புதன், 7 செப்டம்பர், 2016

அபி கேள்வி



"அப்பா... என்னப்பா இது...."
"இவங்க எல்லாம் ஏஞ்சல்ஸ் டா...."
"ஏஞ்சல்ஸ்ன்னா யாருப்பா.."
"அவங்க எல்லாம் தேவதைங்கடா .. அவங்க மானத்துல (வானத்துல) இருந்து வருவாங்கடா...."
"எப்படி வருவாங்க....?"
"பறந்து வருவாங்க...."
"எதுக்கு.."
"நம்மளை எல்லாம் பார்த்துட்டு போக..."

பக்ரீத் விடுமுறை தினத்தில் கத்தார் - ஈரானி மார்கெட் பகுதியில் நடந்த கலை நிகழ்ச்சிகளை பார்க்க அபிநயாவை அழைத்து சென்ற போது , அங்கே தேவதை வேடத்தில் நான்கைந்து பெண்கள் அங்குமிங்குமாக உலாவ... அப்போது எனக்கும் அபிக்குமிடையே நடந்த உரையாடல் தான் மேற்சொன்னது...

அப்போது அவளுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.... அமைதியாகி விட்டாள் ..

இதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து நேற்று, மங்கல்யான் செவ்வாய் கிரஹத்தின் நிலாவை படம் பிடித்து அனுப்பிய செய்தியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது....

"மங்கல்யான்னா என்னப்பா..."
"அது ஒரு செயற்கை கோள்டா .. மேல மானத்துல ( வானத்துல) போயிருக்கு...."
"எப்படி மானத்துக்கு போச்சு..?"
"அது ராக்கெட்ல போச்சுடா...."
"ராக்கெட்னா என்னப்பா....?"
"நீ பிளேன்ல வந்த இல்ல.... அது மாதிரி தான் இதுவும்...."
"அப்போ ராக்கெட்ல யாரு போவாங்க...."
"அதுல யாரும் போக மாட்டாங்க... வெறும் மெஷின் மட்டும் தான் போகும்...."
"அப்படின்னா அந்த ஏஞ்சல்ஸ்ஸ அதுல போக சொல்லலாம்ல....?? அவங்களும் வானத்துக்கு தான போகணும்...??"

இப்போது எனக்கு எதுவுமே புரியவில்லை.... அமைதியாகிவிட்டேன்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக