செவ்வாய், 28 ஜூலை, 2015

மார்பக புற்றுநோய் - Breast Cancer



ஒரு சர்ச்சைக்குரிய பதிவு.... இதை படித்துவிட்டு நானூறு பேர் என்னை காறி துப்பலாம்... ஆனால் நாலு பேர் கொஞ்சம் யோசித்து செயல்படுத்தினால் கூட என் பதிவு வெற்றியடைந்ததாய் அர்த்தம்...

தம்முடைய உடம்பை தாமே உற்று கவனிப்பவர்கள் மிக மிக குறைவு... ஆனால் நமது பாலியல் துணையின் உடம்பை ஒவ்வொரு அங்குலமாக தடவி தடவி ரசிப்போம்... அந்த வகையில் பெண்களின் மார்பகங்கள் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு தீராத மோகம் உண்டு....

காதலனோ- கணவனோ... உங்கள் இணையின் மார்பகங்களை காமத்தோடு அணுகும் போது கூட கொஞ்சம் கவனமாய் அணுகுங்கள்.. ஏதேனும் இயல்பை மீறிய கட்டிகள், வளர்ச்சிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக பரிந்துரை செய்யுங்கள்...

ஏனென்றால் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 30% பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று சென்னை அடையாறு புற்றுநோய் மைய இயக்குனர் திருமதி சாந்தா அவர்கள் சொல்கிறார்... முறையான விழிப்புணர்ச்சியும் , சோதனைகளும் சரியான நேரத்தில் கொடுக்கப்படும் சிகிச்சைக்களுமே அவர்களை காக்கும்...

அந்த 30 % த்தில் நம் வீட்டு பெண்களும் இருந்துவிட கூடாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக