செவ்வாய், 28 ஜூலை, 2015

எம் மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...!!!



கல் நெஞ்சுக்காரர்களையும் கலங்கடித்துவிட்டது அந்த மரணம்.. அழக்கூட திராணியற்று வதங்கிப்போய் அந்த சவப்பெட்டியின் தலைப்பகுதியில் அமர்ந்திருந்தார் அந்த பெண்.. இறந்தவரின் மனைவியாயிருக்கும்...

கல்யாணமான ஐந்தாவது மாதம் விபத்தில் மரணமடைந்த இளைஞனின் சடலம் மாலைபோட்டு கிடத்தப்பட்டிருந்தது... 

ஒரு வயதான மூதாட்டி கையில் ஒரு சொம்புடன் வந்தார்.. கூட்டத்தினர் முன்னிலையில் அந்த சொம்பை உயர்த்திக்காட்ட கூட்டம் அழுகை நிறுத்தி உற்றுப்பார்க்க.. அந்த சொம்பை உயர்த்திய மூதாட்டி இன்னொரு கையில் இருந்து வெள்ளை நிறத்தில் மூன்று பூக்களை அந்த சொம்பினுள் போட்டார்...
கதறல் அதிகமானது...

எதற்காக அவர் அப்படி செய்தார்..?? விசாரித்ததில் கிடைத்த விளக்கம்...

மரணமடைந்தவரின் மனைவி மூன்று மாத கர்ப்பம்.. கணவன் இறந்த பின் குழந்தை பிறந்தால் அந்த பெண்ணை பற்றி, அவளின் நடத்தை பற்றி அறியாமல் கூட எவரும் தவறாக பேசி விட கூடாதென கூட்டத்தின் முன்னிலையில் தெரிவிக்கப்பட்ட தகவல் அது...

# ஒவ்வொரு சடங்கும் ஒரு காரணத்துடன்... எம் மூதாதையர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக