புதன், 28 ஜூன், 2017

"கேரளாந்தகன்"

No automatic alt text available.
தஞ்சை பெரியகோயிலின் முதல் நுழைவாயிலுக்கு பெயர் "கேரளாந்தகன்" நுழைவு வாயில்... கேரளத்தவருக்கு அந்தகன் ... அந்தகன் என்பது எமனின் இன்னொரு பெயர்.... கேரளத்தவருக்கு ..அதாவது சேரநாட்டு அரசுகளுக்கு எமனாக விளங்கிய சோழ மன்னன் கேரளாந்தகன் என்று அழைப்பட்டான்.. அவனது பெயரில் அந்த நுழைவு வாயில்...

இன்னொரு விஷயம்.... அந்தகன் என்றால் குருடன் என்று பொருள்... அப்படியானால் எமன் குருடனா....??

ஆம்... குருடன் தான்... அவன் அழகு, அசிங்கம், வசதி, ஏழை, குழந்தை,இளைஞன், முதியவர் என்று எந்த பாகுபாட்டையும் பார்க்காத குருடன்.... இவர் மிகப்பெரிய அறிவாளி.. இவர் இன்னும் சில நூறு ஆண்டுகள் வாழட்டும் என அனுமதிப்பதில்லை... இவள் உலகிலேயே அழகிய பெண்... என்று அழகில் மயங்கி உயிர் பறிக்காமல் விடுவதில்லை.... ஒரு குழந்தையில் சிரிப்பில் கொள்ளை போய் கடமை தவறுவதில்லை....ஆகவே எமனுக்கு குருடன்- அந்தகன் என்று பெயர்.....


வேண்டுகோள்:- இந்த கேரளாந்தகன் இயற் பெயர் என்ன என்பதற்கான தகவல்கள் எனக்கு தெரியவில்லை... நிச்சயமாக ராஜராஜன் இல்லை... ஏனென்றால் பெரிய கோயிலின் இரண்டாவது நுழைவாயில் ராஜராஜன் நுழைவாயில்..ஆக.. கேரளாந்தகன் வேறு யாரோ...
தெரிந்தவர்கள் பகிரவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக