திங்கள், 27 ஜூலை, 2015

பணம், நகைகளுக்கு எது பாதுகாப்பு???

நண்பர் ஒருவரின் பக்கத்தில் கீழ்கண்ட தகவலை படித்தேன்.... தகவலும், அதற்கான மாற்று யோசனையும்..... அடடா.... சான்சே இல்ல..... வாட் அன் ஐடியா சார்ஜி.....



திடீரென வங்கியில் தீப்பிடித்தோ,கொள்ளை நடந்தோ
உங்கள் லாக்கரில் உள்ள பணம்,நகை பரிபோனால் இழப்பீடு எதுவும் பெறமுடியாது.
இந்த விதிமுறை நம்மில் பலருக்குத் தெரியாது.



அதனால்,லாக்கரில் ரொக்கம் வைப்பதைவிட, சேமிப்புக்கணக்கில் வைப்பதுதான் சிறந்தது.
வங்கியில் கொள்ளை நடந்தாலும் உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும்.

அதே போல ,லாக்கரில் நகையை வைப்பதைவிட அதை அடமானம் வைத்து நகை கடன் பெறலாம்.
உதாரணமாக,10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகை கடன் பெறலாம். அடுத்த நாளே 24,000 ரூபாயை திருப்பி செலுத்தி விடவேண்டும்.

வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்து கொண்டாலும்
25,000க்கு ஒரு நாளைக்கு 8.25 செலுத்துகிறீர்கள்.
மீதத்தொகையான 1000 ரூபாய்க்கு மாதமொன்றுக்கு 10 ரூபாய்தான் வட்டி. நகை தேவைப்படும்போது கணக்கை முடித்து கொள்ளலாம்.
இது நகை பாதுகாப்பு.

வங்கியில் கொள்ளை நடந்தாலும்,
தீ பிடித்தாலும் உங்கள் நகைக்கு வங்கி கண்டிபாக பொறுப்பேற்கும்.

நகைக்கு பாதுகாப்பு பேங்க் லாக்கரா ....நகை அடமானமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக