புதன், 28 ஜூன், 2017

பிளாஸ்டிக்-அந்நியன்



அஞ்சு பேர் அஞ்சு பைசா திருடினா தப்பா...

தப்பு மாதிரி தாங்க தெரியுது...

அஞ்சு பேர் அஞ்சு தடவை அஞ்சு பைசா திருடினா தப்பா...

ஆமாங்க.. தப்புதாங்க....

இதன் மருவலாய் ஒரு சமூக சிந்தனை...

ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி தண்ணி குடிச்சிட்டு அந்த பெட் பாட்டிலை
ரோட்டுல வீசினா தப்பா...??

இல்லீங்க...

அஞ்சு பேர் அப்படி வீசினா...??

தப்பு மாதிரிதாங்க தெரியுது,,,

அஞ்சு பேர் அஞ்சுதடவை வீசினா ??

தப்புதாங்க...

ஒரு நாளைக்கு அஞ்சு லட்சம் பேர் அஞ்சு தடவை வீசுறாங்க... அந்த குப்பை எப்படி அழியும்..???

திரும்ப திரும்ப உபயோகிக்க கூடிய BPA FREE பாட்டில்கள் கிடைகின்றன.. அதை வாங்கி வீட்டுலையே தண்ணி புடிச்சுகிட்டு வெளில போகலாமே..... உடல் நலத்திற்கும்.. இயற்கைக்கும் , எதிர்கால சந்ததிகளுக்கும் நல்லது...

நான் அந்நியன் இல்ல.... ஆனா.. நீங்க அந்த காண்ட்ராக்டர் ஆகாம இருங்களேன்.. ப்ளீஸ்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக