புதன், 7 செப்டம்பர், 2016

கேள்விக்கேற்ற பதில்



திருவாவடுதுறை ஆதீனத்தின் மடாதிபதி ஒரு நாள் மடத்தின் கணக்குகளை பார்த்துக்கொண்டு இருந்தாராம்... அப்போது அங்கிருந்த கணக்காளர் மிகவும் நேர்மையானவர்.... ( அப்படியானால் இப்போது இருப்பவர் நேர்மையற்றவரா என்று கேட்க கூடாது... அது பற்றி நமக்கு தெரியாது)

கணக்குகளை பார்த்து முடித்த மடாதிபதி கடைசியாக சொன்னாராம்... "இந்த கணக்குகளில் தவறு இருக்கிறது.... "

மிகவும் நேர்மையாளரான கணக்காளர் பதறிப்போனாராம்.... மடாதிபதியே தம்மை சந்தேகப்படிகிறாரே.. சிவ சிவா... என் நேர்மைக்கு என்ன சோதனை என்று மருவியபடியே... "என்ன தவறு சுவாமி.." என்று நடுக்கத்துடன் கேட்டாராம்...

மடாதிபதி " கடந்த ஒரு வருடத்தில் மடத்தில் விளக்கு எரிப்பதற்காக இத்தனை லிட்டர் எண்ணெய் வாங்கி இருப்பதாக எழுதி இருக்கிறீர்கள்... ஆனால் ஒரு இடத்தில் கூட தீப்பெட்டி வாங்கியதாக எழுத வில்லையே...."

அதற்கு அந்த கணக்காளர் சொன்னாராம்... சுவாமி... நமது மடத்தில் தீபங்கள் அணைவதே இல்லை.... திரி கருகிவிட்டாள் வேறு திரி போட்டு வேறொரு விளக்கின் நெருப்பில் இருந்து பற்றவைத்துக்கொள்வோம்... அதனால் தீப்பெட்டி வாங்க வேண்டிய அவசியம் இல்லை..."

ஒரு லாஜிக்கான கேள்வி... அதற்கு தகுந்த பதில்....

புகைப்படம்:- திருவாவடுதுறை ஆதீன மடம் - இணையத்தில் இருந்து ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக