செவ்வாய், 28 ஜூலை, 2015

நேர்மை




சுதந்திர போராட்ட விஷயமாக திருச்சியில் ஒருவரது வீட்டில் மகாத்மா காந்தி அவர்கள் தங்கி இருந்தார்... அப்போது அங்கு வந்த தேச பக்தர்கள் சுதந்திர போராட்டத்திற்கென நிதி கொடுத்தனர்....

அவர் தங்கி இருந்த வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த பெண் ஒருவர் தயங்கி தயங்கி மகாத்மா அருகில் வந்து ஒரு அணா நாணயத்தை கொடுத்திருக்கிறார்...

இது எதற்காக அம்மா.. ஏன் கொடுக்கிறாய்.. என்று காந்தி மகான் கேட்க... "நீங்க எல்லோர்கிட்டயும் நிதி வாங்குறீங்க... என்கிட்டே இதுதான்யா இருக்கு.. குழந்தைக்கு பால் வாங்க வச்சிருந்தேன்.." என்றாராம்...
கண்ணில் நீர் துளிர்க்க அந்த காசை வாங்கி பத்திரப்படுத்திய காந்தியடிகள் அன்று மாலை திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது பொதுமக்கள் முன்னிலையில் அந்த ஒரு அணாவை காட்டி, ஒரு ஏழை தாய் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கவும், இந்த நிதி எல்லாம் தேசத்திற்கு செலவிடப்பட வேண்டும் என்பதை எனக்கு நினைவு படுத்திக்கொண்டே இருக்கவும் நான் இந்த ஒரு அணாவை என்னுடைய ஆடையில் முடிந்து வைத்துக்கொள்கிறேன் என்றாராம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக