செவ்வாய், 28 ஜூலை, 2015

திப்பு சுல்தான்




"எதிரி வீழ்ந்தான்.. இனி இந்தியா நம்முடையது" என்று கொண்டாடினான் ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் 

"கிழக்கிந்திய கம்பெனிக்கு சிம்ம சொப்பனம்" என்று வர்ணித்தன ஆங்கில பத்திரிகைகள்..

"இவர் தலைமையில் சுதந்திரப்போர் நடந்திருந்தால் இந்தியா எப்போதோ சுதந்திரமடைந்திருக்கும்... நாமெல்லாம் போராட வேண்டி இருந்திருக்காது" என்று தன்னுடைய "யங் இந்தியா" என்ற பத்திரிகையில் குறிப்பிட்டார் காந்தியடிகள்...

"இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், இவரும் (இதில் பெயரை குறிப்பிட்டிருக்கிறார்) . பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்"

பிரெஞ்சு மன்னன் பதினாறாம் லூயியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுடன் இணைந்து 1794 ல் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய யுத்தத்தில் வென்று 4000 ஆங்கிலேய சிப்பாய்களை சிறை பிடித்து, பிறகு அவர்களை விடுவித்து ஆங்கிலேய அரசை அவமானப்படுத்துகிறார்.."

’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிடுகிறான் ஆங்கிலேய தளபதி மன்றோ

குண்டடி பட்டு கோட்டை வாசலில் வீரர்களின் பிணங்களுக்கு நடுவே குற்றுயிராய் கிடந்த போது பாதுகாப்பாளன் வந்து "அரசே.. யாராவது ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைத்து உதவி கோரட்டுமா.. சரணடைந்து விடலாமா " என்று கேட்ட போது ..."முட்டாளே... ஆடு போல 200 வருடம் வாழ்வதை காட்டிலும் 2 நாள் புலியாக வாழ்ந்து மடிவதுதான் வீரம்" என்று சொல்லி மரணத்தை தழுவியவர்...

மேற்கட்ட அத்துணை பெருமைக்கும் சொந்தக்காரர்.. மாவீரன் , மைசூர் புலி திப்பு சுல்தான்...

தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டப்படியும், மற்றவர்களுக்கு பொது சட்டப்படியும் ஆட்சி நடத்தியவர்... ஹைதர் அலி- ஃபஹ்ருன்னிசா தம்பதியருக்கு பிறந்து மாவீரனாக வளர்க்கப்பட்ட திப்பு சுல்தான்...

ஆங்கிலேயர்களுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அடிமையாய் ஜீவித்த திருவிதாங்கூர் தர்மராஜா, ஹைதராபாத் நவாப், ஆற்காடு நவாப், தொண்டைமான், பாளையக்காரர்கள் ஆகியோரின் உதவியாலும், பணத்திற்கு விலை போன கூட இருந்த துரோகிகளாலும், தக்க சமையத்தில் நண்பர்களின் உதவி வந்தடையாததாலும் தானே தளபதியாய் நின்று போரிட்டு மரணத்தை தழுவியவர்...

இவரது மரணத்திற்கு பிறகு மைசூர் கோட்டைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் அங்கே இருந்த ஒரு புதிய பொருளை கண்டு ஆச்சர்யமடைந்து, அதனை கவர்ந்து சென்று ஆராய்ந்ததின் விளைவே இன்றைய நவீன ஏவுகணை தொழில் நுட்பம்... ஆம்.. இன்றைய ஏவுகணையின் முன்னோடி திப்பு சுல்தான்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக