செவ்வாய், 28 ஜூலை, 2015

J .C ,குமரப்பா



ஜோசப் கொர்னலியஸ் செல்லதுரை குமரப்பா
சுருக்கமாக... J .C ,குமரப்பா..

காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் கணக்காளராக இருந்தவர் இந்த குமரப்பா.. ஆசிரம தலைவர் என்ற முறையில் காந்தியடிகளின் விருந்தினர் உபசரிப்பு செலவிற்காக மாதம் இரண்டு அணா கொடுக்கப்படுவது வழக்கமாம்... 
ஒரு மாதம் காந்தியடிகளின் செலவு இரண்டேகால் அணா ஆகிவிட, கணக்காளர் திரு ஜே சி குமரப்பா அவர்கள் ஆசிரம தலைவர் காந்தியடிகளுக்கு கடிதம் எழுதிவிளக்கம் கேட்கிறார்...

இந்தமாதம் விருந்தினர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபடியால் செலவு அதிகமாகி விட்டதாக காந்தியடிகள் பதில் கடிதம் எழுதுகிறார்...

"உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட கூடுதலாய் செலவு செய்து இருக்கிறீர்கள்.. இந்த தொகை உங்களுக்கு போதுமானதாக இல்லை எனில் அடுத்தமுறை ஆசிரம நிர்வாக குழு கூடும்போது அந்த நிதியை உயர்த்தி தர சொல்லி நீங்கள் நிர்வாக குழுவிடம் முறையிடுங்கள்.. அந்த கூடுதல் தொகையான காலணாவை நான் உங்களுக்கு ஒதுக்கப்படும் இந்த மாத தொகையான இரண்டு அணாவில் இருந்து பிடித்து விடுவேன்" என்று பதில் எழுதினாராம்...

அந்த ஜே சி குமரப்பா கடைசி காலத்தில் மதுரை அருகில் காந்தி நிகேதன் என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து அதன் தலைவராக இருந்து 1960ல் மறைந்தார்...

இவர் எங்கள் மாவட்டத்தை (தஞ்சாவூர்) சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக