சனி, 9 மே, 2015

ஜெ.ஜெயலலிதா- ஒரு உளவியல் கண்ணோட்டம்.

முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களை அடிக்கடி மாற்றுவதற்கும், கிளை, வட்ட, மாவட்ட செயலாளர்களை மாற்றுவதற்கும், அரசு தலைமை அதிகாரிகளை மாற்றுவதற்கும் அவருக்கு ஏற்பட்டிருக்கும
 ் ஒரு வித உளவியல் பிரச்சினைகளே காரணம்.. தனக்கென குடும்பம் வாரிசு என்ற பாதுகாப்பில்லாமல் தனித்து வாழும் ஒரு பெண் என்ற முறையில் தனக்கு யாரும் உணர்வுப்பூர்வமான ஆதரவாக இல்லை என்பதாலும், தம்மை சுற்றி இருப்பவர்கள் ஆதாயம் வேண்டியே தமக்கு முன்பாக தரை வரை வளைகிறார்கள் என்பது நன்றாக தெரிந்தாதாலும், தமது நம்பிக்கைக்கு பாத்திரமாய் நினைத்தவர்கள் எல்லாம் தம் முதுகுக்கு பின்னால் சமயம் பார்த்து குத்த காத்திருந்தது தெரிய வந்ததாலும் தமக்கிருக்கும் அதிகாரத்தை பயன் படுத்தி அனைவரையும் கட்டுக்குள் வைக்க முயல்கிறார்.. ஒரு கூண்டிற்குள் அடைக்கப்பட்ட எலிக்கு உணவிட முனைந்தால் கூட அந்த உணவுதரும் கரண்டியை தாக்க முற்படுவது போலத்தான் இன்றைய ஜெயலலிதாவின் நிலை.. அவர் மீதான கீழ்த்தரமான விமர்சனங்களைக்காட்டிலும் அவருக்கு தெளிவான உளவியல் ஆலோசனையே இந்த நாட்டிற்கு ஒரு நல்ல முதல்வராக அடுத்த நான்கு ஆண்டுகளுக்காவது அவர் செயல் பட வழிவகுக்கும்.. # பூனைக்கு மணி கட்டுவது யார்..???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக