செவ்வாய், 28 ஜூலை, 2015

தமிழக அரசின் டக்கு

நவீன மதுபான விடுதிகளில் நடக்கும் சிறப்பு கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள பெண் துணை இல்லாமல் தனியாக வரும் ஆண்களை அனுமதிப்பதில்லை...
(ஆனால் தனியாக வரும் பெண்களை அனுமதிப்பார்கள்)

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்...

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் வரும்போது அந்த ஆணின் கவனம் அவனுடன் வந்த பெண் மீது மட்டுமே இருக்கும்... இதனால் வேறொரு பெண்ணுக்கு தொல்லை இருக்காது....

ஆக.... மதுபான விடுதிகளில் வந்து குடிக்கும் ஒரு குடிகாரியின் பாதுகாப்புக்காக இன்னொரு குடிகாரியை உருவாக்குகிறார்கள்... ஆடைகளை அரை குறையாக அவிழ்த்துக்காட்டியும், அக்குளை காட்ட சொல்லியும் எலிப்பொறியில் வைக்கும் மசால் வடை போல பெண்களை சித்தரித்து வியாபாரம் செய்யும் அதே வழக்கம்... இந்த மதுபான விடுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.. பாதுகாப்பு.... அந்த முதல் குடிகாரியை உள்ளே வராமல் தடுத்தால் பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவலை இவர்களுக்கு எதற்கு??? பெண்கள் வந்தால்தான் அவர்களுக்காக ஆண்கள் வருவார்கள் என்ற வியாபார யுக்திக்கு இவர்கள் கட்டும் சப்பை கட்டு.. பெண்களுக்கான பாதுகாப்பு.


நீதிபதிகளை கிரிக்கெட் கிளப்பிற்குள் வேட்டி கட்டி அனுமதிக்காததால் தமிழக கலாச்சாரமே சீரழிந்து போய் விட்டதாக பொங்கி எழும் மக்களே.... சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்று அறிவித்த முதல்வரே... 

பப்புகளில் ஒரு ஆண் குடிப்பதென்றால் ஒரு பெண்ணும் அங்கே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தி நாகரீகம் என்ற பெயரில் குடும்பத்தோடு குடிகாரர்கள் ஆக்கும் இந்த கலாச்சார சீரழிவை கண்டுகொள்ளாத நீங்கள் எல்லோரும் கிரிகெட் கிளப்பில் வேட்டி கட்டியவர்களை விடாமல் தடுத்ததை தட்டிக்கேட்டுத்தான் கலாச்சாரத்தை காக்க போகிறார்களா???

அட போங்கய்யா... நீங்களும் உங்க டக்கும்...!!! 

புகைப்படம்: - சென்னையில் இருக்கும் ஒரு மதுபான விடுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக