செவ்வாய், 28 ஜூலை, 2015

இது கதையல்ல.. நிஜம்...



பட்டுக்கோட்டையில் பிரபலமானவர் திரு விஸ்வநாதன் அவர்கள்.. நகரமன்ற தலைவராகவும் , தி மு க, ம தி மு க ஆகிய கட்சிகளின் முக்கிய பதவிகளிலும் இருந்தவர்.. தொழிலதிபர்.

தி மு க வில் இருந்து திரு வை கோ அவர்கள் பிரிந்து தனிக்கட்சி தொடங்கியபோது திரு விஸ்வநாதன் அவர்களும் வை கோ அவர்களை தொடந்து எங்கள் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ம தி மு க கட்சியின் கிளைகள் அமைப்பதில் ஈடுபட்டார்..

அந்த வகையில் எங்கள் ஊர் அருகில் இருக்கும் மற்றொரு ஊரில் கிளைக்கழகம் அமைப்பது தொடர்பாக ஒரு இளைஞருக்கு இரண்டொரு நாட்கள் திரு விஸ்வநாதன் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது...

சில நாட்கள் கழிந்தபிறகு ஒருநாள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தின் அருகில் திரு விஸ்வநாதன் தன்னுடைய கட்சி பிரமுகர்களுடன் நின்றுகொண்டிருந்திருகிறார்... அந்த சமயம் அவரை அணுகிய அந்த இளைஞர் ( கிளைக்கழகம் அமைப்பதில் தொடர்பானவர்)

"வணக்கம்ணே.."
"வணக்கம் தம்பி.. சொல்லுங்க.."
"நான் ........... இந்த ஊர் அண்ணே... நீங்க கொடி ஏத்த வந்தப்போ நாம பேசி இருக்கோம் அண்ணே..."

"அடடே.. அப்படியா... சொல்லுங்க தம்பி.. என்ன செய்யணும்...?"

"மெட்ராஸ் போகணும்னே.. பஸ்ல டிக்கெட் இல்லைன்றான்.. நீங்க சொல்லி ஒரு டிக்கெட் வாங்கி கொடுங்கண்ணே..."

பெரிய பெரிய பஞ்சாயத்துக்கள், உதவிகள் என்றே வந்தவர்களை பார்த்தவருக்கு இந்த இளைஞரின் கோரிக்கையை கேட்டதும் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லையாம்...

"என்ன தம்பி.. இதுக்கெல்லாமா.. நான் வரணும்.." என்று தம்மை தாமே நொந்து கொண்டு , உடனிருந்தவரிடம் சொல்லி அனுப்பி இந்த பையனுக்கு ஒரு சீட் தர சொல்லுங்க என்றாராம்...

நீதி :- தகுதியற்றவர்களுக்கு தரத்தின் உயரம் தெரியாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக