என்று முழித்தால்...



வெத்துக்காட்டுல விதை விதைக்காம பொய் ஆகவேண்டிய வேலைய பாருங்க.. சனியன் எப்படியோ ஒழியட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக