புதன், 5 ஜூலை, 2017

"நான் யார் பக்கம்" - உருவாகும் மன நோயாளி

பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்சினை “தாய்/சகோதரிகள்  பக்கம் ஆதரவாக இருக்க வேண்டுமா... மனைவி பக்கம் ஆதரவாக இருக்க வேண்டுமா...??
தாய்/சகோதரிகளுக்கு ஆதரவாக நின்றால்....  “அதெப்படி.. உன்னையே நம்பி வந்தவள்... உன் குழந்தைகளை சுமந்தவள்.. உனக்காக அல்லும்  பகலும் சிந்திப்பவள்... உன்னில் பாதி... உன் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்பவள்...  அவளை எப்படி புறக்கணிக்கலாம்... என்று கேட்கும் சமூகம்...
அதே ஆண்... மனைவி பக்கம் நின்றால்...  “பாவி... பார்த்தியா... முந்தாநாள் ஒருத்தி வந்ததும் பெத்த அம்மாவையும் கூடப்பொறந்த சகோதரிகளையும் உதறி தள்ளிட்டான்... துரோகி.. நன்றி கெட்டவன்...”  என்றெல்லாம் வசைபாடும்...
இருவர் பக்கமும் ஆதரவாக பேசினால்... இருவராலுமே “இவன் எல்லார்கிட்டையும் நடிச்சு  நல்ல பேர் வாங்கிக்க பார்க்கிறான்” என்று வசை பாடப்படுவான்..
தாய்-சகோதரிகள்-மனைவி மூவரும் நல்ல புரிதலுடன்  ஒற்றுமையாக வாழும் பட்சத்தில் அந்த மூவர் தொடர்புடைய ஆணை விட அதிஷ்டசாலி-பாக்கியவான் இந்த உலகத்திலேயே இல்லை  எனலாம்... கூட்டுக்குடும்பம்- சொந்தபந்தங்கள் என்ற சங்கிலிப் பிணைப்புடன் இருக்கும் இந்திய கலாச்சாரத்தில் சிக்கி சின்னாப்ப்பின்னப்படும்  ஆணின் சோகம் சொல்லி மாளாது...  மேற்கத்திய-அமெரிக்க கலாச்சாரத்தில் இருக்கும் ஆணுக்கு இப்படி சிக்கல் இருப்பதாய் செய்திகள் எதுவும் இல்லை..
Related image
அப்படியானால்  தாய்-சகோதரி-மனைவி ஆகிய மூவரும் ஒத்துப்போய் விடலாமே.... என்றால்..  அதற்கு பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கித்தான் சுற்ற வேண்டும்... அப்படியும் கூட அந்த அதிசயம் நடந்து விடாது..
சரி... இவர்களுக்கும் பிரச்சினைகள் எழ முதல் முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால்... சம்மந்தப்பட்ட ஆண்தான்... அவனை, அவன் சொத்துக்களை, அவன் பாசத்தை உரிமை கொண்டாடுவதிலே தான் பிரச்சினை எழுகிறது.... தாய்-சகோதரி-மனைவி என அனைவருக்குமே அவன் பகிர்ந்து கொடுக்க தயாராக இருந்தாலும்.... அந்த “பகிர்தலை” ஏற்க அந்த பெண்கள் தயாரில்லை... முழுமையாய் எனக்கே வேண்டும்.. என்பதே பிரச்சினையின் அடிநாதம்... 
இந்த போராட்ட முடிவில் பெரும்பாலும் மனைவிகளே வெற்றிபெறுகிறார்கள்... ஆனால் அந்த மனைவியின் வெற்றியின் மறைவில் இருக்கும் அந்த ஆணின் இழப்பு, கெட்ட பெயர், மன உளைச்சல், சுயபச்சாதாபம், ஏமாற்றம்  என எண்ணற்ற காரணிகள் இருக்கும்..  அதுபற்றி இதுவரையில் எந்த மனைவியும் அலட்டிக்கொண்டதாக எந்த ஆவணமும் இல்லை..
அதே நேரம்... அப்படி வெற்றி பெரும் மனைவிகளில் இருவேறு வழிகளை பின்பற்றும் இருசாரார் உண்டு...
முதல் வகை....  கணவனின் தாய்/சகோதரிகளை விட அதிக அர்ப்பணிப்பு, அதிக ஒத்துழைப்பு, அதிக பகிர்தல், அதிக நம்பிக்கை, அதிக கவனம், அதிக ... அதிக.. என பல  அதிகங்களை கொட்டி கொட்டி கணவனை மெல்ல மெல்ல தன்பக்கம் திருப்புபவர்கள்...  இதற்கு வெகுகாலம் எடுக்கும்...  இப்படி திரும்பும் ஆணுக்கு சில நேரங்களில் தாய்/சகோதரிகள் மீது பச்சாதாபமும், தாம் நன்றிகெட்டு நடந்துகொள்வதாய் சுய வெறுப்பும் ஏற்படும்... 

அதே நேரம்.. மனைவி இவ்வாறு நடந்துகொள்கையில்.. எங்கே தன் மகனை/சகோதரனை “வந்தவள்” முழுமையாய் அபகரித்துக்கொள்வாளோ என்ற எண்ணத்தில்  அந்த தாய்/சகோதரிகள் , மனைவியாகப்பட்டவள் மீது வெறுப்பை உமிழ்ந்து கொடுமைகள் செய்ய , அது மனைவிக்கு சாதகமாகி, அந்த பச்சாதாபம் கூட இல்லாமல் போய் விடும்..

இரண்டாம் வகை... தன்னுடைய உரிமையை காட்டி, அதிகாரத்தை மைய்யப்படுத்தி “நான் சொல்வதைத்தான் நீ கேட்க வேண்டும்...” என தொடர்ந்து சண்டையிட்டு தன் கணவனை தன பக்கம் திருப்புபவர்கள்... இவர்கள் இதெற்கென கையிலெடுக்கும் ஆயுதங்கள் உரிமை/பிள்ளைகள்/சட்டம்/நீதிமன்றம்.. போன்றவை... 
இப்படி வெற்றிபெற்ற மனைவியுடன் வசிக்கும் கணவன்மார்கள் ... முடிந்தவரை சண்டையிட்டு – போராடி.... “இவ இவ்ளோதான்.... நாம இப்படியே இருந்தா பின்னாடி நம்ம பிள்ளைங்கதான் நடுத்தெருவுல நிக்கணும் “ என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு அமைதியாக இருந்து விட்டாலும்... அடி மனதில் ஊறிய வெறுப்பு ஒட்டவும் முடியாமல்- விலகவும் முடியாமல் ஒரு திரிசங்கு நரகத்தில் தள்ளப்பட்டு வாழ்க்கையை கழிக்க வேண்டி இருக்கும்...

ஆக... கொடுக்கும் இடத்தில் இருக்கும் ஆண்கள் பகிர்ந்தளிப்பதை சந்தோஷமாக செய்தாலும்... அதை வாங்கிக்கொள்ளும் இடத்தில் இருக்கும் பெண்கள் “எனக்கே எனக்கு” என்று கட்டம் கட்டி விடுவதால் அந்த ஆண்  நிம்மதி அற்ற மனநோயாளி ஆகிறான்... 
இதை எந்த ஆணும் சொல்வதில்.... சொன்னாலும் அதை புரிந்துகொள்ள எந்த பெண்ணும் தயாராக இல்லை....
கொஞ்சம் யோசியுங்கள் பெண்களே.... உங்கள் கணவன்/மகன்/சகோதரன் உலகிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆகா வேண்டுமா ??? உங்களுக்குள் அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள்... விட்டுக்கொடுத்துக்கொள்ளுங்கள்...
வேரில் நீரிரைத்தால் இலைகள் தளிர்ப்பதை போல..... நீங்கள் அன்போடிருந்தால் ஆண்கள் வீட்டிலேயே சிறைபட தயாராக இருக்கிறார்கள்...