புதன், 7 செப்டம்பர், 2016

எப்படி புரிய வைக்க??


ஒரு வீட்ல ஒரு குழந்தை செத்து போச்சு.... எல்லோரும் கூடி அழுது ஒப்பாடி வச்சு கதறினாங்க....

சத்தம் கேட்டு ஒரு பிறவி குருடர் அங்க வந்தார்... அவருக்கு காதும் அரைகுறையா தான் கேக்கும்.... என்னை மாதிரி கொஞ்சம் முட்டாள் ( உன்னை மாதிரின்னு சொன்ன... சரி... ஆனா கொஞ்சம னு சொல்றியே...... எப்படிப்பா..ன்னு நீங்க கேக்குறது நல்லாவே புரியுது.. கோபத்த கொஞ்சம் ஒதுக்கி வச்சுட்டு தொடர்ந்து படிங்க..)

அந்த பிறவி குருடருக்கும்- அங்க நின்னுகிட்டிருந்த இன்னொருத்தருக்கும் நடந்த உடையாடல கேப்போமா...

"என்ன ஆச்சு.. ஏன் நிறைய பேர் ஒரே நேரத்துல அழுவுறாங்க...?"

"குழந்தை செத்து போச்சுப்பா..."

"அய்யய்யோ... எப்படி.."

"பால் குடிக்கும்போது விக்கிகிச்சு.... செத்து போச்சு.."

"பாலா... அது என்னது...?"

"குழந்தைங்க பசிக்கு குடிக்கிறதுப்பா.. வெள்ளையா தண்ணி மாதிரி இருக்கும் "

"வெள்ளையாவா... வெள்ளைன்னா என்ன...."

"அட.. அது ஒரு கலருப்பா... கொக்கு இருக்கும்ல.. அந்த மாதிரி.."

"கொக்கா.. அது எப்படி இருக்கும்..."

நம்ம ஆள் கடுப்பாயிட்டார்.... தன்னோட கைய கொக்கு மாதிரி வளைச்சு காட்டி "இதோ இப்படி தான் இருக்கும்"ன்னு சொன்னார்...

அத தடவி பார்த்த அந்த குருடர் சொன்னார்.. "இத கொண்டு போய் குழந்தை வாயில கொடுத்தா விக்காம என்னய்யா பண்ணும்..."

# இப்படித்தாங்க நம்மல்ல சில பேர்... ஒரு விஷயத்த பத்தி அடிப்படை அறிவும் இருக்காது.. சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க.... அதே நேரம் என்ன நடந்துதுன்னும் தெரியாது.. ஆனா கிளைமாக்ஸ் ல வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதை சொல்லி நம்மள கடுப்பேத்துவாங்க.... என்ன பண்றது.. எல்லாம் டிசைன் ல இருக்குன்னு போக வேண்டியது தான்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக