புதன், 28 ஜூன், 2017

ஊருக்கு ஊரு பள்ளிக்கொடம், காலேசுன்னு தொறந்ததாலையும் , ஜனங்களுக்கு விழிப்புணர்ச்சி (!!???) வந்துட்டதாளையும் பொம்பளை புள்ளைங்க இப்போல்லாம் படிக்க/ வேலைக்கு போய்டுதுங்க.....


முன்னாடி எல்லாம் பொம்பளை புள்ளைங்கள பத்தாப்பு, பன்னெண்டாப்போட படிப்ப நிறுத்திட்டு வீட்டு வேலைக்கு போட்டுடுவாங்க.... சும்மாங்காட்டியும் ஊர் வம்பு பேசி திரியுரவுங்க.... என்னப்பா.. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலையா... பண்ணலையான்னு கேட்டு கேட்டு சாவடிப்பானுங்க...


பதினாலு வயசுல வயசுக்கு வந்தா அதிக பட்சம் நாலஞ்சு வருஷம் வீட்டுல வச்சிருந்தாலே ஊர்ல கேக்குறவனுக்கு பதில் சொல்ல முடியாது....


ஆனா இப்போ பொண்ணுங்க படிக்கிறதாலையும் , வேலை-வெட்டின்னு வெளியூருகளுக்கு போயி தங்குறதாலையும் இந்த மாதிரி கேள்விங்க இப்போ கொறைஞ்சுடுச்சு .... அப்படியே கேட்டாலும் பொண்ணு படிச்சுகிட்டிருக்குப்பா.... இப்போ ஒன்னும் கல்யாணம் பண்ற ரோசனைல இல்லன்னு ஈசியா சொல்லிடலாம்...

ஆனா இதுல ஒரு விஷயம் கவனிச்சியளா....?? அப்போ பதினாலு வயசுல வயசுக்கு வந்தாங்க... நாலஞ்சு வருஷம்னா பதினெட்டோ- பத்தொம்போதுலையோ கல்யாணம் பண்ணுவாங்க...

இப்போ ஏழு வயசுலயும், எட்டு வயசுலயும் வயசுக்கு வருதுங்களே.... முன்ன மாதிரி இப்போவும் வீட்டுல இருந்தா பதிமூனு- பதினாலு வயசுல கட்டிக்கொடுத்திடுவாய்ங்களோ...


என்னமோ போங்க... அட ஆக்கங்கெட்ட கூவைங்களா... பிராய்லர் கோழிய சீக்கிரம் வளர்க்க அதுக்கு ஸ்டீராய்டு இன்ஜெக்ஷன் போட்டு போட்டு வளப்பாய்ங்க.... அத வாங்கிட்டு வந்து வாரா வாரம் வக்கனையா வழிச்சு திண்ணா அதுல இருக்க மருந்தோட வீரியம் எங்கிட்டு போகும்?? சாப்பிட்றவங்களும்ல்லா சீக்கிரம் வளர்வாங்க.... அப்புறம் ஏழுவயசுலையும் , எட்டு வயசுலயும் தான் வயசுக்கு வரும்.... கொழந்தைங்களுக்கு என்னன்னு தெரியாத வயசுலேயே இப்படி ஒரு பயங்காட்டி மனசளவுல ஒடைச்சுட்றீங்க ..

அது மட்டுமா.... ப்ராய்லர் கோழி மாதிரியே போதபொதன்னு வளைந்து பத்து வயசுலேயே பெரிய பொண்ணாட்டம் நின்னா ஊர்ல இருக்க நாதாரிப்பயமக்க எல்லாம் காதல் கத்திரிகான்னு சுத்தி அந்த பொண்ணோட மொத்த எதிர்காலத்தையும் நாசமாக்கிட்டுதான் ஒய்வானுங்க...

நூடுல்ஸ் நூடுல்ஸ் ன்னு கூவுறீங்களே,,, இத எல்லாம் எப்போதான் உணர்வீங்க...???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக