சனி, 20 ஜூன், 2015

ஆண்மையை பறிக்கும் வளைகுடா வாழ்க்கை... ஒரு அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை...!!!

பொதுவாகவே தற்போதைய காலகட்டத்தில் இருபாலினத்தவரும் சந்திக்கும் மிக தீவிரமான பிரச்சினைகளில் ஒன்று பாலியல் குறை பாடு... 
இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் சமூகமே....தகவல் தொடர்பு சாதனங்களை இணைத்திருக்கும் கதிர் அலைகற்றைகளின் தொடர்ந்த தாக்குதல்... நச்சுப்பொருட்களாகி விட்ட உணவுப்பொருட்கள், மாறிவரும் சுற்று சூழல், மன உளைச்சல், புகை-குடி பழக்கம் என பல்வேறு காரணிகளால் இப்படியான ஒரு நிலைமைக்கு கிட்டத்தட்ட எல்லோருமே வந்துகொண்டிருகிறார்கள்...



ஆனால் துரதிஷ்டவசமாக இதை யாரும் வெளியில் சொல்வதில்லை ... ஒரு தலை வலி, காய்ச்சல் போன்ற சாதாரண வியாதியாக இருந்தாலும் சரி.. கேன்சர், சர்க்கரை, சிறுநீரக செயலிழப்பு போன்ற உயிர்குடிக்கும் வியாதியானாலும் சரி... தைரியமாக சொல்பவர்கள் இந்த பாலியல் குறைபாடுகளை மட்டும் விழியில் சொல்வதில்.... ஏனென்றால் இது பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாததும்... இது சமூக மரியாதை சார்ந்த விஷயமாகவும் இருப்பதால் இதை வெளியில் சொல்வதை தவிர்கிறார்கள்....


வளைகுடா நாடுகளில் பிழைப்புக்காக வந்து இரண்டிரண்டு ஆண்டுகளாக விசா நீட்டிப்பு செய்து வாழ்க்கையின் ஒரு பிரச்சினையை தீர்க்க்கும் முன்பே மறு பிரச்சினையில்  சிக்கி பொருளாதார சிறையில் கைதியாய் அடைபட்டு கிடக்கும் லட்சோப லட்சம் பேர்களில் சுமார் 80% பேர்கள் இப்படியான ஒரு பிரச்சினையில் சிக்கி கிடக்கிறார்கள்...ஆனால் அவர்கள் இதை வெளியில் சொல்வதில்லை...


நமது பகுதியில் உங்களுக்கு தெரிந்தவரை கணக்கிட்டு பார்த்தால் குழந்தை இல்லாதவர்களில் 80% பேர் வளைகுடா நாடுகளில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் குறையாமல் வசித்தவர்கள்தான் என்பதை கண்கூடாக அறியலாம்.... மேலும் அப்படி 10 ஆண்டுகளுக்கு மேல் இங்கு தொடர்ந்து வசித்தவர்களில் பெரும்பாலானோ நிறைய மருத்துவ சிகிச்சை மேற்கொண்டும், பண விரயம் செய்த பின்னுமே குழந்தையை கொஞ்சும் வாய்ப்பை பெற்றவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை...வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் இந்த பிரச்சினை அதிகம் வர என்ன காரணம்...???

1. வெப்பநிலை : -மனித உடம்பு ஒரு ஆச்சர்யத்தின் உச்சகட்டம்... இனவிருத்திக்கான உயிரணுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான விதை பைகள் உடம்பை விட்டு தனித்து இருக்கின்றன.. இதற்கு காரணம் உடலின் சாதாரண வெப்ப நிலையை விட அந்த விதை பைகள் குறைவான வெப்பநிலையில் இருக்கவேண்டும் என்பதே ஆகும்.. மேலும் அவ்வாறு குறைவான வெப்பநிலையில் இருந்தால் மட்டுமே அவைகள் உயிரணுகளை வீரியத்துடன் உருவாக இயலும்.. ஆனால் வளைகுடா நாடுகள் வெய்யில் மட்டுமே நிறைந்த வெப்ப நாடுகள்.. இங்கே சாதாரண தண்ணீர் கோடா சூடான நிலையிலேயே கிடைகிறது.. வெப்ப காலங்களில் குழாய்களில், குளியலறைகளில் வரும் தண்ணீரி சுமார் 30 முதல் 40 டிகிரி வெப் நிலையிலேயே கிடைக்கிறது.. பெரும்பாலானோர் அதில் தான் குளிக்க வேண்டிய கட்டாயம்.. குளிர் காலத்திலோ தண்ணீர் ஐஸ் போல இருப்பதால் அவர்கள் வெந்நீரில் குளிக்க வேண்டிய கட்டாயம்... ஆகவே தொடர்ந்து வெந்நீரை மட்டுமே உபயோகிப்பதால் அவர்களின் உயிரணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது....


2.உணவுப்பழக்கம் :- நமது நாட்டில், நமது வயல்களில் விளைவிக்கின்ற பொருட்கள் கூட மரபணு மாற்று உணவாகவும், பூச்சிக்கொல்லிகள் கலந்த விஷத்தன்மை உடையதாகவும் மாறிப்போய் விட்டிருக்கிறது... அதிலும் வளைகுடா நாடுகளில் இருப்போர் அதிகம் உபயோகிப்பது இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே சாகடிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட கோழிகள் மற்றும் இறைச்சிகள்.. (frozen food ) இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ந்து உண்பது இவர்களின் ஆண்மையை கபளீகரம் செய்கிறது...



3. மது- புகை பழக்கங்கள் :- கையில் தொடர்ந்த பணப் புழக்கம், வேலையில் கஷ்டம், தனிமை சுதந்திரம், மலிவான விலையில் கிடைக்கும் மது. (அதுவும் டோர் டெலிவரி) இப்படி கவலையும், கட்டுப்பாடற்ற, கண்டிக்க ஆட்களற்ற தனிமையும் சேர்ந்து பெரும்பாலானோர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்... அந்த மதுவோடு தொடர்ச்சியாக கொண்ட உறவு இவர்களின் தொப்புழ்கொடி உறவையே துண்டிக்கபோவது தெரிவதில்லை இவர்களுக்கு.....


4. சுய பழக்கம் :- மலிவாக கிடைக்கின்ற நீலப்பட குறுந்தகடுகள்.... அரை நிர்வாணமாக திரியும் பன்னாட்டு அழகிகள்... உடல் சூடு... பாலியல் இச்சைகளை தணித்துக்கொள்ள மனைவி இல்லாத தனிமை.. கொழுப்பு நிறைந்த உணவுகள்.. இப்படியான ஒரு சூழலில் வாழும் வளைகுடா இளைஞன் அதற்கு மாற்று வழியாக கையிலெடுக்கும் ஆயுதம் சுய இன்ப பழக்கம்....தொடர்ந்து 7 முதல் பத்தாண்டுகளுக்கு மேலாக இப்பழக்கத்தை கையாள்பவர்கள் நாளடைவில் ஒரு குழந்தைக்கு தந்தையாகும் வாய்ப்பையும் , உடலுறவிற்கே தகுதி இல்லாத நிலையையும் அடைகிறார்கள்...


இப்படியாக பல்வேறு காரணிகளால் தங்களது சந்ததியை வளர்க்கும் வாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களின் கடைசி காலம் வரையில் வளைகுடாவிலேயே வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஒரு நடைபிணமாய் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள்....


ஒரு வகையில் இவர்களும் காயடிக்கப்பட்ட காளை மாடுகள் தான்....
எனதருமை இளைஞர்களே.... வளைகுடாவில் 7-8 ஆண்டுகள் தங்குவதென்பது ஆபத்தின் உச்சகட்டம்... குடும்பத்தோடு இருப்பவர்கள் பரவாயில்லை... இங்கே பேச்சிலர் வாழ்க்கை வாழ்பவர்கள் கூடுமான வரையில் அதற்கு முன்பாகவே நாடு திரும்புதல் நலம்.. குறிப்பாக திருமணமாகாத இளைஞர்கள் வளைகுடாவிற்கு வந்து அதிக பட்சம் நான்காண்டுகளுக்குள் திருமணத்தை முடித்துவிடுங்கள்.... அப்புறம் குழந்தைகள் பிறந்த பின்பு அவர்களின் எதிர்கால தேவைக்காக வேண்டுமானால் வளைகுடாவில் முகாமிடுங்கள்.... 
பிரச்சினை எந்த காலத்திலும் ஓயப்போவதில்லை... கடன் கடன் என்றோ.. அதை செய்யவேண்டும் இதை செய்ய வேண்டும் என்றோ தேவைகளுக்காகவோ- பேராசைகாகவோ நீங்கள் வளைகுடாவில் உங்கள் இளமையை அடகு வைத்து சம்பாதிக்கும் காசை அனுபவிக்க நாளை வாரிசுகள் இல்லாமல் போக கூடும்...

பிரச்சினைகளை பற்றி அலசிவிட்டோம்... இந்த பிரச்சினைகள் வளைகுடாவில் வசிக்கும் இளைஞர்களுக்கு மட்டும் தான என்றால்... இல்லை... பொதுவாகவே இந்த பிரச்சினை இருப்பதை அறிய முடிகிறது.... தமிழ்நாட்டை பொருத்தவரை, மலிவாக கிடைக்கும் மது... புகை.. ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இருக்கும் நவீன அலைபேசிகளில் சேமிக்கப்பட்ட நீல பட காட்சிகளின் தாக்கத்தால் செய்யும் சுய இன்ப பழக்கம், உலகின் எந்த பகுதியிலும் காற்று போல் நிறைந்துவிட்ட அலைகற்றைகளின் தொடர் தாக்குதல்... போன்றவற்றால் இந்த பாதிப்பு உள்ளூர் இளைஞர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது....


மேலும் இன்னொரு விஷயத்தையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.... உடற்கூரியலாக பெண்களின் பாலியல் தேவைகள் சுமார் 30 வயது தொடங்கி 45 வயது வரை அதிகமாக இருக்கும் என்று உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.... (மெனோபாஸ் என்று சொல்லப்படும் மாதவிலக்கு நிற்கும் காலம் வரையில் )
இந்த நேரத்தில் அவர்களின் உடல் தேவைகளை கணவனால் நிறைவேற்றமுடியாத போது அவர்களின் தேவைகளை அடக்குகிறார்கள்... இதனால் அவர்கள் மனோ ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்... இதனை நேரடியாக வெளிப்படுத்த முடியாதவர்கள் கோபம், எரிச்சல் போன்ற முறைகளில் அந்த வெறுப்பை உமிழ்வதால் குடும்பத்தில் தொடர்ந்த சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் நிம்மதி தொலைகிறது... அப்படி இல்லையென்றால் அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேறொரு இளைஞனை அதிலும் வயது குறைவான இளைஞனை தேடிக்கொள்கிறார்கள்....




பிரச்சினை பிரச்சினை என்று மட்டும் சொன்னால் போதுமா... அதற்கான தீர்வு....???


பொதுவாக தமிழகத்தில் திருமண முறை என்பது ஆணுக்கு அதிகமாகவும்.. பெண்ணுக்கு வயது குறைவாகவும் இருப்பது போல் நடத்தப்படுகிறது.... இந்த வித்தியாசம் 5 முதல் 12 வயது வரை ஆணை விட பெண்ணுக்கு குறைவாகவே இருக்கிறது.... ஆண்களுக்கு 18 முதல் 24 வயதிலும் ஆண்களுக்கு 30 முதல் 35 வயதிலும் திருமணம் செய்து வைக்கப்படுகிறது..
இந்த முறை முற்றிலும் மாற வேண்டும்....

ஆண்களுக்கு முன்கூட்டியே திருமண திட்டமிடுதலும்.. பெண்களுக்கு சற்று தாமதப்படுத்தி திருமண திட்டமிடுதலும் செய்யப்பட வேண்டும்.... அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்குமான வயது இடைவெளி அதிக பட்சம் இரண்டு வயதிற்கு மேல் இருக்கவே கூடாது.... இன்னும் முற்போக்காய் சிந்தித்தால் ஆணை விட பெண்ணுக்கு ஓரிரு வயது அதிகமாக இருந்தால் கூட இன்னும் நலம்....


இதன் மூலம் ஆண் /பெண்களின் உடல் தேவைகள் அவர்களுக்கு தேவைப்படும் காலம் வரையில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.. இந்த உடல் தேவைகள் பூர்த்தி அடைவதன் மூலம் அவர்கள் மனோ ரீதியான நிம்மதியுடன் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சமூகத்தின் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக