செவ்வாய், 28 ஜூலை, 2015

மயில்



மயில் பற்றி என்ன நினைகிறீர்கள்??

இந்தியாவின் தேசிய பறவை... தமிழ் கடவுள் முருகனின் வாகனம்... பார்க்க அழகாய் இருக்கும்.. மேகம் கருத்து மழை வரும் சூழல் நிலவினால் தோகை விரித்து ஆடும்... சமீப காலமாய் பரவலாய் கண்ணில் படுகிறது...

எல்லாம் சரிதான்.... ஆனால் இது, ஏற்கெனவே இடுபொருள் விலையேற்றம், மழையின்மை, மின்சார தட்டுப்பாடு , உற்பத்தி செலவு அதிகரிப்பு, விற்பனை விலை குறைவு, ரியல் எஸ்டேட் முதலைகள் என பல பல பிரச்சினைகளில் சிக்கி சீரழிந்து கொஞ்சமாய் எஞ்சி இருக்கும் விவசாயிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பூதாகரமாய் வளர்ந்து வரும் சவாலான பிரச்சினை என்பதை எப்போதாவது யோசித்து இருகிறீர்களா???

ஆஸ்திரேலியாவில் பசுமை சூழ்ந்த ஆள் நடமாட்டமிலாத தீவில் ஒருமுறை சில முயல்கள் விடப்பட்டது... அங்கே முயல்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் தாராளமாய் கிடைத்தன... அங்கே அந்த முயல்களுக்கு எதிரிகளே இல்லை...
இந்த சூழ்நிலையில் வளர்ந்த முயல்கள்.. இனவிருத்தி செய்து செய்து பல்கி பெருகின... ஆரம்ப காலத்தில் அவைகள் குறைவாக இருந்த காலத்தில் போதுமான அளவு உணவு கிடைத்தது.. முயல்களின் எண்ணிக்கை பெருக பெருக அவைகளின் உணவின் அளவு குறைந்தது.. நாளடைவில் தாவரங்களும் அழிந்து உணவில்லாமல் முயல்களும் அழிந்தன...

(இதற்கு ஆதாரம் கொடு என கேட்காதீர்கள்.. நான் எங்கோ படித்தது)

இது முயல்களுக்கு மட்டுமல்ல.. எல்லாவற்றிற்கும் பொருந்தும்.. இதனாலேயே பூமியின் இயக்கத்தை சமநிலைப்படுத்த இயற்கை பல்வேறு உபாயங்களை கையாள்கிறது... தாவரங்கள்- தாவர உண்ணிகள்- மாமிச உண்ணிகள் என்பவை சீராக அமையப்பெற்ற உணவுச்சங்கிலி ஒரு முக்கோண வடிவில் அமைந்திருக்கிறது...

முருகநுண் வாகனமென்பதாலோ, தேசியப்பறவை என்பதாலோ, வன உயிரின சட்டம் பாயும் என பயந்தோ யாரும் மயில்களை வேட்டையாடுவதில்லை... அதனாலேயே சமீப காலமாய் மயில்களின் எண்ணிக்கை பல்கி பெருகி வருகிறது

பல்வேறு இயற்கை சவால்களையும், கார்பொரேட் கம்பெனிகளின் திட்டமிட்ட தடங்கல்களையும் எதிர்த்து போராடி விவசாயிகள் பயிரிடும் தானியங்களை இந்த மயில்கள் கூட்டமாய் வந்து கபளீகரம் செய்கின்றன.. மயில்களின் எண்ணிக்கை பெருக பெருக இது விவசாயிகளுக்கு மாபெரும் சவாலாக அமையும்...

பார்க்கலாம்... இயற்கை எப்படியாவது சமன் செய்ய போகிறதா...?? இல்லை.. விவசாயிகளுக்கு சங்கூத இயற்கையும் உடந்தையாயிருக்க போகிறதா..??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக