புதன், 28 ஜூன், 2017

மொழி

Image may contain: ocean, sky, cloud, outdoor, nature and water

தமிழை அலட்சியம் பண்றவன் மூடன். பல நாகரீகம் பார்த்த பாஷை அது . பெரிய கோயிலின் விமானத்தை பார்த்திருக்கிறீர்களா... சரியான கணித அளவீடுகள் இல்லாமல் இவ்வளவு பெரிய கோபுரம் கட்டி இருக்க முடியுமா??ஒரு இழை பிசகி இருந்தாலும் கோபுரத்தின் சமநிலை பாதிக்கப்பட்டு கோபுரம் கோணலாகி இருந்திருக்கும்.. ஆயிரமாண்டுகள் நிலைக்க முடியாமல் சரிந்திருக்கும்..

தமிழில் கணக்கு இருந்திருக்கிறது.. அதுவும் மிகத்துல்லியமான கணக்கு இருந்திருக்கிறது... கணக்கும் காவியமும் நிறைந்த ஒரு மொழியை புறக்கணிக்க முடியுமா?? அந்த மொழியை கேலி செய்ய முடியுமா?? இந்த மொழி பெரிசு.. அந்த மொழி சிறுசுன்னு சொல்றவன் தற்குறி...

சக்கரம் கண்டுபிடிச்சது சிறுசு .. மின்சாரம் கண்டுபிடிச்சது பெரிசுன்னு சொல்ல முடியுமா??கண்டுபிடிப்புகள்ள வித்தியாசம் உண்டா... மொழி மனுஷனோட கண்டுபிடிப்பு.. எத்தனை தலைமுறையோ தொடர்ந்து மாறுதல்கள் செஞ்சு உருவாக்கின சக்கரத்தை ஓட வச்சு யாரோ ஒருவர் மின்சாரம் கண்டு பிடிக்கலையா..?? அந்த சக்கரத்தை மின்சாரத்தால ஓட வச்சு வேறொரு கண்டுபிடிப்பு வரலையா...?? அப்படித்தான் மொழியும்...

ஒரு மொழிய வச்சு இன்னொரு மொழி உருவாகும்... இரண்டும் சேர்ந்து வேறொரு மொழி உருவாகும்..மொழியை மாறக்கூடாதுன்னு சொல்றவன் துரோகி...

யாருக்கு மாற்றங்கள் செஞ்சா ஆத்திரம் வரும்?? தன் மொழிதான் பெருசுன்னு பேசுற வேறு எதுவுமே தெரியாத மூடனுக்குதான் ஆத்திரம் வரும்..மொழி மேல காதல் இருக்கலாம்.. ஆனா காமம் இருக்க கூடாது.. காமம்ங்கிற வார்த்தைக்கு பேராசைன்னு அர்த்தம்... பேராசையுள்ளவன் தனக்கும், தான் சார்ந்த எல்லாவற்றிற்கும் கூட எதிரி...

("கடலோரக் குருவிகளி"ல் பால குமாரன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக