சனி, 20 ஜூன், 2015

வாங்க ஜெயிக்கலாம் - 5

பணியாளர்கள்.
****************
 ஒருவர் ராணுவத்தில் பணியாற்றினார்.. ஐந்து ஆண்டுகள்.. 
அவர் பணியாற்றிய காலத்தில் யுத்தம் எதுவும் இல்லை என்றாலும் 
அவர் பல்வேறிடங்களில் பணி புரிந்திருக்கிறார்... மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்.. 
பின் ஏதோ தனிப்பட்ட காரணங்களால் விருப்ப ஒய்வு பெற்று திரும்பிவிட்டார்..
இது நடந்து இருபதாண்டுகள் உருண்டோடி விட்டது... 
வந்தவர் வீட்டில் சும்மா இருக்கவில்லை.. முன்னால் ராணுவத்தினர் என்ற 
அடிப்படையில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் 
பாதுகாப்பு அலுவலராக பணியில் சேர்ந்தார்.. சுமார் 18 ஆண்டுகால அனுபவம்...
ஆனால் இன்றும் கூட அவர் ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் 
மேற்கொண்ட பயிற்சியை பற்றியும் , ஈடுபட்ட மீட்புப்பணிகளை பற்றியும் 
பேசிக்கொண்டிருகிறார்... கேட்க தயாராக இருந்தால் நாள் முழுவதும் கூட பேசுவார்... 
ஒவ்வொரு சம்பவத்தையும் பற்றி விவரிக்கும் போதும் 
அவரது கண்களில் அந்த சம்பவம் இப்போது நிகழ்வது போல ஒரு ஆர்வம் தெரியும்...

18 ஆண்டுகாலம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு பணியை பற்றி அவர் எப்போதும் , 
எங்கும் பேசுவதே இல்லை... தன்னுடைய கடமையை சரியாக செய்தாலும் கூட 
அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய ராணுவ பணியை பற்றி விவரிக்கும் 
ஆர்வம் இப்போதுள்ள பணியில் இல்லை..
ஏன் அப்படி..??
காரணம் இருக்கிறது.. அவர் பணியாற்றிய அந்த ராணுவ பணியை 
அவர் நேசித்த விதம் அப்படி.. ஒவ்வொரு நொடியையும் வாழ்ந்திருக்கிறார்.. 
அவரது மூளையின் ஞாபக அடுக்களை அந்த நாட்களால் நிறைத்து வைத்திருக்கிறார்.. 
ஆனால் இப்பொது தொடரும் பணியை ஒரு கடமையாக செய்துகொண்டிருக்கிறார்.. 
அதனால் தான் அவரால் 25 வருடங்கள் கடந்த பின்னும் கூட ராணுவத்தின் பயிற்சி
 நாட்களை பற்றி பசுமையாய் நினைவில் கொண்டிருக்க முடிகிறது..

       துபாய் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஒரு துப்புரவு தொழிலாளி துப்புரவு பணியில்
 ஈடு பட்டுக்கொண்டிருந்தார்.. அந்த நாட்டின் மன்னரும் யூ ஏ ஈ நாட்டின் 
துணை பிரதமருமான திரு ஷேக் முகமது ரஷீது பின் அல் மக்தூம் அவர்கள் 
வழக்கமாக போய் வரும் பகுதி அது... நமது நாட்டில் இருப்பது போல மூன்று 
நாட்களுக்கு முன்பிருந்தே பாதுகாப்பு போலீசார் வரிசையில் நின்று காவல் 
காக்க வேண்டிய அவசியமோ, முன்னும் பின்னும் நூறு வாகனகள் தொடரும் 
ஆடம்பரமோ இல்லாத தேசம் அது.... மன்னர் எங்கு சென்றாலும் ஓரிரு 
வாகனங்கள் மட்டுமே உடன் செல்லும்.. சில நேரம் அது கூட இல்லாமல் 
தனித்தே வருவார் அவர்..அந்த துப்புரவு தொழிலாளி வேலை செய்யும் பகுதியை 
ஒவ்வொருமுறை கடக்கும் போதும் அவரை கவனித்தபடி செல்வார் மன்னர். 
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னுடைய கடமையை செய்துகொண்டிருப்பார் 
அந்த தொழிலாளி.. மிகவும் கவனமாக, பொறுப்புடன், கவனிக்கத்தான் ஆள் இல்லையே 
என்று நிழலில் அமராமல் தன்னுடைய கடமையை செய்வார் அந்த தொழிலாளி..
ஏறக்குறைய ஐந்தாறு ஆண்டுகள் தொடர்ந்து கவனித்தார்... 
அந்த தொழிலாளியின் வேலையில் எந்த வித மாற்றமும் இல்லை.. 
பொதுவாக வேலையில் சேரும் போது கடினமாக உழைக்கும் பலபேர் ஓரிரு 
ஆண்டுகள் அனுபவம் பெற்றபின், வேலை செய்யும் இடம் பழகிய பின் வேலையில் 
சற்றே மெத்தனம் காட்டுவது வழக்கம்.. ஆனால் இந்த தொழிலாளியிடம் 
அப்படியான மாற்றம் எதுவும் இல்லை.. அதே பொறுப்புணர்ச்சி.. அதே கடமை.. 
அதே வேகம்.. ஒரு நாள் அவர் வேலை செய்த பகுதியில் ஒரு வாகனம் நிற்க 
ஒரு போலீஸ் அதிகாரி இறங்கி வந்து அந்த தொழிலாளியை மன்னர் 
அழைப்பதாக கூறினார்.. தொழிலாளி சற்று .அல்ல. நிறையவே வெலவெலத்து போனார்..
 நடுங்கியபடி மன்னர் இருந்த காரின் அருகில் சென்றார்.மன்னர் அவரை பாராட்டி 
சுமார் ஐம்பதாயிரம் திராம்ஸ்களை (இந்திய மதிப்பில் அப்போது ஐந்து லட்ச ரூபாய் ) 
பரிசாக கொடுத்தார்.. இந்த செய்தி அன்றைய நாளிதழ்களிலும் வெளியானது.. 
அனைத்து மாநகராட்சி அலுவலகத்திலும் அந்த தொழிலாளியின் 
புகைப்படம் ஒட்டப்பட்டது...

ரு தொழிலதிபர் வீட்டில் ஒரு காவலாளி வாயில் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்... 
ஒரு நாள் அந்த தொழிலதிபர் அதிகாலையில் வெளியூர் பயணம் செல்ல 
விமான நிலையம் புறப்படும் போது இரவுப்பணியில் ஈடுபட்டிருந்த 
அந்த காவலர் தொழிலதிபரிடம் வந்து, இரவு தாமொரு கனவு கண்டதாகவும், 
அந்த கனவில் அந்த தொழிலதிபர் செல்லவிருக்கும் விமானம் விபத்துக்குள்ளாவதாகவும் , 
அவர் பயணத்தை தள்ளி போட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.. 
தொழிலதிபர் இந்த மாதிரி சென்டிமென்ட் விஷயங்களில் நம்பிக்கை உடையவர்... 
ஆகவே பயணத்தை தள்ளிப்போட்டார்... அந்த காவலர் சொன்னது போலவே 
தொழிலதிபர் பயணிக்க இருந்த விமானம் விபத்துக்குள்ளானது.. 
தொழிலதிபர் அந்த காவலாளியை கூப்பிட்டு பரிசு கொடுத்தார்.. 
அதோடு மட்டுமல்லாமல் அந்த காவலாளியை வேலையை விட்டு நீக்கினார்... 
ஏனென்றால் அந்த காவலாளி கனவு கண்டது பணியில் இருந்த போது ... 
காவல் செய்யும் கடமையில் இருக்கும் ஒருவன், கடமையை செய்யாமல் தூங்கி 
கனவு கண்டிருக்கிறான் என்றால் அவனுடைய வேலையை 
அவன் ஒழுங்காக செய்ய வில்லை என்று தானே அர்த்தம்... 
ஆகவேதான் அவனை பணிநீக்கம் செய்தார்..
மேற்கண்ட மூன்று சம்பவங்கள் நமக்கு சொல்வதென்ன...??
நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாளராய் இருக்கும்பட்சத்தில் 
உங்கள் கடமையை சரி வர செய்யுங்கள்... உடனே பலன் கிடைக்கவில்லை என்று 
ஆதங்கப்படாதீர்கள்.. பலன் கிடைக்கவில்லை என்பதற்காக உங்கள் 
வேலையை வெறும் கடமையாக நினைத்து செய்யாமல் ரசித்து செய்யுங்கள்.. 
நிச்சயம் அதற்கான சன்மானம் உங்களுக்கு நிச்சயமாய் கிடைக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக