திங்கள், 27 ஜூலை, 2015

மயிரு....



சிலருக்கு இது கெட்ட வார்த்தை.... சிலருக்கு இது எப்போதோ கேட்ட வார்த்தை...

சலூன்கடை, கோயில்களில் வெட்டி /வழித்து எறியப்படும் இந்த "மயிரு" என்ன ஆகிறது தெரியுமா???

இதனை நன்கு சுத்தப்படுத்தி ( அழுக்கு, சாயம் முதலானவற்றை) பிறகு சுமார் ஆயிரத்து இருநூறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொதிக்க வைக்கும்போது அதிலிருந்து புரதம் தனியாக பிரிந்து வருகிறது... இந்த புரதமே சாக்லேட் தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருள்...

"ப்ராட்கேம் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா" என்ற நிறுவனம், தமிழ்நாட்டில் மதுராந்தகம் அருகில் படாளம் கூட்டு ரோடு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையிலும், பாண்டிச்சேரியில் இதே பெயரில் இன்னொரு தொழிற்சாலையும் இப்படி "மயிரில்" இருந்து புரதம் பிரித்தெடுக்கும் வேலையை செய்கின்றன...

உலக சாக்லேட் தினமாம்.... அதற்கும் ஒரு வாழ்த்த போட்டு வைப்போம்...

(அது சரிப்பா.... இந்த விஷயத்துக்கும் நீ போட்டிருக்க படத்துக்கும் என்னய்யா தொடர்பு....??? நல்லா உத்து பாருங்க.... இந்த படத்துல இருக்க பொண்ணா பொறந்த புள்ளைங்க போட்டிருக்கிறது சாக்லேட் ட்ரெஸ் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக