சனி, 20 ஜூன், 2015

வாங்க ஜெயிக்கலாம் - 6

மாத்தி யோசிங்க.... 

ந்த ஒரு விசயத்தையும் முடிவு செய்யும் முன் அதனை பல கோணங்களில் 
ஆராய்ந்து அதில் வெற்றிக்கான சரியானதை தேர்வு செய்பவர்களே 
வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு உற்பத்தி தொழிலில் இருப்பவர்கள் அதற்கான சந்தைபடுத்தும் வாய்ப்புகளை 
நன்கு அலசி ஆராய வேண்டும். உபயோகிப்பாளரின் விருப்பங்கள், 
விற்பனையாளரின் விருப்பங்கள், அவர்களின் தேவைகள் ஆகியவற்றை 
கணக்கில் கொண்டு உற்பத்தி செய்யப்படும் போது அது எளிதில் விற்பனையாகிறது.


உலகின் புகழ்பெற்ற ஜப்பானிய மின்னணு உற்பத்தி நிறுவனமான 
சோனி நிறுவனம் 1978 ல் தனி மனித உபயோகத்திற்காக முதன் முதலில் 
வாக் மென் (WALK MEN ) தயாரிப்பில் இறங்கியது. ஏற்கெனவே பல்வேறு 
ரகமான பொழுதுபோக்கு சாதனங்களான தொலைகாட்சிகள், 
டேப் ரெகார்டர்கள்,புகைப்பட கருவிகள் என்று சந்தையில் நன்கு 
அறிமுகமாகி இருந்த சோனி நிறுவனத்தின் வாக்மேன்கள் நிர்ணயித்த விற்பனை 
இலக்கை எட்டவில்லை.


அப்போது நிறுவன தலைவர் பொறுப்பில் இருந்த திரு.நோரியோ ஓஹா ( Norio Ohga ) 
நிறுவனர் திரு.அகியோ மோரிட்டா (Akio Morita) ஆகியோர் மிக தீவிர 
ஆலோசனையில் இறங்கினார்கள்.. 


எவ்வித தொழில் நுட்ப கோளாறும் இல்லை... 
வெளிப்புற தோற்றத்திலும் குறை இல்லை.. விளம்பரத்திற்கும் குறை இல்லை.. 
ஆனாலும் விற்பனை இலக்கை எட்டமுடியவில்லை... 
மிக தீவிரமாய் அலசி பார்த்ததில் கடைசியாக கண்டுபிடித்தார்கள்.. 
சோனி நிறுவன வாக்மேனின் சிறிய அளவை குறிக்கும் விதத்தில் சட்டை 
பாக்கெட்டில் எடுத்து செல்லலாம் என்று விளம்பரம் செய்யப்பட்டது... 
ஆனால் அப்போது சந்தையில் இருந்த எந்த சட்டையின் பாக்கெட்டிலும் 
அந்த வாக்மேன் கொள்ளுமளவு இல்லை... சட்டை பாக்கெட்டை விட 
வாக்மேனின் அளவு பெரிதாக இருந்தது... 
இதன் அளவை சிறிதாக்க இன்னும் தொழில்நுட்ப ஆய்வுகள், 
உற்பத்திகள் .செய்யவேண்டும்.அதே நேரம் உற்பத்தி செய்யப்பட 
வாக்மேன்களை எப்படி விற்பது..?? 
அப்போதுதான் அவர்கள் மாற்றி யோசித்தார்கள்.. ஆம்.. 
சந்தையில் விற்பனையில் முக்கிய இடம்பெற்றிருந்த சட்டை தயாரிப்பு 
நிறுவனங்களை அணுகினார்கள்.. அவர்கள் உற்பத்தி செய்யும் 
சட்டைகளின் பாக்கெட் அளவை பெரிதாக்க அவர்களுடன் ஒப்பந்தம் போட்டார்கள்...
பிறகென்ன.... சந்தையில் இருந்த வாக்மேன்கள் விற்பனை 
இலக்கை எளிதில் எட்டியது...


மாற்று சிந்தனைக்கு இன்னுமொரு உதாரணம்... 
நமது நாட்டில் ஒரு உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 
தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேலை நிறுத்தம் செய்வது வாடிக்கை... 
சிலநேரம் அது நியாயமான காரணமாகவும் இருக்கலாம்.. 
சில நேரம் நியாயமில்லாத காரணமாகவும் இருக்கலாம்... 
ஆனால் வேலை நிறுத்தம் என்ற பெயரில் தொழிற்சாலையின் வெளியே 
அமர்ந்து வேலை நிறுத்தம் செய்வார்கள்... இதனால் உற்பத்தி இழப்பு ஏற்படும்..
 இந்த உற்பத்தி இழப்பு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி கடைசியில் 
அந்த நிறுவனத்தையே மூடவேண்டிய நிலை ஏற்படும்... 
அதனால் முதலாளிக்கும் நஷ்டம்.. தொழிலாளிக்கும் நஷ்டம்...
ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ்... பின்னி போன்ற பெருநிறுவனங்கள் மூடப்பட்டதும்.. 
அதில் பணி செய்த தொழிலாளர்களில் சிலர் தற்கொலை கூட 
செய்துகொண்டதும் எல்லோரும் அறிந்த விஷயம்...


ஆனால் ஜப்பான் நாட்டில் ஒருசில நிறுவனங்களில் கூட இப்படி தங்கள் 
கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.. 
ஆனால் இவர்கள் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டு தெருவில் 
அமர்வது இல்லை.. மாறாக அவர்கள் ஒரு மாற்று யுக்தியை கையாள்கிறார்கள்..


உதாரணமாக ஒரு ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனமென்றால், 
ஒரு சட்டை தயாரிப்பில் ஈடுபடும்போது அவர்கள் சட்டையின் எல்லா 
பாகங்களையும் இணைத்து 80 சதவிகித வேலையை நிறைவு செய்கிறார்கள்.. 
ஒரு காலரையோ.. ஒரு கை பகுதியையோ தைக்காமல் வைத்து விடுகிறார்கள்.. 
ஆக உற்பத்தி நடக்கும்.. ஆனால் அதனை விற்பனை செய்ய முடியாது.. 
அவர்களது கோரிக்கை தொடர்பான ஒரு சுமூகமான முடிவை எட்டிய 
உடன் அவர்கள் நிலுவையில் வைத்திருந்த பகுதியை இணைத்து 
முழுமை செய்கிறார்கள்... அப்போது அவர்களின் உற்பத்தி இலக்கு நிறைவடையும்... 
அவர்கள் செய்த வேலை நிறுத்தம் உற்பத்தியை எந்த விதத்திலும் 
பாதிப்பை ஏற்படுத்தி இருக்காது.. நிறுவனம் நஷடத்தை சந்திக்க 
வேண்டிய அவசியம் இருக்காது...

ஒரு போராட்டத்தில் கூட மாற்று சிந்தனையை கையாள்வதால் 
இழப்பில்லாமல் வெற்றி கிட்டும்.. எதையாவது இழந்த பின் கிடைக்கும் 
வெற்றியில் முழுமை இருக்காது...

வாழ்க்கையை எல்லோருமே வாழ்கிறார்கள்... 
அதில் ஒரு சரியான மாற்று சிந்தனையை கையாண்டு வெற்றி பெறுபவர் 
மட்டுமே வாழ்க்கையை ஜெயிக்கிறார்கள்...


நீங்களும் வாழ்க்கையை ஜெயிக்க வேண்டும்...
என்ன நண்பர்களே... ஜெயிக்கலாம் தானே....???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக