புதன், 7 செப்டம்பர், 2016

நம்பிக்கை.... அதானே எல்லாம்...!!!



லண்டன்ல இருக்க கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிடி ல நேரு படிச்சுகிட்டிருந்தாராம்... வெளிநாட்டுல படிக்கிற பையனுக்கு செலவுக்கு பணம் அனுப்புவாராம் அவங்க அப்பா மோதிலால்...

என்னடா.. நாமளும் பணம் அனுப்பிகிட்டே இருக்கோம்... இந்த பய ஒன்னும் கணக்கு சொல்லவே மாட்டேன்றான்.... பய ஒழுங்கா படிக்கிறானா.. இல்ல ஊர் சுத்திகிட்டு வீணா செலவு பண்ணிக்கிட்டு திரியுரானான்னு ஒரு டவுட்டு வந்துச்சு மோதிலாலுக்கு...

ஒடனே ஒரு லெட்டர் எழுதினாராம்... "ஏம்பா... நானும் நீ கேக்க கேக்க பணம் அனுப்புறேன்.. ஒழுங்கா படிப்புக்கு செலவு பண்றியா... இல்ல.. எங்கயாச்சும் ஊர் சுத்துரியா.... ஒரு கணக்கும் சொல்ல மாட்டேன்ற...." அப்படின்னு...

ஒடனே நேரு .... "ஏம்பா..... உங்களுக்கு நம்ம புள்ள கண்டிப்பா கெட்டவழில செலவு பண்ணமாட்டான்னு எம்மேல நம்பிக்கை இருந்தா என்கிட்டே கணக்கு கேக்க மாட்டீங்க.... அப்படி எம்மேல நம்பிக்கை இல்லன்னா.... நான் என்ன கணக்கு சொன்னாலும் "இந்த பய பொய்கணக்கு சொல்றான்னுதான் நினைப்பீங்க... அப்புறம் எதுக்கு நான் செலவு கணக்கு சொல்லணும்??? " அப்படின்னு பதில் எழுதினாராம்....

நீங்க உங்க புள்ளைகிட்ட கணக்கு கேப்பீங்களா...?? கேக்க மாட்டீங்களா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக