புதன், 27 செப்டம்பர், 2017

வரலாற்றை திரிக்காதீர்கள்

ஒரு விறகு வெட்டி ஆற்றங்கரையில் விறகு வெட்டும் பொழுது அவனது கோடரி தண்ணீரில் வழுந்துவிட்டதாகவும்... உடனே ஒரு தேவதை வந்து தங்க, வெள்ளி, இரும்பு கோடரிகளை கொடுக்க... தங்க-வெள்ளிக்கு ஆசைபடாத விறகு வெட்டிக்கு மூன்று கோடரிகளையும் அந்த தேவதை கொடுத்துச்சென்றதாகவும் நான் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது ஒரு கதை இருந்தது...

பின்னாளில் அது நவீன வளர்ச்சி பெற்று வேறுமாதிரியாய் சொல்லப்பட்டது.... அதே விறகுவெட்டி மற்றுமொருநாள் அதே ஆற்றங்கரையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க.... அதே தேவதை வந்து "ஏன் அழுகிறாய்" என கேட்டதாம்.... உடனே விறகு வெட்டி... என்னுடைய மனைவி ஆற்றில் விழுந்துவிட்டாள்.. என்றானாம்...

நீரில் மூழ்கிய தேவதை கையில் அனுஷ்காவை தூக்கிக்கொண்டு வந்ததாம்..... இவளா உன் மனைவி என தேவதை கேட்க.... விறகுவெட்டி , சற்றும் யோசிக்காமல் ஆமாம் ஆமாம்... என்றானாம்....



எல்லாமறிந்த தேவதைக்கு இவன் பொய் சொல்வதும் தெரிந்துவிட்டது.... அடே பாவி... தங்க, வெள்ளிக்கு கூட ஆசைப்படாத நீ.... ஒரு அழகான பெண்ணுக்கு ஆசைப்பட்டு இவள்தான் என் மனைவி என்று பொய் சொல்கிறாயே.... என கேட்டதாம்....
Image may contain: 1 person, smiling, closeup
உடனே விறகுவெட்டி.... அப்படி எல்லாம் இல்லை.... நீ முதலில் இவளை காட்டுவாய்... பிறகு நயன்தாராவை காட்டுவாய்... மூன்றாவதாக என் மனைவியை கொண்டுவருவாய்..... நான் இவள்தான் என் மனைவி என்ற உடன்... இந்தா.... மூன்றையுமே வைத்துக்கொள்... என கொடுத்துவிட்டு சென்று விடுவாய்.... ஒருத்தியிடம் சிக்கி சீரழிந்தே சமாளிக்க முடியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன்.... இதில் இன்னும் இரண்டு பெண்களை என்ன செய்ய... அதனால்தான் நான் முதலில் நீ ஒரு பெண்ணை காட்டியதும் இவள்தான் என் மனைவி என்று சொல்லிவிட்டேன்... என்றானாம்....


நகைச்சுவைக்காக ஒரு பழைய கதை புதிதாக எடிட் செய்யப்பட்டது... நாமும் ரசித்தோம்.... அது வெறும் கதை..... ஆனால்... சமகால இணைய எழுத்தாளர்கள் தங்கள் ஜாதியில் பிறந்த தலைவர்களை தூக்கிப்பிடிப்பதாய் நினைத்துக்கொண்டு ( கவனிக்கவும்... ஜாதித்தலைவர்கள் இல்லை... ஜாதியில் பிறந்த தலைவர்கள் ) வரலாற்று தகவல்களை எடிட் செய்து வெளியிடுகிறார்கள்....

இன்று காலை அப்படி ஒரு தகவலை காண நேர்ந்தது.... நேதாஜி ஹிட்லரை காண ஜெர்மன் சென்றிருந்தபொழுது அங்கு வந்து நேதாஜியின் தோளில் கை வைத்ததை உணர்ந்த நேதாஜி... திரும்பி பார்க்காமல்... "ஹவ் ஆர் யு ஹிட்லர்" என்று கேட்டதாகவும்... ஒரிஜினல் ஹிட்லர் வரும் முன்பே ஹிட்லரின் தோற்றத்தில் வேறு சிலர் இருந்தாலும் கூட ஒரிஜினல் ஹிட்லரை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு நேதாஜி "என் தோளில் கை வைத்து பேசக்கூடிய தைரியம் ஹிட்லர் ஒருவருக்கு மட்டுமே உண்டு... ஹிட்லர் தோற்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் என்னுடன் கை குலுக்கினார்கள்... உண்மையான ஹிட்லர் மட்டுமே என் தோளில் கை வைத்து பேசினார்..." என்றாராம்...

Image may contain: 1 person
இப்படி ஒரு தகவலை சில காலத்திற்கு முன்பே சில இடங்களில் நான் படித்திருக்கிறேன்.... இன்று காலையில் படித்த தகவலில் இந்த தகவல் மேலும் எடிட் செய்யப்பட்திருந்தது... கூடவே நேதாஜி... ஒரிஜினல் ஹிட்லரை தவிர என் தோளில் யார் கைவைத்திருந்தாலும் என் பாதுகாவலன் முத்துராமலிங்க தேவர் அவனை சும்மா விட்டிருக்க மாட்டார்... என்று நேதாஜி சொன்னதாகவும்... ஹிட்லர் உடனே முத்துராமலிங்க தேவரை பற்றி நீண்ட நேரம் விசாரித்துவிட்டு... இதுபோல ஒரு பாதுகாவலன் எனக்கில்லையே... என வருந்தியதாகவும் நீண்டிருந்தது... அந்த செய்தி...

தங்கள் ஜாதியை சேர்ந்த தலைவரை தூக்கிப்பிடிப்பதாய் நினைத்து குப்பற தள்ளி இருந்தார் அந்த அன்பர்...

உங்களின் கற்பனை திறனை நான் மெச்சுகிறேன்... அதை கதை எழுதுவதில் காட்டுங்கள்..... உண்மைச்சம்பவங்களை திருத்திகாட்ட நினைக்காதீர்கள்.... நீங்கள் தூக்கி பிடித்துதான் முத்துராமலிங்க தேவர் அவர்களின் புகழ் உயர வேண்டும் என்ற அவசியமே இல்லை.....இப்படி திருத்தப்பட்ட செய்திகளின் மூலம் நிஜமான ஒரு தலைவனை பற்றிய மற்றனைத்த நிஜத்தகவல்களும் கூட சந்தேகக்கண்ணுடன் பார்க்கப்பட்டு, நகைச்சுவை ஆகி விடும்...

அன்புட்டுதேன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக