செவ்வாய், 28 ஜூலை, 2015

கமலா நேரு



வசதியான குடும்பத்தில் பிறந்து தன்னுடைய 17 வது வயதில், மனசு நிறைந்த கனவுகளுடன் இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பணக்காரர்களுள் ஒருவரான , இந்திய அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக விளங்கிய , லண்டனில் பயின்றுவந்த ஒரு இளைஞனை மனம் புரிந்துகொண்டபோது வாழ்க்கை இவ்வளவு பெரிய போராட்டமாய் இருக்கும் என அவர் நினைக்கவே இல்லை...

ஒரு பெரிய குடும்பத்தின் மருமகளாக வாழ்வை துவங்கிய அவர்.. கணவரை பார்க்க வருபவர்கள், கணவரின் நண்பர்கள் என தேசபக்தர்களின் தொடர்புகள் கிடைக்கவும், கணவர் அடிக்கடி கைதாகி சிறைக்கு சென்று விடுவதாலும் தம்முடைய கவனத்தையும் தேச விடுதலை போராட்டத்தின் பால் திருப்பினார்... இதற்கிடையில் திருமணமான முதல் வருடத்திலேயே ஒரு பெண் குழந்தைக்கு தாயானார்... அடுத்த குழந்தை ஏழு வருட இடைவெளியில்... ஆண் குழந்தை.. துரதிஷ்டவசமாக அந்த ஆண் குழந்தை பிறந்த ஒரே வாரத்தில் இறந்துவிட... நெகிழ்ந்த மனதை கல்லாக்க தன்னுடைய முழு கவனத்தையும் சுதந்திர போராட்டத்தின் பக்கம் திருப்ப... கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்...

பிற்பாடு விடுதலையாகி காந்தியடிகளின் சபர்மதி ஆஸ்ரமத்தில் அன்னை கஸ்தூரிபாய் அவர்களுடன் இணைந்து ஆசிரம பணிகளை மேற்கொண்டார்... காசநோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் நோய் முற்றி மேலும் பலவீனமடைய சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சைக்காக சென்றார்.. சென்றவர் மீளவே இல்லை... தன்னுடைய 36 வது வயதில் மரணம் அவரை ஆட்கொண்டது...

அவர்...?? ஜவஹர்லால் நேருவின் மனைவி என்று மட்டுமே மக்களுக்கு அறிமுகமான கமலா நேரு..!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக