செவ்வாய், 28 ஜூலை, 2015

படித்த முட்டாள்கள்



நமது முந்தைய தலைமுறைகளை விட, நவீன விஞ்ஞான, கல்வி அறிவு பெற்ற இளைய தலைமுறையினருக்கு தான் ஜாதி வெறியும் , மத வெறியும் அதிகமாக இருக்கிறது... இதற்கு காரணம் என்ன???

சுதந்திரமடைந்த காலத்தில் வெள்ளைக்காரர்களிடம் இருந்து ஆட்சி கைமாறின சமயத்தில் பெரிதாய் மதக்கலவரம் வெடித்தது... அதற்கு காரணம் சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலமாக தகவல்கள் உடனுக்குடன் பரவின.. மக்கள் அனைவரும் உணர்ச்சியின் பிடியில் சிக்கி இருந்த நேரம்.. தலைவர்களின் உணர்ச்சிகரமான உரை வீச்சால் ஏற்கெனவே உணர்ச்சி வயப்பட்டிருந்தவர்கள் அறிவை அடகு வைத்து மதக்கலவரங்களில் ஈடுபட்டனர்... அப்புறம் சுதந்திர இந்தியாவில் அவரவர் , அவரவர் வேலையை பார்க்க போய் விட்டனர்... ராவுத்தரும் , முத்துசாமியும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம்.. தினசரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை.. அவர்களுக்குள் மதங்களை மீறிய நட்பு குடும்ப நட்பாக உறவு முறை சொல்லி பேசிக்கொள்ளும் அளவிற்கு வந்தது...

அதே போல, இந்து மதத்தின் ஜாதீய கட்டமைப்புகளும் அப்படித்தான்.. ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட வேலைகளை தொடர்ந்து செய்தார்கள்.. ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு வேலையை செய்தாலும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருந்தது... இவரது வேலை அவருக்கும், அவரது வேலை இவருக்கும் அவசியமாக இருந்தது...

இடையில் எப்படியாவது தலைவனாகி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் அதற்காக கையிலெடுத்த யுக்திதான் மதப்பற்று, ஜாதிப்பற்று... இவர்கள் வருவதற்கு முன்பும் முஸ்லிம்கள் முஸ்லிம்கள் தான்.. இந்துக்கள் இந்துக்கள் தான், கிருஸ்துவர்கள் கிருஸ்துவர்கள் தான்.... அதே போல , முதலியார் முதலியார் தான், வன்னியர் வன்னியர்தான்.. செட்டியார் செட்டியார் தான்... ஆனால் அப்படி இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, முதலியாராகவோ, செட்டியாராகவோ இருந்த யாரும் "நாம் இன்ன மதம்.. இன்ன ஜாதி.." என்பதை பற்றி சிந்திக்கவே இல்லை.. அவர்கள் கடவுளை தொழும் போது மட்டும் அவர்கள் மதங்களை பற்றி நினைத்தார்கள்... திருமண பந்தங்களை ஏற்படுத்தும் போது மட்டும் தான் ஜாதி பற்றி யோசித்தார்கள்.. அப்படி இல்லாத நேரத்தில் மனிதர்களாக மட்டுமே இருந்தார்கள்...

ஆனால், இப்படி தலைமை வெறி கொண்ட மனிதர்கள் ( சாத்தான்கள்) தலையெடுக்க தொடங்கிய பிறகுதான் ஒவ்வொருவரும் எப்போதும் மதம் பற்றியும், ஜாதி பற்றியும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.. இப்படி மதம்-ஜாதி என்ற பெயரை சொல்லி சிலர் தலைவராகி விட, இந்த இரண்டிலும் வாய்ப்பு கிடைக்காத சாத்தான்கள் "கடவுள் இல்லை" என்றும், பகுத்தறிவாளர்கள் என்றும், மதச்சார்பற்றவர்கள் என்றும் மூன்றாவதாய் ஒரு வழியை தேர்ந்தெடுத்தார்கள்... மதத்தலைவன், ஜாதித்தலைவன் என்று சொல்லும் சாத்தான்களுக்கு சற்றும் குறைந்தவனல்ல.. இந்த மதச்சார்பற்ற, பகுத்தறிவு சாத்தான்களும்....

எங்கோ ஒரு மூலையில் கிளம்பிய இந்த சாத்தான்கள் ஒட்டு மொத்த இந்தியாவிலும் ஆட்சி செய்ய காரணமாய் அமைந்தது ஊடகங்கள்தான்... மதுக்கூரில் அரிசி கடை வைத்திருக்கும் மீரான் பாயும், மீன் கடை வைத்திருக்கும் யூசுப் பாயும், உரக்கடை வைத்திருக்கும் கனக சபை தேவரும், மளிகை கடை வைத்திருக்கும் சுந்தரம் செட்டியாரும் சிலம்பவேளாங்காட்டில் இருந்த நடேச வேளாளருக்கு உளப்பூர்வமான நண்பராக இருக்க முடிந்தது.. ஆனால்... மீரான் பாயின் மகனோ, யூசுப் பாயின் மகனோ, கனக சபை தேவரின் மகனோ, சுந்தரம் செட்டியாரின் மகனோ , நடேச வேளாளரின் மகனுக்கு உளப்பூர்வமான நண்பனாக இருக்க முடியவில்லை... அப்படி இருந்தாலும் கூட அது உதட்டளவில் மட்டுமே இருக்கிறது...

குஜராத்தில் மதக்கலவரம் என்றால் மதுக்கூரில் இருக்கும் மீரான் பாயின் மகன் நடேச வேளாளரின் மகன் மீது ஆத்திரப்படுகிறான் ... ராமநாத புரத்தில் நடந்த கலவரத்திற்கு மதுக்கூரில் கடை வைத்திருக்கும் கனகசபை தேவரின் மகன் அதே ஊரில் இருக்கும் முனியாண்டி பள்ளரின் மகனை முறைக்கிறான்...

ஏன்....?? ஏன் இப்படி..?? எங்கோ நடக்கும் சில முட்டாள்களின் செயல் எங்கோ உணர்வு பூர்வமாய் இணைந்திருந்த நண்பர்களை எப்படி பிரித்தது??? காரணம் ஊடகங்கள்...

எங்கோ ஒரு முஸ்லிம் தீவிரவாதி வெடிகுண்டு வைத்தால்.... அடுத்து வரும் திரைப்படங்களில் வரும் எல்லா கற்பனை தீவிரவாதிகளும் முஸ்லிம்களாகவே காட்டப்படுகிறார்கள்... எங்கோ ஒரு காலனி ஆள் முதலியார் வீட்டு பெண்ணுடன் காதல் கொண்டு ஊரை விட்டு ஓடினால்... அந்த காலனி ஆள் ஏதோ உலக சாதனை செய்து விட்டதை போல சித்தரிக்கப்படுகிறார்... இப்படி ஒருவரை தொடர்ந்து மட்டப்படுத்தியோ, உயர்த்தியோ பேசும் போது, அதை கேட்கும், பார்க்கும் அமைதியானவருக்கும் கூட மெல்ல மெல்ல மனதில் இருக்கும் சாத்தான் விழித்தெழுந்து அந்த நல்லொழுக்கமுள்ள மனிதனையும் முழுமையாய் ஆட்கொள்கிறது...

ஒரு வதந்தி தொடர்ந்து பரப்பப்படும் போது, எதிர் தரப்பு அதை நம்ப தொடங்குகிறது... சம்மந்தப்பட்ட தரப்பு அதை பெருமையாகவோ, இழிவாகவோ நினைக்கிறது... பெருமையாக நினைக்கும் குழு, அதை சாதகமாக்கி மேலும் மேலும் அந்த தப்பை தொடர்ந்து செய்கிறது.. இழிவாக நினைக்கும் குழு மேலும் மேலும் இழிவு படுத்தப்படுவதாய் எண்ணம் வரும் போது பொங்கி எழுகிறது.....இந்த வதந்திகளால் பாதிக்கப்பட்டது... மீரான் பாய்க்கும், யூசுப் பாய்க்கும் சுந்தரம் செட்டியாருக்கும் நடேச வேளாளருக்கும் இருந்த அன்பால் பிணைக்கப்பட்ட நட்பு....

இந்த வதந்திகளால் ஆதாயம் அடைவது.... மதம் என்றும், ஜாதி என்றும், மதச்சாற்பற்றவன் என்றும், பகுத்தறிவாளன் என்றும் அவரவர் வசதிக்கு மக்களை தூண்டிவிட்ட அரசியல் வாதிகளும், அவர்களுக்கு பலமாய் நின்ற்கும் ஊடகங்களும்...

கல்வி அறிவு என்பது சிந்திக்க வைப்பதற்குத்தான்.. மாறாக கல்வி அறிவும், தகவல் தொழில்நுட்பமும் இளைஞர்கள் மனதில் ஜாதி வெறியையும், மத வெறியையும் தூண்டுவதற்குத்தான் பயன் பட்டுக்கொண்டிருகிறது....

படித்த இளைஞர்கள் எப்போது இந்த சூழ்ச்சி வலையின் பிடியில் இருந்து மீளப்போகிறார்கள்?????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக