புதன், 7 செப்டம்பர், 2016

கார்பொரேட் கத்தி



திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதையோ- விமர்சனம் எழுதுவதையோ நான் எப்போதும் ஊக்குவித்ததில்லை... ஆனால் நேற்றைய வெளியீடான திரு A.R. முருகதாஸ் அவர்கள் "கத்தி" மூலம் பேசி இருப்பது எங்கள் பிரச்சினை.. மன்னிக்கவும்.. நம் பிரச்சினை... தண்ணீர் என்பது பொதுவான விஷயமாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது தாகம் தீர்க்க மட்டுமே.. தண்ணீருக்கு பதிலாக கோலாவை குடிப்பார்கள் நகரவாசிகள்....

ஆனால் எங்களுக்கு (விவசாயிகளுக்கு) உயிர் பிரச்சினை... உங்கள் பசிக்காகவும் சேர்த்து கவலை படும் எங்களால் கோலாவை கொண்டு விவசாயம் செய்ய முடியாது... கார்பொரேட் அரக்கன் கையில் சிக்கி நாளை நடக்கப்போகும் பயங்கரத்தை ஒரு கலர்புல் திரைப்படம் மூலம் வெகுஜன மக்களுக்கு எடுத்துச்சென்ற இயக்குனர் முருகதாஸ் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்...

ஏற்கெனவே சில பல பதிவுகளில் கார்பொரேட் களவானிகளின் நரித்தந்திரத்தை நானும் சொல்லி இருக்கிறேன்.. ஆனால் என் களம் குளம் மாதிரி... சிறியது..... ஆனால் முருகதாஸ் களம் கடல்...
மற்றபடி விஜய் என்ற ஒரு நடிகர் நடித்த ஒரே காரணத்திற்காக எதிர்க்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களோ- லைக்கா என்ற நிறுவன தயாரிப்பு என்பதால் அந்த படத்தை எதிர்த்த "டிராமா" தமிழ் உணர்வாளர்களோ தங்கள் எதிர்ப்பை கை விட்டு இந்த படத்தை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்... அப்படி இல்லை என்றால் அவர்கள் ஓட்டு மொத்த விவசாயிகளை அழிப்பதை வேடிக்கை பார்க்க சொல்லும் மானுட துரோகிகள்...

சம்பளம் வாங்கிக்கொண்டு "கோகோ- கோலா" விளம்பரத்தில் நடித்ததுபோல.. சம்பளம் வாங்கிக்கொண்டு "கத்தி" படத்தில் நடித்த்ருக்கிறார் நடிகர் விஜய்... அவருக்காக இயக்குனரின் இந்த சமகால சிந்தனையை மக்களிடம் சேர விடாமல் தடுப்பது பாவம்...

நியாயமாக இந்த படத்தை ஏதாவது விவசாய சங்கங்களோ- விவசாய பின்னணி கொண்ட தொழிலதிபர்களோ தயாரித்திருக்க வேண்டும்... ஆனால் எல்லாவற்றையும் காசாக்க தெரிந்த கார்பொரேட் கம்பெனிகள் விவசாயிகளின் பிரச்சினையையும் காசாக்கி விட்டார்கள்...

நன்றி முருகதாஸ் அவர்களே...

குறிப்பு- நான் இந்த படத்தை இணையத்தில் தான் பார்த்தேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக