புதன், 28 ஜூன், 2017

காலாவதி தேதி



கடைகளில் வாங்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீதும் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்கும்...


என்போன்ற புத்திசாலிகள்(??!!) அந்த பொருட்களை வாங்கும்போதே காலாவதி தேதியையும் கவனிப்பார்கள்... வாங்கிக்கொண்டு வந்து உபயோகிக்கத் தொடங்கியதும் சில பல நாட்கள், மாதங்கள் கழிந்த பின்னும் கூட காலாவதி தேதியை சரி பார்த்து திருப்தியாய் தொடர்ந்து உபயோகிப்பார்கள்...
இங்குதான் அந்த புத்திசாலிகள் சறுக்கி விடுகிறார்கள்...

ஆம்.. அந்த பொருகள் , நிறுவன பேக்கிங் பிரிக்காமல், குறிப்பிட்டுள்ள சீதோஷ்ண நிலையில் வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த காலாவதி தேதி சரியாக இருக்கும்....பிரித்து உபயோகிக்கத்தொடங்கி விட்டாலோ, குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் பாதுகாக்காமல் விட்டாலோ கூடிய சீக்கிரமே கெட்டுவிடும்.

ஆகவே அரை புத்திசாலிகளே...(இது எனக்கு சொல்லிக்கிறது.. உங்களுக்கும் பொருந்தினால்.... நாம ஒரே ஜாதின்னு வச்சுக்கலாம்) காலாவதி தேதியை வைத்து, சீல் பிரிக்கப்பட்ட, பாதி உபயோகிக்கப்பட்ட, குறிப்பிட்ட சீதோஷ்ணத்தில் வைக்க முடியாத பொருட்களை எவ்வளவு சீக்கிரம் உபயோகிக்க முடியுமோ உபயோகித்து விடுங்கள்....

கூடுமான வரை, உங்கள் தேவைக்கு தகுந்த அளவில் வாங்குங்கள்.... அதையும் சீக்கிரம் தீர்க்க முடியவில்லை என்றால்... மிச்சமிருப்பதை யாருக்காவது கொடுத்துவிடுங்கள்.... இல்லை குப்பையில் வீசி விடுங்கள்...

காசுகொடுத்து வாங்கிவிட்டோமே என்று விஷத்தை உட்கொள்ள முயற்சிக்காதீர்கள்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக