செவ்வாய், 28 ஜூலை, 2015

பகத் சிங்




பகத் சிங் பத்தி பல வரலாறுகள் படிச்சிருப்போம்... லாலா லஜூபதி ராய் நடத்தின ஊர்வலத்துல பயங்கரமான வன்முறை நடத்தி , லஜூபதி ராய் மரணத்திற்கு காரணமான ஸ்காட் அப்படின்ற வெள்ளைகார கமாண்டர கொலை செய்ய திட்டம் போட்டாங்க பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்.. ஆகிய மூணு பேரும் ,,,

ஆனா துரதிஷ்டவசமா அந்த திட்டத்துல சறுக்கல் ஏற்பட்டு ஸ்காட்டுக்கு பதிலா சாண்டர்ஸ் அப்படின்ற உதவி கமாண்டர பகத் சிங் சுட்டு கொன்னுட்டார்...

அப்புறம் அவர கைதுபன்னி தூக்கு தண்டனை கொடுத்துட்டாங்க... அப்போ பகத் சிங் அப்பா வெள்ளைகார அரசாங்கத்துக்கு "என் பையன் தெரியாம பண்ணிட்டான்.. தப்புதான்.. மன்னிச்சுக்குங்க.... அவன் இனிமே இப்படி எந்த செயலும் செய்யாம, எந்த போராட்டத்துலயும் ஈடுபடாம நான் பார்த்துக்கிறேன்.. அவன் தூக்கு தண்டனைய ரத்து பண்ணிடுங்க"ன்னு ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிட்டார்...

இத கேள்விப்பட்ட பகத் சிங் தன்னோட அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதுறார்... "உங்கள அப்பான்னு சொல்லிக்கவே வெட்கப்படுறேன்... உங்க ஒரு மகனோட உயிருக்காக நாட்டோட கவுரவத்த அடகு வச்சுட்டீங்களே.. இனி நான் உங்களுக்கு புள்ளையும் இல்ல.. நீங்க எனக்கு அப்பாவும் இல்ல.." அப்படின்னு எழுதினர்...

கடைசியா தூக்கு தண்டனை நிறைவேத்துற நாள்ல முகத்த மூட போனாங்க... அப்போ அதை தடுத்த பகத் சிங் , அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்து அதை நிறைவேத்த வந்திருந்த ஜட்ஜ பார்த்து சொன்னார்....
"உலகத்துலேயே பெரிய அதிஷ்டசாலி நீங்கதான்... கண்ண தொறந்துகிட்டே சாகப்போற ஒரு வீரன பார்க்கப்போற முதல் ஆள்..."

இதுல எல்லோருக்குமே ஒரு வருத்தமான விஷயம் என்னன்னா... பகத் சிங்க தூக்குல போட்டுக்குங்க.. ன்னு காந்தியடிகள் ஒப்புதல் கையெழுத்து போட்டதுதான்... (காந்தி - இரவின் ஒப்பந்தம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக