சனி, 20 ஜூன், 2015

பெயர்- ஒரு பாரம்பரிய அடையாளம்..

மலேஷியாவில் ஒருக்கும் ஒரு செராமிக் நிறுவனத்தில் ஏற்றுமதி பகுதியின் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அலுவலக தொடர்பான ஒரு மின்னஞ்சல் செய்தேன்... செந்தில் குமார் நடேசன் என்ற என்னுடைய பெயரை பார்த்துவிட்டு கண்டிப்பாக நான் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்று தொலைபேசியில் அழைத்து தமிழில் பேசினார்.. 
"உங்க பேர பார்த்த உடனே நினைச்சேன்.. நீங்க தமிழாத்தான் இருக்கும்னு.. எந்த ஊர்.. எவ்வளவு நாளா அங்க இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா. வீட்டுக்கு ஃபோன் பண்ணீங்களா.. எல்லோரும் நல்லா இருக்காங்களா." என்றெல்லாம் அன்போடு விசாரித்தார்.. மேலும் தம்முடைய முன்னோர்கள் (மூன்றாவது தலைமுறை இவர்) பரமக்குடியை சேர்ந்தவர் என்றும்.. பூர்வீக உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள் என்றும் சொன்னார்..

ஒரு பெயர் என்பது எப்படி ஒரு மொழியின் அடையாளமாக இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்திய நிகழ்ச்சி இது... தமிழர்களின் பெயர்களை இன்னும் உற்று நோக்கி ஆராய்ந்தால் அவர்களது பூர்வீகம் , அவர் சார்ந்த பாரம்பரியம் எல்லாவற்றையுமே உணர்த்துவதாய் இருக்கும்...
ஆனால் நாகரீக தொட்டிலில் நீந்த வந்த சிலர் தம்முடைய அடையாளத்தை மறைத்து புதிது புதிதாய் பெயர்வைப்பதன் மூலம் தமக்கு மரியாதை வந்துவிட்டது என்றும்.. நம்முடைய பாரம்பரிய பெயர்களை வைத்தால் அது கேவலம் என்றும் நினைக்கிறார்கள்.. என்னத்த சொல்ல..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக