திங்கள், 27 ஜூலை, 2015

அதிகாரம்+சமயோசிதம் + சாதுர்யம் = அன்னை இந்திரா

பாலியல் குற்றம் என்பது சவூதியில் மிகப்பெரிய தண்டனைக்குரியது.. நடு முச்சந்தி, நாற்சந்தியில் வைத்து பொது மக்களின் முன்னிலையில் தலையை வெட்டுவார்கள்.



இந்தியாவின் இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது பாலியல் குற்றத்திற்காக இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கும் இப்படியான மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்தியாவுடன் நட்புறவோடு இருந்ததாலும், அன்னை இந்திரா ஆசியாவின் மிகப்பெரும் செல்வாக்குள்ள தலைவர் என்பதாலும் பிரதமர் அலுவலகத்திற்கு இந்த தகவல் சவூதி அரசால் சொல்லப்பட்டது. இது அன்னை இந்திராவின் கவனத்திற்கு வர.... அவர் சவூதி மன்னரை நேரடியாக தொடர்பு கொண்டு, தண்டனையை நிறைவேற்ற ஒரு நாள் அவகாசம் கேட்டார்.
சவூதி அரசு தண்டனையை ஒரு நாள் நிறுத்தி வைத்தது. அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து சவூதி மன்னர் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது.... இந்தியாவில் பாலியல் குற்றம் புரிந்ததற்காக நூற்றுக்கும் மேற்பட்ட சவூதியர்களை கைது செய்திருப்பதாகவும், சவூதியில் கைது செய்யப்பட இந்தியர்களுக்கு கொடுக்கும் அதே தண்டனையை அந்த நூற்றுக்கு மேற்பட்ட சவூதி நாட்டை சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கப்போவதாகவும் அந்த தகவல் சொன்னது..
பதறிப்போன சவூதி அரசு அந்த இந்தியர்களை இந்திய அரசிடம் ஒப்படைத்தது....

அந்த இரண்டு மணி நேரத்தில் என்ன நடந்திருக்கும்????

இந்தியாவின் பெருநகரங்களின் நட்சத்திர விடுதிகளில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.. அங்கே தங்களுக்கு தொடர்பில்லாத பெண்களுடன் உல்லாசமாக தங்கி இருந்த சவூதியர்கள் மட்டும் கைது செய்யப்பட்டார்கள்.. பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் நாட்டு சட்டம் எப்படி அவர்களுக்கு முக்கியமோ, அதேபோல இந்திய சட்டம் எங்களுக்கு முக்கியம் என்ற சவால் இருந்தது அந்த மிகத்தெளிவான, சமயோசிதமான முடிவில்.... 
அன்று அன்னை இந்திரா போன்ற ஸ்திரமான முடிவெடுக்கும் ஆற்றலும், பலமும் உள்ள ஒரு பிரதமர் இன்று இருந்திருந்தால் அமேரிக்கா இந்திய தூதுவரை கை விலங்கிட்டு அழைத்துச்சென்ற அவலம் நேர்ந்திருக்காது.. என்ன செய்ய....???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக