செவ்வாய், 28 ஜூலை, 2015

நம்பிக்கை



காலையில் அறையை பூட்டிவிட்டு அலுவலகம் வந்துவிட்டு திரும்ப அறைக்கு போய் பார்க்கும் போது அறை திறந்து இருந்தது... 

என்னை தவிர மதிப்பு மிக்க வேறு ஒரு பொருள் என்னிடம் இல்லை என்றாலும் கூட.... சில்லரை சாமான்கள் வாங்க வேண்டுமென்றால் கூட இந்த பாழாப்போன பணம் வேண்டுமே என்பதால் சற்றே பதட்டம் எட்டிப்பார்த்தது...

அறைக்குள் நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த நண்பரை பார்த்ததும் சற்றே நிம்மதி வந்தாலும் அடுத்த கேள்வி உடனே எட்டிப்பார்த்தது...

"எப்படி தல உள்ள வந்தீங்க.. சாவி ஏது,,? "

"வந்தேன்.. உங்கள காணல... பூட்ட இழுத்து பார்த்தேன்.. திறந்துடுச்சு.."

என்னை பொறுத்தவரை ஒருவரை நம்பி ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டால் அவரை சந்தேகப்பட கூடாது.. எனவே கதவை பூட்டிய பின் நான் அதனை சோதிக்க வில்லை... நான் என்னுடைய நிலையில் உறுதியாய் இருந்ததை போல, அந்த பூட்டும் என் நம்பிக்கையை காப்பாற்றி இருக்க வேண்டுமல்லவா ???? அதுதானே பரஸ்பர நம்பிக்கை...

(அந்த பூட்டை பிடித்து இழுத்தால் திறந்துகொள்ளும் என்ற விஷயம் எனக்கு தெரியாது.. நான் தினசரி அதற்கென தயாரிக்கப்பட்ட சாவியை கொண்டுதான் திறப்பேன்)

என்னுடைய நம்பிக்கையை காப்பாற்றாத அந்த பூட்டை மறுநாள் அந்த பூட்டை குப்பை தொட்டியில் வீசி விட்டு வேறு ஒரு பூட்டு வாங்கினேன்...

நீதி 1 :- யாரையும் யோசிக்காமல் நம்ப கூடாது..

நீதி 2 :- நமது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக அவர்கள் இல்லை என்பது தெரிந்த உடனே அவர்களை தூக்கி எரிய தயங்க கூடாது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக