சனி, 20 ஜூன், 2015

பெற்றோரின் வலி

அப்பனாத்தா கட்டி வச்ச வீடு வேணும்... அவுக சேத்துவச்ச சொத்து வேணும்... அவுக வாங்கி வச்சிருக்குற நல்ல பேரு வேணும்... சோறு போடணும்... துணிமணி எடுத்து கொடுக்கணும்... படிக்க வைக்கணும்.. செலவுக்கு காசு கொடுக்கணும்... ஊர்ல போய் ஏதாவது ஏழரைய கூட்டிட்டு வந்து நின்னா பெத்த பாவத்துக்கு பஞ்சாயத்துல கை கட்டி நிக்கணும்...

ஆனா "நீ இல்லன்னா செத்து போயிடுவேன்..." அப்படின்னு டிராமா பண்றவன/பன்றவள நம்பி ஓடிடுவ...... அப்பனாத்தா கவுரவத்த குழி தோண்டி பொதச்சுடுவ ....

நீ கருவா உருவான காலத்துல இருந்து உனக்கு என்ன வேணும்னு பாத்து பாத்து பண்ணின அப்பனாத்தாவுக்கு உனக்கு கல்யாணம் மட்டும் பண்ணி வைக்க தெரியாதான்னு கேட்டு... அப்படி ஏதாவது நடந்தா ஒரு ஆத்துரத்துல "வெட்டி போட்டுடுவேன்"ன்னு சொல்ற அப்பன ஊரு நடுவுல மன்னிப்பு கேட்டு தலைகுனிஞ்சு நிக்கணும்... வெளங்குவியா நீ??

உன்ன பெத்ததுக்கு உண்டான பலன அந்த ஒரு நொடில அனுபவிச்சுடறாங்க அந்த அப்பனாத்தா......

அவங்கள வெட்டி போட நீ யாருன்னு கேக்கற எந்த...... ங்கியும் வரல.. உனக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட... உனக்கு துணி மணி வாங்கி தர.. உனக்கு நல்லது கெட்டது பண்ண... உனக்கு உடம்பு சரியில்லாம போனா வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு கடன ஒடன வாங்கி செலவு பண்ணி டாக்டர் கால்ல விழுந்து கதற....

எல்லாம் அன்னிக்கு அவுகதான் செஞ்சாக... எத்தன எடத்துல கைகட்டி நின்னிருப்பான்..?எத்தனை இடத்துல வயித்த கட்டி புள்ளைக்கின்னு மடில கட்டி கொண்டு வந்திருப்பா....
எத்தன ராத்திரி "ஐயோ... புள்ளைக்கு எறும்பு கடிச்சிருக்குமோ... வயிறு கியிறு வலிக்குமோ... என்னன்னு தெரியலையே"ன்னு நீ எதுக்கு அழுவுறன்னு தெரியாம கெடந்து தவிச்சிருப்பாக...


அமெரிக்காவுல இல்லையாம்.. ஐரோப்பாவுல இல்லையாம்.. காதலுக்கு இத்தன பெரிய பிரச்சினை... ஆமா.. அது சரிதான்... அங்க அப்பன் சொத்து சேர்த்து வைக்கிறதில்ல... நல்லது கெட்டதுக்கு கூடிக்கிற சொந்த பந்தம் இல்ல... நான் சம்பாதிச்சு நான் சாப்பிட்டுக்குவேன்.. நீ சம்பாதிச்சு நீ சப்பிட்டுக்கோன்னு போயிடறான்...

அது மாதிரி உன் அப்பனாத்தா இருந்திருந்தா நீ இன்னிக்கு குண்டிய பைக்க விட்டு எறக்காம சுத்த முடியுமா..?? ஒரு வேளை இங்க அப்படி ஒரு நிலைமை வந்தா யாரவேனா காதல் பண்ணி எவன்/எவள் கூட வேணா ஓடிப்போ...

அப்படி எனக்கு இந்த புள்ளைய/பொண்ண புடிச்சிருக்கு... இவ/இவங்கூட வாழ்ந்தா நல்லா இருக்கும்னு நெனைச்சா அப்பனாத்தாகிட்ட 
சொல்லு... அவுக முடிவு பண்ணட்டும்...

இங்க யாரும் சுயம்பா வளரல... இன்னிக்கு நீ வளர்ந்திருக்கறதுக்கு பின்னால ஒரு சமுதாயத்தோட , உன் சொந்தக்காரங்களோட... உன் மக்க மனுஷாளோட உழைப்பு இருக்கு .. கனவு இருக்கு... இன்னிக்கு உனக்காக இந்த சமுதாயம் செஞ்சது கடன்.. எதுவும் ஓசி இல்ல... அத வட்டியும் மோதலுமா உனக்கடுத்து வரப்போற சந்ததிக்கு நீ திருப்பி செய்யணும்...
இன்னிக்கு உனக்கு ஒரு பொண்ணையோ /பையனையோ புடிச்சுருக்குன்னு அவுக பின்னாடி போறதுக்கு முன்னாடி... நீ அவுககிட்டல்லாம் வாங்கின கடனுக்கு வழிய சொல்லிட்டு போ....
அந்த கடன கொடுக்காம ஓடினா நீ என்ன மனுஷ ஜென்மம்..??
உன் இஷ்டம் போல ஓடிக்கோ... ஆனா அப்படி ஓடனும்னா அப்பனாத்தா கொடுத்த எல்லாத்தையும் விட்டுட்டு போ... யாரு வேணாம்னா...??

உன்னோட உயிரும் அந்த அப்பனாத்தா கொடுத்ததுதான்...!!!

## பல அப்பாவி அப்பனாத்தாவின் உள்ள குமுறல்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக